<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-773445988286347827</id><updated>2012-02-17T18:16:10.306+05:30</updated><category term='மீடியாஸ்'/><category term='ரீமேக்'/><category term='பதிவர் சதுரம்'/><category term='சிறுகதை'/><category term='புத்தகம்'/><category term='டக்ளஸ் டூன்ஸ்'/><category term='வருத்தம்'/><category term='சினிமாரசியல்'/><category term='கயாஸ் தியரி'/><category term='பதிவுலகம்'/><category term='எதிர்வினை.'/><category term='வரலாறு'/><category term='மொக்கை...'/><category term='தமிழன்'/><category term='கல்விக்கடன். Educational Loan'/><category term='Asal songs.'/><category term='கவிதைகள்..'/><category term='சமூகம்'/><category term='போட்டோ'/><category term='இந்தியா'/><category term='நிகழ்வுகள்'/><category term='நையாண்டி'/><category term='கத‌'/><category term='ஈழம்'/><category term='நகைச்சுவை...'/><category term='கறுப்பு தீபாவளி'/><category term='காதலி'/><category term='Mangatha Songs'/><category term='காதல்.'/><category term='கந்தசாமி.'/><category term='மொக்கை...கடலை'/><category term='கருத்ஸ்'/><category term='Video'/><category term='தமிழகம்'/><category term='அரசியல்'/><category term='எனக்கு பிடித்த இயக்குனர்கள்.....'/><category term='கவிதை முயற்சி'/><category term='சுயம் பிரம்மாஸ்மி'/><category term='உதவி'/><category term='பிரிச்சு மேய்தல்'/><category term='கடிதம்'/><category term='படித்ததில் பிடித்தது.....'/><category term='புதிர்.'/><category term='விஜய்'/><category term='சினிமா...'/><category term='கற்பனை'/><category term='கோபம்.'/><category term='காதல்.சிறுகதை'/><category term='Mechanical'/><category term='தீபாவளி'/><category term='உரையாடல் கலை இலக்கிய அமைப்பு'/><category term='எதிர் பதிவு.'/><category term='நினைவுகள்'/><category term='விமர்சனம்'/><category term='இழுத்து விட்டு வேடிக்கை பார்த்தல்'/><category term='மகளிர் தினம்...'/><category term='கமல்ஹாசன்'/><category term='சூரியனுக்கு டார்ச்சடித்தல்'/><category term='பேட்டி'/><category term='தொடர் பதிவு'/><category term='கவிதை எப்டி எழுதுறது..?'/><category term='பாடல் விமர்சனம்'/><category term='கவிதைகள்...'/><category term='சன்டிவி'/><category term='உயிருக்கு உத்தரவாதம் இல்லை.'/><category term='2012.'/><category term='ரிப்பிட்டேய்'/><category term='ராமராஜன்'/><category term='அணூபவம்'/><category term='நட்பு'/><category term='யுவன்'/><category term='வதந்தி'/><category term='அஞ்சலி'/><category term='தொகுப்புப்பதிவு'/><category term='கேப்டன்'/><category term='che-gu-vera'/><category term='போட்டி'/><category term='புனைவு'/><category term='மரணமொக்கை'/><category term='சொந்த கதை..'/><category term='மதுரை'/><category term='ஆனந்த விகடன்'/><category term='அணுபவம்'/><category term='Tamilnadu Fishermen'/><category term='கலைஞர் டிவி'/><category term='வாழ்த்து'/><category term='பாலிவுட்'/><category term='மகிழ்ச்சி..'/><category term='பொது..'/><category term='எக்ஸிஸ்ட்டென்ஸியலிஸம்'/><category term='குட்டிக்கதைகள்....'/><category term='பாடல்'/><category term='twitter'/><category term='பொழுது போகல'/><category term='எதிவினை.'/><category term='சிம்பு'/><category term='கொலவெறி.'/><category term='நோண்டி நொங்கு எடுத்தல்'/><title type='text'>★ ராஜூ ★</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>222</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-8898975281805004926</id><published>2012-01-23T10:28:00.002+05:30</published><updated>2012-01-23T10:31:52.812+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வருத்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்ஸ்'/><title type='text'>கோமாளிப் போராளிகள்!</title><content type='html'>போலியான கொண்டாடங்கள் முடிந்து, உண்மையான புது வருடம் தொடங்கி, ஒரு மாதம் ஆகப் போகின்றது. வருடப்பிறப்பா இல்லை ‘சாதாரண’ப் பொங்கல்தானா என்ற சர்ச்சையும் தற்காலிக விடிப்பெடுத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு புது வருடம் ஆரம்பிக்கும் போதும், தவறாமல் அதனுடன் சேர்ந்து ஆரம்பிப்பவை  'இன்கம்டாக்ஸ் இம்சைகள்'. நம்மாட்கள் போலி அக்ரிமெண்ட்களையும், போலி மெடிக்கல் பில்களையும் இலஞ்சம் கொடுத்து, இந்நேரம் சேகரிக்கத் தொடங்கியிருப்பார்கள்.அப்படிச் சேகரிப்போருள் பலர், அலுவலக் 'அவுட்லுக் மெயிலில்', அன்னா ஹசாரேவை ஆதரித்து மெயில் ஃபார்வெர்ட் செய்து், ஊழலுக்கெதிராக, 'மிஸ்டு கால்' கொடுக்கச் சொல்லி, மன்றாடும் கோமாளிப் போராளிகளும் அடங்குவர் .&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலக நண்பரொருவர் அன்னா ஹசாரேவின் அதி தீவிர ஆதரவாளர். அவரும் இம்மாதிரியான செயல்களில், மிக மும்முரமாக இருப்பதுதான் செம்ம காமெடி! பொறுக்க முடியாமல், அவரிடம் கேட்டே விட்டேன். அவர் சொன்ன பதிலென்ன தெரியுமா..? "யாரோ, ஆஸ்திரேலியப் பணக்காரராம்.அவர் இந்திய அரசாங்கத்துக்கு எவ்வளவோ கோடிகள் ஏழை மக்களுக்கென கொடுத்தாராம்; ஆனால், அதில் இன்று வரை ஒரு பைசா கூட இந்திய அரசு செலவழிக்கவே இல்லையாம். அப்பறம் நான் எதுக்கு அரசுக்கு வரி கட்டணும்..?! எனக்கு விருப்பமில்லை" என்றார். சுற்றிச் சுற்றி மறுபடியும் அதே பல்லவி! "சுவிஸ்ஸில் உறைந்து கிடக்கும் இந்தியக் கருப்புப் பணத்தை மீட்டு வந்து விட்டால், இருக்கும் 130 கோடி மக்களுக்கும் ஒரு இலட்சம் இனாமாகக் கொடுக்கலாம். தெரியுமோ!" என்றார். நான் பதிலுக்கு, "முயற்சியைக் கைவிட்றாதீங்க பாஸ்! முயன்றால், முடியாதது எதுவுமேயில்மை.." என்று ஆறுதல் கூறிவிட்டு வந்தேன். மனப்பால் குடிப்பவர்களுக்கு வேறென்ன பதில் சொல்ல முடியும்..?&lt;br /&gt;&lt;br /&gt;மெத்தபடித்தோர் உட்பட, தாம் என்ன செய்கிறோமென தெரிந்தே, இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதுதான் கடும் கண்டனத்துக்குரியது. சில மருத்துவர்களும் இவர்களுக்கு உடந்தை! "என்னிடம் தான் இந்த அன்பர் இவ்வளவு செலவு செய்து, மருத்துவம் பார்த்தார்" என்று தங்கள் அக்மார்க் கோழிக் கிறுக்கல் கையெழுத்தில் எழுதி, கூசாமல், 'ரெவின்யூ ஸ்டாம்ப்' மேல் கையெழுத்துப் போட்டுத் தருகிறார்கள். இலவசச் சேவையா இது..? என்றெல்லாம் அசட்டுத்தனமாகக் கேள்வி கேட்காதீர்கள். நீங்கள் கேட்கும்,  தொகைக்கு இரசீது எழுதித் தர, அந்தத் தொகையில் நான்கு அல்லது ஐந்து சதவீதம் கமிஷன். நாம் நேர்மையாக சம்பாதிக்கும் காசை, நமக்குச் சம்பந்தமில்லாத ஒருவன், உடல்வலிக்காமல் எங்கோ அமர்ந்திருப்பவன்  சாப்பிடலாம். ஆனால், நம்மை ஆளும் அரசுக்கு எக்காரணம் கொண்டும் பணம் சென்று விடக் கூடாது என்ற புரிதல்  எவ்வகையில் சரி..? என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் பால், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறும் போதெல்லாம், நம் இரத்த அழுத்தம் ஏறும். கோபம் வரும்! ஆனால், நம் வருமானத்திற்கேற்ற, சரியான வரி கட்ட மாட்டோம். கேட்டால், அரசு எனக்கு  செய்தது என்ற சப்பைக் கட்டு காரணங்கள். என்ன விதமான மனநிலை இது! தனிமனிதர்கள் செய்யும் ஒவ்வொரு தவறும், நாளை ஒட்டுமொத்த சமூகத்தையுமல்லவா பாதிக்கிறது. ஒன்றுக்கும் உதவாத அரசு என்றாலும், மக்கள் செலுத்தும் வரியை வைத்து, விலைவாசியை ஓரளவாவது கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும். அவ்வளவு ஏன்..? குறைந்த பட்சம், நம் வேலையைச் சரியாகச் செய்தோம் என்ற மனதிருப்தியாவது ஏற்படுமே!&lt;br /&gt;&lt;br /&gt;அரசு கொடுக்கும் இலவச (விலையில்லா) வேட்டி-சேலை போன்றவற்றை, வாங்கி நாற்பது, ஐம்பது ரூபாய்க்கு விற்பது, ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்கி, அதிக விலைக்கு விற்பது முதலிய 'பாமரத்தனமான ஊழல்களை'க் கண்டு பொங்குவோர்களும் இதே 'படித்தோர்' பட்டியலில் இருப்போர்தான். அவ்வளவு ஏன்..? ஹசாரே-வின் கோஷ்டியில் இருக்கும், கிரண் பேடி கூட இப்படியொரு சில்லறைத்தனமான ஊழலைச் (விமான 'பிஸ்னஸ்' வகுப்புப் பயணச் சீட்டுக்குப் பணம் வாங்கிக் கொண்டு,  'எகனாமிக்' வகுப்பில் சென்றது ) செய்ததற்காகத்தானே விமர்சிக்கப்பட்டார். அப்போதும், பெருவாரியான விமர்சனங்களை, பேடியை நோக்கி முன் வைத்ததும் இந்தக் கோமாளிப் போராளிகள்தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழலுக்காக உண்ணாவிரதமெல்லாம் இருக்க வேண்டாம்! அவரவர் துருத்தியை ஒழுங்காக ஊதினாலே போதும் என்பது என் துணிபு. ஊழலை எதிர்த்து, புரட்சி செய்யும் வேலைகளை எல்லாம்  கல்யாண் ஜுவல்லர்ஸ் முதலான, 'கண்ணியமான' நிறுவனங்கள், 'கனமான' பிரபு மாதிரியானவர்களை வைத்துச் செய்து கொள்வார்கள். மற்றபடி, மேற்குறிப்பிட்ட  கணவான்களைத் திருந்தவெல்லாம் சொல்லவில்லை. பிறகெப்படி நமக்குப் பொழுது போகும்..? எனக்கு இப்போதிருக்கும் கவலையெல்லாம், கணவான் என்ற சொல்லுக்கு, ரெண்டு சுழி 'ன'வா..இல்லை...மூனு சுழி 'ண' வா என்பதுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-8898975281805004926?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/8898975281805004926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=8898975281805004926' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/8898975281805004926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/8898975281805004926'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2012/01/blog-post_23.html' title='கோமாளிப் போராளிகள்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-2218736899613357355</id><published>2012-01-13T09:54:00.000+05:30</published><updated>2012-01-13T10:03:49.069+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலிவுட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரீமேக்'/><title type='text'>விஜய் as a நண்பன்!</title><content type='html'>தன் பிரம்மாண்டமான, எந்திரனுக்குப் பிறகு மிக ரிலாக்ஸாக ஒரு படம் செய்ய வேண்டுமென ஷங்கர் நினைத்திருக்கக் கூடும். அதனால்தான், தன்னுடைய வசீகரன், புகழேந்தி, சந்திர போஸ், சேதுபதிகளை விட்டுவிட்டு, பஞ்சவன், சேவற்கொடி,விருமாண்டி,பாசப்புகழ் என ’காமிக்ஸ்த்தனமான’ கதைகளைக் கொண்டு, களம் இறங்கியிருக்கிறார். 3 இடியட்ஸ் வலியுறுத்தும் மெசேஜூக்கு புதியவரல்ல ஷங்கர். ஏற்கனவே, பாய்ஸ் படத்தில், சுஜாதாவுடன் சேர்ந்து அதைத் தொட்டு சுட்டுக் கொண்டவர்தான்! ஆனால், இந்தப் படத்தில் சுஜாதாவுக்குப் பதிலாக மதன் கார்க்கி. ஆம்! சுஜாதாவுடன் கை கோர்த்த பின்,அவர்  முற்றிலும் இல்லாத,ஷங்கரின் முதல் படம் நண்பன். &lt;br /&gt;&lt;br /&gt;படம் எப்படியிருக்கிறது..? எனக் கேட்டால், ஒரு வேற்று மொழிப் படத்தை ,ஜெயம் ராஜாவும் SA ராஜ்குமாரும் சேர்ந்து ரீமேக்கினால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது. காட்சிக்குக் காட்சி அப்படியே! கரீனா, ஹெல்மெட் போட்டாளா..? இலியானாவுக்கு ஒரு ஹெல்மெட் ஆர்டர் செய். ’சைலன்ஸர்’ கேரக்டர் கோட் போட்டால், சத்யனுக்கும் ஒன்னு. பரமஹம்ஸா-வின் ’கேமரா டோன்’ உட்பட எல்லாமே, ஒரு ’வடக்கத்தி’ உணர்வைத் தருவது, ஆரம்பத்தில் கொஞ்சம் கடுப்படித்தாலும், திரைக்கதை சுவாரசியத்தில் பழகிப் போகிறது. பாடல்களைப் படமாக்கிவதில்  எப்பவுமே ஷங்கர்,ஸ்பெஷல். அவ்வகையில் பாடல்களில் மட்டும் ‘ஷங்கர்த்தனம்’ தெரிகிறது. ஹாரீஸ்தான் பாவம்.பின்னணி இசை,ம்ஹூம்!&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் மிகப் பெரிய பலமென்று, வசனங்களைச் சொல்லலாம். ஸ்பேஸில் பென்சில், Induction Motor – டுர்ர்ர்ர், நீல் ஆம்ஸ்ட்ராங்கின் ரெண்டாவுது கால் போன்ற ஃபார்வர்டு எஸ்ஸெம்மெஸ் வசனங்களைத் தவிர்த்து, நன்றாகவே இருக்கின்றது. வசனங்களை கார்க்கியும் ஷங்கரும் பங்கிட்டுக் கொண்டுள்ளனரென தெரிகிறது. ஷங்கரின் பாத்திரத் தேர்வுகள்,அருமை! &lt;br /&gt;3 இடியட்ஸில் நடித்தவர்களின் முகங்களுக்கு இணையாகத் தேடிப் பிடித்திருக்கின்றார். அதனாலோ என்னவோ,படத்தில்  ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம். இருந்தாலும் சத்யனும் சத்யராஜும் கலக்கியிருக்கிறார்கள். சத்யராஜ் தாண்டவமாடியிருக்கிறார். சிறு தயாரிப்பாளர்கள் அவரின் கதவை தைரியமாகத் தட்டலாம். பாவம்.டப்பிங் பேசும் போதுதான் ‘கஸ்தபட்டிருப்பார்’.சத்யன் ஆங்காங்கே, மிகையாகத் தோன்றினாலும் அசால்ட்டான நடிப்புக்காகப் பாரட்டலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இலியானா, இல்லவே இல்லண்ணா! விஜய் எப்படி இவரிடம், ’விட்டத்தின் மட்டம்’ படித்தாரென யோசனை வந்தது.காரணம், படிப்பதற்கான சிலபஸே சுத்தமாக இல்லை பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;காவலன் படம் வந்த போது, ஹீரோயிஸமே இல்லாத விஜய் படம் என அவருடைய ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். ஆனால், இதுதான் உண்மையில் ஹீரோயிஸம் இல்லாத ஹீரோ (விஜய்) படம்! நடிக்கவே தேவையில்லாமல், மிக கூலாக இருக்கும் கேரக்டர் என்பதாலோ என்னவோ, விஜய் கலக்கியிருக்கிறார். சச்சின் படத்தில் வரும் அதே, குறும்பான பார்வைக்காக பாராட்டலாம். ஜீவா, நடிப்பில் இப்பவே பின்னி எடுக்கிறார். அடுத்து மிஷ்கின் படமாம்! எதிர்பார்க்கலாம். ஸ்ரீகாந்த் Not Bad! அப்பாவிடம் கெஞ்சும் காட்சிகளுக்காக பாராட்டலாம். இவை தவிர ஸ்ரீகாந்தின் அப்பாவாக வரும் நவீன் என்பவர் நன்றாக நடித்திருந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;ஷங்கர் படம் என்பதால்தான். ஜீவாவின் கும்பத்தையும் , அக்காவையும் கருப்பாகக் காட்டியிருக்கின்றார். இந்த ஷங்கர் எப்பவுமே இப்படித்தான் என கொலைவெறியோடு குறியீடு தேடுவோருக்கு, ‘ஹிந்தியிலும் அப்படித்தான் இருந்தது பாஸ்’. &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் சரி! All is Well தான்! ஏதோ ஒன்று குறையுதே, அது என்ன..? என்று படம் நெடுக தேட வைக்கும் ஒரு விஷயம் இருந்து கொண்டே இருக்கிறது. இறுதிக் காட்சியில், சத்யன் உதிர்க்கும் ஒரே ஒரு வார்த்தையில் அந்தத் தேடல் முடிவுக்கு வருகிறது. அவ்வார்த்தை, ‘ஃபேமிலியஸ்தன்’. அது சுஜாதா!&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-2218736899613357355?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/2218736899613357355/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=2218736899613357355' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/2218736899613357355'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/2218736899613357355'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2012/01/as.html' title='விஜய் as a நண்பன்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-7728610842323754977</id><published>2012-01-04T15:58:00.000+05:30</published><updated>2012-01-04T16:35:58.249+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கற்பனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை...'/><title type='text'>சத்தியம் வாங்குடா சங்கி மங்கி!</title><content type='html'>தமிழகக் கட்சிகளின் வாரிசு வார்தான், இப்போதைய, அரசியல்  ஐபோனின்  Whatz app..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ஓவர் டூ பைலாபுரம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;”சத்தியம் வாங்குடா சங்கி மங்கி” என்ற ப்ரணவ மந்திரம்  அறையெங்கும் ஒலிக்க, திராவிட கட்சிகளில்லாமல் தியானம் மேற்கொண்டுள்ளார் பாவதாஸ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;”யெப்பா..யெப்பா” சத்தம் வந்த திசை நோக்கினால், சின்னத்தம்பி புகழ் பிரபுவைப் போல் ஓடி வருகிறார் பன்புமணி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;தியானம் கலைந்த பாவதாஸ், “கட்சியில இருந்துதான் மால் மருகனைத் தூக்கியாச்சே! பொறவு எதுக்கு இவன் பின்னங்கால் பொடனில அடிக்க ஓடி வர்றான்” என பொலம்பினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;”யெப்பா..போறப் போக்கப் பார்த்தா, நாம் 2016-லயும் ஆட்சியப் பிடிக்க முடியாது போல..” – பன்புமணி”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;“கவலைப் படாதய்யா…2016 இல்லைன்னா 2021! திரிஷா இல்லைன்னா திவ்யான்னு சும்மாவா சொல்லி வச்சாங்க..?” - பாவதாஸ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;”ம்க்கும்..அது ஒன்னுதான் குறைச்சல். நம்ம கட்சிக் காரவுகளே, நமக்கு ஓட்டுப் போட மாட்டாக போல” &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;“ஏன் ராசா அப்டி சொல்ற..நாமதான் குலசாமி மேலயும், அப்பனாத்தா மேலயும் சத்தியம் வாங்கச் சொல்லிருக்கோம்ல”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;”ஆமா..நாம சொல்லீட்டா எல்லாரும் கேட்ற மாதிரிதான். போன தடவை கூடதான் 49ஓ போடச் சொன்னீங்க.. நமக்கே ’ஓ’ போட்டது ஞாபகமில்லையா..? டாஸ்மாக் முன்னாடி போராட்டம்ன்னா, நம்மாளுக போதையப் போட்டுட்டுத்தான் போராட்டத்தையே போணி பண்றாய்ங்க..! சத்தியம்ன்னா மட்டும் சர்க்கரைப் பொங்கலாகிருமா..?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;”அப்டியெல்லாம் சொல்லப்புடாது! நீ போதிதருமனோட மறு உருவம். அவதாரம் பன்பமணி நீ”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;“விட்டா ஞானஸ்தானம் பண்ணிருவாரு போலயே..போன தடவை மாதிரி யாருக்காவது சால்வைப் போர்த்து கூட்டணி வச்சிருந்தா, நான் பாட்டுக்கு இராஜ்யசபால உட்கார்ந்துக்கிட்டு, கண்டன் அறிக்கைல கையெழுத்தாவது போட்டுட்டு இருந்திருப்பேன்! இப்போ, அதுக்கும் ஆப்பு வச்சிட்டாரே அப்பா!” – பன்புமணி பொலம்பிக்கொண்டே செல்ல, பின்னணியில், “எங்கே செல்லும் இந்தப் பாதை” பாடல் ஒலிக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது, மோரைக்குடி காட்டுப் பங்களா…&lt;br /&gt;&lt;br /&gt;”உண்ணா ஹசாரேவை எதிர்த்தும் ஊழலை எதிர்க்கலாம். போர்த்திக் கொண்டும் தூங்கலாம். தூங்கிக் கொண்டும் நடக்கலாம், கும்மியடித்துக் கொண்டும் குண்டலினி கற்கலாம்” – ’போர்த்தி கதம்பரம்’ ஏதோ ஒரு பத்திரிகைப் பேட்டிக்குப் பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;”எண்ட மோனே” என்று செண்டை மேளம் முழங்க, ப.கதம்பரத்தின் எண்ட்ரி!&lt;br /&gt;&lt;br /&gt;“பத்திரிகைகளெல்லாம் கேள்வி கேட்டா, பதில் சொல்லலக் கூடாது மகனே;புத்தாண்டு வாழ்த்துகள்தான் சொல்லணும்” போர்த்திக்கு, சின்சியராக அட்வைஸுகிறார் கதம்பரம்.&lt;br /&gt;&lt;br /&gt;”எல்லாத்தையும் பேசிட்டு, எனக்கு ஞாபக மறதி அதிகம்ன்னு எஸ்ஸாகிரணும். இல்லைன்னா, நான் அன்னிக்கு சொன்ன்தெல்லாம் தாப்புத்தான். மாப்பு கேட்டுக்கிறேன்னு புஸ்ஸாகிரணும்” அதிரி புதிரி அட்வைஸுகளைப் பொழிகிறார் கதம்பரப் பெருந்தகை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் அரசியல் இராஜதந்திரத்தைப் பார்த்து, வாய் மட்டுமன்றி. காது, மூக்கு, தொண்டயென அனைத்தும் அடைத்துப் போய் வியந்து பார்க்கிறார் போர்த்தி கதம்பரம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவருக்கும், கிச்சனில் ஸ்பெஷலாக, கீழாநெல்லி சூப் தயாராகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;நெக்ஸ்ட் பயாஸ்கோப் கார்டன்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;“ஏகப்பட்ட வாரிசு இருக்குறவங்கள்ளாம் நிம்மதியா இருக்காங்க. ஒரே ஒரு தோழிய, பக்கத்துல வச்சுக்கிட்டு நாம் படுற அவஸ்தை இருக்கே..அய்ய்யோய்ய்யோ…” என்று பாஸ் படத்தின், ஃபார்வர்ட் எஸ்ஸெம்மெஸ் ரேஞ்சில் புலம்பிக் கொண்டிருக்கிறார் பயலலிதா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;”எம்ஜிஆர் யார்..?” கழக நாளேட்டிலிருந்து போன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;”இன்னிக்கு யார் யாருக்கெல்லாம் கல்தான்னு கேட்குறாங்கம்மா..அச்சுக்குப் போகுதாம்மா!” – வெந்நீர் செல்வம் கேட்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;”ஓ! இங்க டேபிள்ல குலுக்கிப் போட்ருக்குற சீட்ல இருந்து ரெண்டு,மூனு சீட்டு உங்க இஷடம் போல எடுங்களேன்” – பயலலிதா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;மிகச் சரியாக, 160 டிகிரிக்கு சற்றும் குறையாமல் குனிந்து, பவ்யமாக சீட்டெடுத்துப் படிக்கிறார் வெந்நீர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;சீட்டில் வந்த பெயரைப் பார்த்து விட்டு, “யெம்மா, இவரு சகிக்கலா வோட, அண்ணன் மனைவிக்கு ஒன்னு விட்ட அத்தைக்கு பெரியப்பாவோட சம்பந்தியோட மச்சினன் மகனோட சகலை  தங்கச்சியோட மாமியாரோட அண்ணன் மகனுக்குப் பொண்ணு கொடுத்தவர்ம்மா” என்று மூச்சிரைத்து டயர்டாகிறார் .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;அடுத்தது என்ன..? ஒறவுமுறையைக் கேட்டுக் கொண்டிருந்த யெம்மாவுக்கு, பலாப்பழ ஜூஸ்தான்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 51, 51);"&gt;சீட்டில், அடுத்து வந்தவரின் பெயரை வெந்நீர் வாசிக்க, ’கொக்கரக்கோ குமாங்குத்து’ ஸ்டார்ட்ஸ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆடுதுறையில், அடுத்த ஆட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள்ளாம் சும்மாவா..? ஆக்கிப்புடுவோம் அம்மாவா..! கொலவெறிக் கூத்து கட்டுகிறார் கரடியார். உடன் கம்புவும்.&lt;br /&gt;&lt;br /&gt;”என்னடா பெரிய அரசியல் கேம்மு…கம்புதாண்டா அடுத்த சிஎம்மு” - அர்ச்சனை ஆரம்பம்.&lt;br /&gt;அந்த முன்னேற்றக் கழகமா..! இல்லை இந்த முன்னேற்றக் கழகமா..! எந்த முன்னேற்றக் கழகம்..? நீ…..ண்ட யோசனையில் ஆழ்ந்து, தன் கட்சியின் பெயரை நினைவுக்குக் கொண்டு வர, முயற்சிக்கிறது கரடியார் &amp;amp; கோ.&lt;br /&gt;&lt;br /&gt;”யெப்பா..கட்சிப் பேரு என்னாவா இருந்தா என்னாப்பா..மும்பைல இருந்து மல்லிகாவக் கூப்ட்டு, மகளிர் அணித் தலைவியா ஆக்கீருவோம். மந்த்ரா பேடிதான்ப்பா நம்ம ஜாடிக்கேத்த மூடி. பத்தலைன்னா சொல்லுங்க, செம்ம ரிச்’சா, ரிச்சாவப் புடிச்சுரலாம். என்ன சொல்றீங்க..?” – கம்பு ’ஓட்டு’ வாங்க சூத்திரம் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஆணியே புடுங்க வேணாம்..அர்ஜண்ட்டா வெளிய போகணும்”ன்னு சொல்லி, ஆட்டைக் கலைக்கிறது கரடியாரின் ‘எஞ்சிய திராவிட முன்னேற்றக் கழகம்”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-7728610842323754977?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/7728610842323754977/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=7728610842323754977' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/7728610842323754977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/7728610842323754977'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2012/01/blog-post_04.html' title='சத்தியம் வாங்குடா சங்கி மங்கி!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-5490457028182233660</id><published>2012-01-02T11:45:00.000+05:30</published><updated>2012-01-02T11:49:59.946+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிருக்கு உத்தரவாதம் இல்லை.'/><title type='text'>என்ன எழவுடா இது..?</title><content type='html'>தமிழகத்தில், போடா/டி வெங்காயப் பச்சடி என திட்டும் கலாச்சாரமொன்று பரவலாகி வருவதை நாம் ( இப்படி எழுதினால்தான் ஒரு புரஃபொஷனல் 'லுக்' வருமாம்! ).  பகுத்தறிவு வாதிகள் யோசித்துப் பார்த்தால், இது பெரியாரின் நீட்சி என்று சுலபமாகப் புரிந்து விடும். அந்தளவில் மக்கள் பெரியாரை மறக்காமல் இருப்பது சந்தோசமே! பெரியாரைப் பற்றிப் பேசுகையில், மற்றொன்றையும் தெளிவு படுத்த விழைகிறேன்..மன்னிக்க..விழைகிறோம். சமீப ஆனந்த விகடொன்றில், ஒரு பிரபலம், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியது பெரியார்தானென ஒரே போடாக போட்டார். சன் நியூஸ் உள்ளிட்ட அலைவரிசைகளிலும் அணையை, முல்லைப் 'பெரியார்' என்றே விளிக்கின்றனர். 'சன் குரூப்'பின் புகழ் 'மிஷன் இம்பாசிபிள்' வரை சென்றுவிட்டதால் அவர்களை நாம் குறை கூற முடியாது. காரணம் ஏழை சொல் அம்பலத்தில் மட்டுமல்ல; ஹாலிவுட்டிலும் கூட ஏறாது. அணையைக் கட்டியது பெரியாரல்ல...பென்னி குயிக் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..? "எனக்கே", அய்யா.ஜாக்கி சேகர் அவர்கள், பென்னி குயிக் என்பவரைப் பற்றி, மண்டையில் உறைக்கும்படி கட்டுரை எழுதியபிறகுதான் தெரியும். தவிர, குயிக் பற்றிய புகழ் ஆவணப் படம் வரை வளர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது . எம் போன்ற, கஞ்சிக்குச் செத்தோரின் பாக்கெட்டில் பைசா இல்லாவிடினும், பாத்ரூமில் பக்கெட்டும்,மனதும் இருக்கிறது. பக்கெட்டைக் கொடுத்தால், என் ரூம்மேட்கள் குமுறிவிடுவர். ஆதலால், மனமாற வாழ்த்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பென்னி குயிக், இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லணையைப் பிரதியெடுத்துத்தான், பெரியாற்று அணையைக் கட்டினாராம். கல்லணையே கல்லாக இருக்கும் போது. இவ்வணைக்கு மட்டும் என்ன கேடு வருமென, சேட்டன்கள் பயப்படுகிறாரென்று தெரியவில்லை. சேட்டன்கள் என்றதும் ஷகிலாவையும் ஷர்மிலியையும் அடுத்து, மம்மூக்காவும் லாலேட்டனும் நினைவுக்கு வருகின்றனர். நினைவு தெரிந்து, மம்மூட்டியை 'எதிரும் புதிரும்' படத்தில்தான் முதன் முதலில் பார்த்த ஞாபகம். ரமணி இய்க்கியிருந்தார். இந்த ரமணிதான் பின்னாளில் தரணியென அறியப்பட்டார். இவர்தான் விஜய்க்கு ஒரு குருவியையும், சிம்புவுக்கு ஒரு குஞ்சாங்குருவியையும் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தகுந்த குறிப்பு. அக் குஞ்சாங்குருவியான, 'ஒஸ்தி'யைப் பார்த்து விட்டு, நாம் உதிர்த்த ஒரு (ஒரே) வரி விமர்சனம் "ங்கொய்யால‌...படமாடா இது!" என்பதுதான். அதைக் கேட்ட நாதாரியொருவர்..மன்னிக்க நண்பரொருவர், "என்னா மாமா, ஊரப்பக்கம் போனாலும் நம்மூரு பாஷையைச் சரியா பேசுற" என்றார். நாம்  வியந்தோம். ஒரே ஒரு வர்த்தையை மட்டுமே வைத்து, ஒருவரின் சொந்த/வாழ்ந்த/இருந்த ஊரைக் கண்டிபிடிக்கும் தமிழன்தான் எவ்வளவு உயர்ந்தவன்!&lt;br /&gt;&lt;br /&gt;ந்ந்ந்ந்ந...ண்பர் கூறியபிறகுதான், ஊர்ப்புறங்களில் குவிந்து கிடக்கும், "ங்கொய்யால"  போன்ற கலைச் சொற்களின் லிங்க வடிவம் என்னவாக இருக்குமென்ற யோசனையில் ஆழ்ந்தோம். ஆய்வின் பொருட்டு, சிற்சில அபிமானிகளிடம் கேட்ட போது, ஒரு பேமானி, "வார்த்தைகளில் நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தையென்று எதுவுமேயில்லை; சந்தர்ப்பம் பொறுத்துதான், வார்த்தைகள் நல்லதாகவோ, கெட்டதாகவோ அர்த்தம் பொதிகின்றன" என்றார். 'சிக்குச்சுடா சிறுத்தை' என்றெண்ணி, வேறு சில கேள்விகளைக் கேட்க, டரியலாகிப் போனார் மனிதர். ஆம் டரியல்! வடிவேலு நமக்கு வழங்கியவற்றுள் மிக அற்புதமானதொரு கலைச்சொல். இச்சொல்லைப் போல, எனக்கு மிகப் பிடித்த மற்றொரு சொல் ஒன்று உண்டு. யங்,மங்,ஜங்!&lt;br /&gt;&lt;br /&gt;யங்,மங்,ஜங். உச்சரித்துப் பாருங்களேன். மறுபடியும் உச்சரித்து உச்சரித்துப் பார்த்தால், ஒரு குதூகல மன நிலை வாய்க்கும். எஸ்.ரா-வின் 'புர்ரா' என்றொரு சிறுகதையில் வரும், சுகு என்ற சிறுமி இப்படித்தான். வாய்க்கு வந்த ஏதாவது ஒரு வார்த்தையை மந்திரம் போல சொல்லிக் கொண்டேயிருப்பாள். எல்லா மனிதர்களுமே தனியறையில், ஒரு கண்ணாடி முன் நிற்கும் போது பைத்தியக் காரர்கள்தான் என்ற நிதர்சனத்தைப் போகிற போக்கில், அந்தக் கதையில் சொல்லிச் சென்றிருப்பார் எஸ்.ரா. கிட்டத்தட்ட 'ஜென்' தத்துவமும் இதைத்தான் சொல்கிறதென, நாம் தட்டச்சிக் கொண்டிருப்பதை, அருகில் அமர்ந்து் படித்துக் கொண்டிருக்கும் நண்பரும் சொல்கிறார். ஜென் என்றதும் உங்களுக்கு மாருதி ஜென் ஞாபகம் வருகிறதோ இல்லையோ, நினைவுக்குள் நிச்சயம் போதிதர்மன் வந்து டீ விற்றுக் கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;போதிதர்மன் அல்லது போதிதருமர்! 'சுருதிகாசன்' அம்மையார் அவர்களால் கண்டறியப்பட்ட ஒரு உன்னத கதாபாத்திரம் அல்லது மனிதர். போதிதர்மனைப் பற்றி, ஏதாவதொரு சேனலில் இரவு 10 மணிக்கு மேல் பேசுவார்கள். கேட்டுக் கொள்ளுங்கள். நாம் இப்போது சுருதிகாசனைப் பற்றிப் பேசலாம். சுருதி, தமிழ் பேசும் அழகைக் கேட்பதற்கு பதிலாக நன்றாகக் காய்ச்சிய கடப்பாரையை காதுக்குள் விட்டுக் கொள்ளலாம்.  அதுவும் சுருதி, 'வாயிலேயே கொடுப்பேன்' என்று விடும் கும்மாங்குத்து அந்த ஜெர்மனிக்காரத் தமிழனுக்கு மட்டுமல்ல, தமிழுக்கும்தான்! சரி..சரி.முடிந்த கதையை ஏன் சீவி முடித்துச் சிங்காரிப்பானேன்! அம்மணி தற்போது கொலவெறியுடன் இரண்டாவதாக ‘நடித்து’க் கொன்றுகொண்டிருக்கும் படம் மூன்று. எத்தனை பேருக்கு, தன்னுடைய இரண்டாவது படம் மூன்றாக அமைவதற்கு வாய்ப்பு கிட்டும்! இதற்கு முன் அனுஷ்காவுக்கு, முதல் படமே ’இரண்டாக’ இருந்தது நினைவிருக்கலாம். அனுஷ்காவின் காப்பிரைட் முழுவதும் கார்க்கியிடம் இருப்பதால், நாம் அனுஷ்காவைப் பற்றியோ பற்றாமலோ பேச முடியாது. ஆனால், இதயதெய்வம் கார்க்கியைப் பற்றிப் பேசலாம்.  அவர் டுவிட்டரில் ஏதோ ஒண்ணாம் ரேங்க் வாங்கியிருக்கிறாராம். அவருக்கு வாக்களித்த, தமிழ் டுவிட்டர்களுக்கு வாழ்த்துகள்!&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க!&lt;br /&gt;&lt;br /&gt;தட்டச்சி, வாசித்து முடித்தவுடன், நம‌க்கு எழுந்த உணர்வுதான் இப் பதிவின் தலைப்பு! புத்தாண்டில், இந்த அதி தீவிர உக்கிர மொக்கையுடன் வலையுலகப் பயணத்தைத் தொடர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமர்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-5490457028182233660?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/5490457028182233660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=5490457028182233660' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/5490457028182233660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/5490457028182233660'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2012/01/blog-post.html' title='என்ன எழவுடா இது..?'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-4985397804375816039</id><published>2011-12-30T14:10:00.005+05:30</published><updated>2011-12-30T14:16:13.873+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகிழ்ச்சி..'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2012.'/><title type='text'>Loading 2012 ____________________99%.</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;மாற்றம் தேடியே, தினம் ஒரு நேற்றைத் தோற்கிறோம். – மதன் கார்க்கி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இப்போதுதான், தேதியெழுதும் போது 2010 ஐ அடித்து, 2011 என எழுதுவது பழக்கமானது போல் இருக்கிறது. பழகிப் புளிப்பதற்குள்ளாகவே, காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டு வந்து, காலிங் பெல்லடிக்கிறது 2012. இனி அதற்குப் பழக வேண்டும். பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் நீர்த்துப் போனாலும், புத்தாண்டு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலாக இருப்பது உண்மை. ஒவ்வொரு புத்தாண்டையும் , வாழ்க்கைக்கான அல்லது வயதிற்கானதொரு ’மைல் கல்’லாக எல்லாரும் நினைப்பது காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2011-ஐ அடையாளக் கல்லாக நட்டு வைக்க முடியாதெனினும், ஓரளவிற்கு முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான ஆண்டாகவே இருந்திருக்கிறது எனக்கு. வருட இறுதியில், தொடங்கிய சில  வாழ்வியல் தேவைக்கான வேலைகள், புது வருடத்திற்குள் உந்தித் தள்ளுகின்றன. தேவைகளும்,தோல்விகளும் அலுக்கச் செய்தாலும்,&lt;br /&gt;&lt;br /&gt;பீரூத்தி வளர்த்த நட்பு மச்சி,&lt;br /&gt;நம்மது, துருவேதும் ஏறாது !&lt;br /&gt;&lt;br /&gt;ஊறுகாயத் தொட்டுத் தொட்டு&lt;br /&gt;வளர்ந்த புட்டிப்&lt;br /&gt;பாரம்பரியம் மச்சி இது&lt;br /&gt;மாறவே மாறாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபிகரில்லாத ஃப்ரெண்டுக்கு&lt;br /&gt;நண்பன்தாண்டா எல்லாம்.&lt;br /&gt;புது வருஷத்தப் புட்டியோட&lt;br /&gt;கொண்டாடுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;மாயன் காலண்டரால&lt;br /&gt;உலகமே அழிஞ்சு போனாலும்&lt;br /&gt;மறக்காம,&lt;br /&gt;சரக்கு வாங்கி வச்சிரு மச்சி&lt;br /&gt;சாயங்காலம் வந்துருவேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று ’எஸ்ஸெம்மெஸ்’  அனுப்பும் நண்பர்கள், வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறார்கள். இப்போது, வாழ்த்துகள் சொல்வது, வெற்றுச் சம்பிரதாயமாக மாறி விட்டது. (மொபைல் சர்வீஸ்கள், பண்டிகைக்கால குறுதகவல்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதால் இருக்கலாமோ!). இருந்தாலும்,சகபக்கிகள் அனைவருக்கும் “இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்”. (Blogger இலவசம்தானே!). இன்புற்றிரு வையகமே!&lt;br /&gt;&lt;br /&gt;However, have to move on baby.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-4985397804375816039?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/4985397804375816039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=4985397804375816039' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/4985397804375816039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/4985397804375816039'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/12/loading-2012-99.html' title='Loading 2012 ____________________99%.'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-6645396098037425236</id><published>2011-12-21T12:40:00.000+05:30</published><updated>2011-12-21T15:49:57.240+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொகுப்புப்பதிவு'/><title type='text'>சாத்தானின் குழந்தைகள்!</title><content type='html'>நண்பர்களுக்கு எப்படியாவது தினமும் ஓடி அடைந்து விடுகின்றது. அவர்களின் உபயத்தால், ஊரிலிருந்த நாட்களில் அனேக முறை டாஸ்மாக் ’பார்’களில் (அரசு அனுமதி பெற்றவை) அமர்ந்து ‘சைடிஷ்’ கொறிக்கும் வாய்ப்பு கிட்டியது.அப்படி ஒருமுறை அமர்ந்திருந்த போதுதான், நண்பரின் நண்பர் சொன்னார், "மாப்ள, இந்த சசிக்கலா சரக்கு சகிக்கலடா".&lt;br /&gt;சசிக்கலா சரக்கா...? என அதிர்வோர், டாஸ்மாக்கிற்கு சரக்கு தயாரித்துத் தரும் கம்பெனி, சசிக்கலாவினுடையது என்பதால் இந்தப் பெயரென்பதை அறிக.&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்குப் பதிலாத்தான் அம்மா வெளிநாட்டுச் சரக்கு பார் (எலைட்) தொறக்குதே" - இது மற்றொரு நண்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்ணே, இந்த லோக்கல் குவார்ட்டர் வாங்குறதுக்கே, உங்க டப்பா டான்ஸாடுது. இதுல ஃபாரின் சரக்கு வேறயா..?"  - இது நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அட போய்யா..பாவம் அந்தம்மாதான் டெய்லி, ஜெயா டிவில வந்து, சுவிஷேசக் கூட்டத்துல கூவுற மாதிரி, 'மக்கள நம்பித்தான் நான் இருக்கேன்.. நீங்கதான் காப்பத்தணும்' ன்னு கூப்பாடி போடுது. பாவமில்லையா..?! அதுக்குத்தான்யா.. நம்ம அதிக காசு கொடுத்து வெளி நாட்டுச் சரக்கு வாங்கிக் குடிச்சா கவ்ர்ன்மென்ட்டுக்கு லாபம்தான..? " என்றவர், 'மதுரையில எப்ப தம்பி 'எலைட்டு' தொறக்குறாய்ங்கே' என கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான குடிமக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் போஸ்டர்களில் எழுதினார்கள். பின்பு ஃபிளக்ஸ் பேனர்களில் பறைசாற்றினார்கள். இப்போது, டூவிலர் ஸ்டிக்கரிங் வரை வந்து விட்டது சாதிப்பெருமை பேசுத‌ல். ஆம்! தமிழ் நாட்டுச் சாலைகளில் ஓடும் பெரும்பாலான வண்டிகளில் வாள், கேடயம் முதலியவற்றுடன் பலவிதமான‌ சாதிப் பெயர்களையும், அச் சாதித் தலைவரின் படங்களையும் காண முடிகின்றது. பெரும்பாலும், அமைப்பு சார் இயக்கங்களும், கட்சிகளும் அரசியல் ஆதாயங்களுக்காக சாதிப் பெருமை பேசுதலை நான் கண்டுகொள்வதில்லை. அது தேவையுமில்லை. ஆனால், இப்போது தனிமனிதர்களும் இவ்வகையான காரியங்களைச் செய்வது வருத்தமளிக்கிறது. உன் பெற்றோரையே நீ தீர்மானிக்க முடியாது என்ற நிதர்சனம் இருக்கையில், தீர்மானிக்கப் படாத ஒரு சாதியில் பிறந்ததற்காக இவர்கள் எப்படிப் பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள் என்பதுதான் சுத்தமாக விளங்க மறுக்கின்றது.தமிழ் நாட்டில் சாதியை ஒழிக்கத்தான் முடியாது. ஒளித்தாவது வைக்கலாமே!!&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்களையும், கடையடைப்புகளையும் காண நேரிட்டது. முல்லைப் பெரியாற்றுப் பிரச்சனைதான்! உணர்ச்சி மேலீட்டால், அவர்களை இவர்கள் தாக்குவதும், இவர்களை அவர்கள் தாக்குவதும் இந்தியனாக உணரும் ஒவ்வொருவரும் வெட்கப் பட வேண்டியதொரு செயல். 'எல்லாமும் ஒரு மாநிலத்தவர்க்கே' என்ற தாக்கரேத் தனம் மேலோங்கி விட்டால், இந்தியா என்ற பெயருக்கே அர்த்தமின்றிப் போய் விடும். இப்போது, கேரளத்தில் தமிழக வண்டிகள் அனுமதிக்கப் படுவது முதலாக வரும் தகவல்கள் கொஞ்சம் ஆறுதல் அளிக்கின்றன. முன்னாள் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு என்ன செய்யப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்க்கலாம். அதன் பிறகான நீதிமன்றத் தீர்ப்பையாவது கேரளம் மதிக்குமா..? என்பது இந்திய இறையாண்மைக்குத்தான் வெளிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்குச் சென்றிருந்தப் போது, ஏரியாச் சிறுவர்களுடன் விளையாடும் வாய்ப்பு, 'தமிழ் நாடு மின் வாரிய'ப் புண்ணியத்தில் கிட்டியது. பம்பரக்கட்டை முதலான விளையாட்டுகள் இன்னமும் எங்களூர்ப் பகுதிகளில் விளையாடப்படுவது குறித்துச் சிறிய பெருமிதம். அப்படியாக ஒரு நாள் பக்கத்து வீட்டுச் சிறுவன் ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தேன். மூன்றாம் வகுப்புப் படிப்பவனவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா..ஸ்கூலுக்குப் போகலையா..?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லியே..இன்னிக்கி லீவு."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ! உங்க ஸ்கூல்ல எத்தன பேருடா படிக்கிறீங்க..?"&lt;br /&gt;&lt;br /&gt;" நானு, என் பிரெண்ட்ஸ்ஸூ,  அப்பறம் கொஞ்சம் சாத்தான் குழந்தைங்க படிக்கிறோம்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாத்தான் குழந்தைகளா..? விசாரித்துப் பார்க்கையில், அவன் படிக்கும் பள்ளி சார்ந்த "மதத்தில்" இல்லாதோரைத்தான் அவன், அப்படிச் சொல்கிறான் எனப் புரிந்தது. இதை அவனுக்கு, அவனது வகுப்பாசிரியரே சொல்லிக் கொடுத்துள்ளார் என்பதுதான் வெட்கக் கேடானது. பிஞ்சு மனங்களில் நஞ்சைக் கலக்கக் கிஞ்சித்தும் கவலை கொள்ளா, இம்மாதிரியான ஆசிரியர்கள் இருந்தென்ன லாபம்..?! அந்த சாத்தான் குழந்தைகள் இருப்பது/படிப்பது பிடிக்கவில்லையென்றால், தாராளமாக தற்கொலை செய்து கொள்ளலாம். தடுப்பாரில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடடா... ஆரம்பிச்சதிலேர்ந்து ரொம்ப சீரியஸாவே பேசிட்டிருக்கேன்ல...மன்னிச்சூ! ஒரு வேகத்துல வந்துருச்சு. எல்லாருக்கும் "கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்".Cool!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-6645396098037425236?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/6645396098037425236/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=6645396098037425236' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6645396098037425236'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6645396098037425236'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/12/blog-post.html' title='சாத்தானின் குழந்தைகள்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-8840047927408970987</id><published>2011-11-28T10:42:00.000+05:30</published><updated>2011-11-28T10:51:56.642+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>மயக்கம் என்ன - எதுவுமே தப்பில்ல மச்சி!</title><content type='html'>'பெண்ணின் காதல், அன்பு சார்ந்தது; ஆணின் காதல் காமம் சார்ந்தது' என்ற அபத்தமான கருத்து பொதுபுத்தியிலும் பெரும்பாலான பெண்புத்தியிலும் நிலவுகிறது. அதை உடைத்தெறிந்த செல்வராகவனுக்கு ஒரு விசிலடித்து விட்டுத் தொடரலாம். ('ஆணின் காதல், கை ரேகை; பெண்ணின் காதல், கைக்குட்டை' என்பதும் பெரும் அபத்தம்தான்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்கு காதல் எத்தனை முறை வரலாம்..? என்ற கேள்விக்கு' n முறைகள்' வரலாம் என்பது பதில். காதலென்பது காமத்தின் பரிணாம வளர்ச்சிதான் என்பது என் புரிதல். ஆக, காமம் எப்படி யார் மீதும், எத்தனை முறையும் வருகின்றதோ அதைப் போலத்தான் காதலும். சமூகத்தின் மீதான பயம் கருதி, அதை மட்டுப் படுத்தி வைக்கலாம். சுத்தமாக தவிர்த்து  விடவே முடியாது. எல்லாக் காதல்களும் சர்வ நிச்சயமாக  'விண்ணை நோண்டி வருவாயா' டைப் காதல்கள் கிடையாது. ஒரு பெண்ணைப் பார்த்தவுடன், 'செம்மயா இருக்கா மச்சி' என்ற சிறு காமத்துடன் தொடங்கும் காதல்கள்தான் அதிகம். மனிதன் உள்ளே நினைப்பவை எல்லாவற்றையும் சொல்லி விட, காட்டி விட முடியாது. அதைத்தான் 'காதல் கொண்டேன்'  தொடங்கி, தன் படங்களில் செல்வா காட்சிப்படுத்தி வருகிறார். மயக்கம் என்ன-வும் அதற்கு விதிவிலக்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தன் படைப்பு திருட்டுப் போவதில் ஆரம்பிக்கும் மனச்சிதைவு, எள்ளல்,சபலம், கோபம், குற்றவுணர்வு, காமம்  என சகலத்தையும் அச்சுப் பிசகாமல் முகத்தில் கொண்டு வருகிறார் தனுஷ்.  துள்ளுவதே இளமையில், இராணுவ உடை தரித்து வரும் குழந்தையா இது..? என ஆச்சர்யப் பட வைக்கிறார். செல்வா, தன் படங்களுக்கு வேறு யாரையும் தேடவே வேண்டாம். தனுஷூடனேயே செல்லலாம்.  குறிப்பாக, இடைவேளைக்கு முந்திய காட்சி. ரிச்சாவுடனான முத்தத்தைக் கலைக்கும், தன் நண்பனின் அழைப்பு. நிலை புரிந்து, தனுஷ், தன் முகத்தில்  காட்டும் குற்றவுணர்ச்சி ஒன்று போதும். மேலும் பல காட்சிகள். இறுதிக் காட்சியில், த‌னுஷ் காட்டும் ஏளனம் கலந்த கர்வம் என கலக்ங்கடிக்கிறார். தனுஷின் தேசிய விருதுக்குப் பிறகு, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம் 'மயக்கம் என்ன'.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் இரண்டாம் நயகன் ராம்ஜி. ப‌டமே, தன் கலை சார்ந்த படம் என்பதால் இழைத்திருக்கிறார் மனிதர். ஒவ்வொரு ஷாட்டும் லைட்டிங்கும் அபாரம். பருத்திவீரனில் அவர் காட்டிய கிராமம்  போன்று, இதிலும் ஒவ்வொரு ஃபிரேமும் அழகு. 'அட்றா அவளை' பாடல் படமாக்கப் பட்ட விதம் அருமையோ அருமை.  ரவி கே. சந்திரன், சந்தோஷ்சிவன் போன்றோர் அடைந்த புகழும் பெயரும் ராம்ஜிக்குக் கிடைக்காததில் பெரிய வருத்தம் எனக்கு உண்டு. வாழ்த்துகள் ஜி.&lt;br /&gt;&lt;br /&gt;ரிச்சா. கொஞ்சம் பெரிய உதடுகள் இருந்தால் செல்வாவின் படங்களில் நாயகியாகி விடலாம் போல. ஆனாலும், சும்மா சொல்லக் கூடாது, தனுஷுக்குச் ஈடு கொடுத்திருக்கின்றார். தன் கரு சிதைந்த இரத்தத்தை, துடைக்கும் காட்சியில் காட்டும் கோபமும் இயலாமையும், வெடித்து அழுகையாக மாறும் இடத்திற்கு அப்லாஸ். ஆனால், அது அழுகையான பின், கையால் முத்தில் அறைந்து கொள்வதெல்லாம் மிகை. சலனமேயில்லாத நடிப்புக்கு ஒரு சபாஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.வி.பி. ஒரு இசையமைப்பாளனுக்கு படத்தின், எவ்விடத்தில் மௌனமாக இருக்க வேண்டுமென்று தெரிய வேண்டுமென்று சிலபல 'அப்பாடக்கர்' இசையமைப்பாளர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அவ்வகையில் பார்த்தால், ஜி.வி.பி நல்ல இசையமைப்பாளரே! திரையரங்கில், நண்பர்கள் கழுவி கழுவி ஊற்றியதெல்லாம் தெள்ளத் தெளிவாகக் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் தெய்வீகமானது, புனிதமானது. நாயர் கடை டீ-யை விட சுத்தமானது. போன்ற தத்துவக் கோட்பாடுகள் கொண்ட அன்பர்கள் படத்தைப் பார்க்கமல் தவிர்ப்பது நல்லது. (படத்திற்குத்தான்). சீஸன் என்பதால், சபரி மலை பக்தர்களும் தவிர்த்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் பெருங்குறை , அட்மாஸ்ஃபியருக்கு வரும் பாத்திரங்கள் முதற்கொண்டு எல்லாருமே இன்டலக்சுவலாக இருக்கிறார்கள் என்பதுதான். செல்வாவின், கிளிஷேக்கள் மிக அதிகம். ஆங்காங்கே வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் கொடுமை. எனக்கு மிகப் பிடித்த, 'என்னென்ன செய்தோம் இறைவா' பாடல் 'இல்லாதிருப்பது' ம் குறைதான்!&lt;br /&gt;&lt;br /&gt;முடிவாக, 'மயக்கம் என்ன' பார்த்த அனுபவம், மனித உணர்வுகளை மிக நுட்பமாக வடித்த, ஒரு சிறுகதைத் தொகுப்பை வாசித்ததைப் போல இருந்தது. மேலும் இந்தப் படத்தை, 'செல்வா, தமிழில் எடுத்திருக்க வேண்டாம்' என தோன்றியதும் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-8840047927408970987?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/8840047927408970987/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=8840047927408970987' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/8840047927408970987'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/8840047927408970987'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/11/blog-post_28.html' title='மயக்கம் என்ன - எதுவுமே தப்பில்ல மச்சி!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-8570297574006986591</id><published>2011-11-21T12:13:00.000+05:30</published><updated>2011-11-21T12:18:03.882+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணூபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயம் பிரம்மாஸ்மி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை...'/><title type='text'>சேகர் செத்துட்டான்!</title><content type='html'>"அலோ..ராஜூ!"&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்கம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா..ஒரே சத்தம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"தேட்டர்ல இருக்கேன்மா..கொஞ்ச நேரம் கழிச்சு கூப்டறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணி நேரத்திற்குப் பின்..&lt;br /&gt;&lt;br /&gt;"ம்மா..ராஜூ பேசுறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்..சொல்டா.. நல்லாருக்கியா"&lt;br /&gt;&lt;br /&gt;" நான் நல்லாருக்கேன்!"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா, படத்துக்குப் போயிருந்தியாக்கும். என்னா படம்..?"&lt;br /&gt;&lt;br /&gt;"அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டின் டின்"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்டின்னா...? யார் ஈரோ..?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது இங்கிலீஸ் படம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கிலீஸ் படமா..? இங்கிலீஸ் படமெல்லாம் ஏன் நீ பார்க்குற..? பக்கத்துல ஆள் இல்லன்னதும் இந்த மாதிரி வேலையெல்லாம் ஆரம்பிச்சிட்டியா..? அடிக்க ஆளில்லாமத் திரியிற நீயி. ஊருக்கு வருவேல்ல...வா..! இங்கிலீஸ் படமெல்லாம் பார்க்கக் கூடாதுடா. தப்புடா"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்மா..அது கார்ர்ட்டூன் படம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பிடின்னா..?"&lt;br /&gt;&lt;br /&gt;"பொம்மப் படம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னாதான் பொம்மப் படம்ன்னாலும் தமிழ்ல பார்க்க வேண்டிதுதான! சுட்டி டிவில அப்பறமென்னா..ஆங்..சித்திர டிவிலல்லம் போடுறாய்ங்கல்ல‌‌"&lt;br /&gt;&lt;br /&gt;"........!!!!!!!!!!!............???????????????..............!!!!!!!!!!!!!!!...........??????????????"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அதிகாரப்பூர்வ அறிவிப்பு:- &lt;/span&gt;பின் மண்டையைத் தாக்கிய இந்த பூமராங் பல்பின் ஆறாத வடு காரணமாக, இனி எந்த மொழிப் படம் பார்த்தாலும், வூட்ல சொல்லக்கூடாது என்று, நம் சமஸ்தானம் முடிவெடுத்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-♠ராஜூ♠&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-8570297574006986591?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/8570297574006986591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=8570297574006986591' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/8570297574006986591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/8570297574006986591'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/11/blog-post_21.html' title='சேகர் செத்துட்டான்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-6173234308036005795</id><published>2011-11-09T14:51:00.000+05:30</published><updated>2011-11-09T14:56:26.040+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்..'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை முயற்சி'/><title type='text'>கண்ணகியாய் இருந்து பயனென்ன..?</title><content type='html'>மாதவிகளாலான உலகில்&lt;br /&gt;கண்ணகியாய் இருந்து பயனென்ன..?&lt;br /&gt;கோவலன்களாலான உலகில்&lt;br /&gt;நீ ஒருத்தி மட்டும்&lt;br /&gt;கண்ணகியாய் இருந்து பயனென்ன..?&lt;br /&gt;நேர்மைகள் மரணமெய்திய உலகில்&lt;br /&gt;கண்ணகியாய் இருந்து பயனென்ன..?&lt;br /&gt;இளங்கோக்கள் இல்லா உலகில்&lt;br /&gt;கண்ணகியாய் இருந்து பயனென்ன..?&lt;br /&gt;உடலுக்கு மட்டும் கற்பென்னும் உலகில்&lt;br /&gt;கண்ணகியாய் இருந்து பயனென்ன..?&lt;br /&gt;எது எப்படியாகினும், நீ&lt;br /&gt;கண்ணகியாவதும்&lt;br /&gt;மாதவியாவதும்&lt;br /&gt;உன் கைகளில் 'மட்டும்'&lt;br /&gt;இல்லை.&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;b&gt;-♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-6173234308036005795?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/6173234308036005795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=6173234308036005795' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6173234308036005795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6173234308036005795'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/11/blog-post_09.html' title='கண்ணகியாய் இருந்து பயனென்ன..?'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-5571855902117790045</id><published>2011-11-02T17:32:00.001+05:30</published><updated>2011-11-02T17:43:30.857+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>தலைமுறைக் கனவு!</title><content type='html'>ஒவ்வொரு வருடமும் சுதந்திர, குடியரசு தினத்தில் பள்ளிக் குழந்தைகளின் பிஞ்சுக் கைகளிலிருந்து உதிர்ந்து் கொண்டிருக்கும் விறைப்பான  வீரவணக்கங்களுக்கு மத்தியில், தேசியக் கொடியை கம்பத்தில் ஏற்றி விட்டு முகத்தில் தவழும் பெருமிதத்துடன் இறங்கி வருவார் செந்தில் மாமா. கள்ளழகர் திருவிழாவைப் போல் அதைப் பார்ப்பதற்கு அவ்வளவு மிடுக்காக இருக்கும், மாணவர்களின் வெள்ளைச் சட்டை, காக்கி நிறக் கால்ச்சட்டைகளால் சூழ்ந்த&lt;br /&gt;பரப்பிற்கு, மாமா-வின்  இராணுவ உடை விபூதியில் வைத்த குங்குமப் பொட்டு! மாமாவுக்கு புதுத்துணி எடுப்பதென்றால் அது இந்திய இராணுவச் சீருடைதான். மற்றபடி, அவரை ஜெயவிலாஸ் இலச்சினையுடைய முண்டா பனியனிலும், கட்டம் போட்ட கைலியிலும் காணலாம். வெளியூர் செல்லும் நாட்களில் வேட்டி-சட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;மாமாவைப் பற்றிச் சொல்ல் வேண்டுமானால், செந்தில் என்ற பெயரின் தில் என்பதை, மேற்குறிகளுக்குள் இட்டு, செந்'தில்' வேல் என்று எழுதுமளவிற்கு இரசனைக்காரர். செம்மண் தேகம். ஆஜானுபாகுவான உடல்வாகு. இடது மார்பில், இந்தியத் தேசியக் கொடியைப் பச்சை குத்தியிருப்பார். வாயைத் திறந்தால், வக்காலி என்ற (கெட்ட) வார்த்தை சீரான இடைவெளியில் சரளமாக வந்து விழும். இந்திய இராணுவத்தில் சிப்பாயாகவேனும் சேர்ந்து,  நாட்டுக்காக உயிர் விட வேண்டுமென்பதுதான் மாமாவின் ஆசை. கனவு, இலட்சியம் எல்லாமே! இராணுவம் நடத்தும் எல்லா தேர்வுகளிலும் கலந்து கொள்வார். அதற்கான தேர்ந்த பயிற்சியும் மாமாவிடம் இருக்கும். ஆனால், ஒவ்வொரு முறையும் 'உயரம் போதவில்லை' என்ற ஒற்றைக் காரணத்தினாலேயே அவருக்கு, இராணுவப் பதவி எட்டாக் கனியாகவே இருந்தது.  தேர்வு அதிகாரிகளை தக்க முறையில் 'கவனித்தால்' வாய்ப்பு கிட்டும் என்று 'விவரமறிந்தவர்கள்' சொல்லியுமதை மறுத்து விட்டார். "காசக் குடுத்து, உள்ள போனா அதச் சம்பாதிக்கிற மொனப்புதான் மாப்ள இருக்கும்..அப்பறமெங்குட்டு நம்ம மனசொத்து துப்பாக்கி தூக்குறது..?" என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் வயதுப் பையன்களுக்கு , அவர் மாமா-வென்றால், சொந்த மாமா இல்லை. சகட்டுமேனிக்கு எல்லாரையும் 'மாப்ள' என்றழைப்பதாலேயே அவர் எல்லாருக்கும் மாமாவாகிப் போனார்.  இன்னும் அவர் பாஷையில் சொல்ல வேண்டுமானால், நாங்களெல்லாம் அவருக்கு குஞ்சு குளுவான்கள். ஆனால், செந்தில் மாமாவிடம் மூத்த தாய்மாமனைப் போன்ற கண்டிப்பும், இளைய தாய்மாமனைப் போன்ற சிநேகமும் ஒருசேர இருக்கும். 'அதென்னடா யுவகேந்திரா..சந்துபொந்துரான்னுக்குட்டு வடக்கத்தி மொழில... நல்லா இனிக்கிற தமிழ்ல 'பாரதியார் இளைஞர் மன்றம்'ன்னு ஆரம்பிங்கடா வெண்ணைகளா'  என்ற அதட்டல் கலந்த அறிவுரையில் ஆரம்பித்தது செந்தில் மாமாவினுடைய பழக்கம். அன்றிலிருந்து,&lt;br /&gt;&lt;br /&gt;"வக்காலி..இத்துணூண்டுக் கெணத்துல குதிக்கிறதுக்கு பயந்தேன்னா,, நீயி  காபி வட்டைக்குள்ளதாண்டா நீச்சலடிக்கணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"இரத்தத் திலகம் கடைசிக் கட்டத்துல, நம்ம கொடியை ஏத்திப்புட்டு பொட்டுல குண்டு வாங்கிச் சாவாரு பாரி சிவாஜி..வக்காலி.. நல்ல சாவுன்னா அதுதாண்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னா பெர்ர்ரிய மாப்புள்ளக் கல்லு..வக்காலி அழுத்தி எத்துனா ஆடிக்காத்துல பறக்குற மாதிரி பறக்கும்டா"&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எத்தனையோ அறிவுரைகள், பிரதாபங்கள், வக்காலிகள்!&lt;br /&gt;&lt;br /&gt;விடுமுறை நாட்களில், ஊராட்சி மன்ற, உடற்பயிற்சி 'பாரில்' (கம்பிகள்)  செந்தில் மாமாவுடன் ஆரம்பிக்கும் எங்கள் ஜமா. அசராமல் நூறு ஃபிலப்புகள் கூட எடுப்பார். நாங்கள் ஐந்துக்கே திக்கித் திணறிக் கொண்டிருப்போம். அதைப் பார்த்து மெலிதாக சிரித்துக் கொண்டே அருகில் வந்து, 'இரு மாப்ள.. நான் புடிக்கிறேன்' என்று இலாவகமாக சொல்லிக் கொடுப்பார். அப்படியே சூரியனின் மஞ்சள் நிறம் மங்கத் தொடங்கும் நேரம், கூட்டம் அப்படியே கோனார் தோட்டக் கிணற்றுக்கு நகரும். அங்கு நீச்சல் தொடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கும் செந்தில் மாமாதான் சென்டர் ஆஃப் த அட்ராக்சன். கடப்பாரை நீச்சலிருந்து விலாங்கு நீச்சல் வரை அவருக்கு அத்துப்படி! எங்கள் அரைஞாண்கயிற்றைப் பிடித்து நீச்சல் கற்றுத் தந்த துரோணர் அவர். நீச்சல் முடித்து மேலேறி வந்தவுடன் "ஏலேய்..அந்த மோட்டர் தண்ணியப் புடி" என்று சொல்லி ஒரு லிட்டர் தண்ணியை அப்படியே குடிப்பார். "செரிமானத்துக்கு நல்லதுடா" என்று சொல்லி எங்களையும் குடிக்கச் சொல்வார். எங்களுக்கெல்லாம் அப்படியே குடலைப் பிரட்டிக் குமட்டிக் கொண்டு வரும். அம்மாதிரியான தருணங்களில்  ராஜா, குமார், பஞ்சு எல்லாம் வாந்தியெடுத்ததும் உண்டு. அப்படி ஏதாவது நடப்பின், வாந்தியெடுப்பதையும் பொருட்படுத்தாமல் முதுகில் அடி விழும். வக்காலி சகிதமாக!&lt;br /&gt;&lt;br /&gt;மாதத்தில் என்றைக்காவது, இளமைத் திமிரேற டவுன் ஒயின்ஸாப்புகளுக்குச் செல்லும் போது, மாமாவும் சேர்ந்து கொள்வார். ஆனால், சரக்கைக் கையால் கூட தொட மாட்டார். மேலும், 'ஏண்டா..சரக்கடிச்சு ஒடம்பைக் கெடுத்துக்குறீங்க' என்று அறிவுரைகள் வேறு தருவார். அம்மாதிரியான அறிவுரைகளில் அதட்டல் இருக்காது. மாறாக அன்பு இருக்கும். ஆனால், நாங்கள் அவற்றை புலம்பல்கள் பட்டியலில் சேர்த்திருப்போம். பற்றாக்குறைக்கு, "ஏன மாமா..மிலிட்டரி..மிலிட்டரின்ற..அப்பறம் எப்டி ஊத்தாம இருக்கப் போறீயாம்" என ஓட்டுவோம். அதற்கு வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்து ஒதுங்கிக் கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரக்கடித்து விட்டு, மிதமான போதையில் ஹோட்டல்களில் சாப்பிடும் போது, மறுபடியும் ஆரோக்கிய டிப்ஸுகள் தருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாப்ள..தலைக்கறி சொல்லுயா..ஆம்ளேட்ல பெப்பர் கொஞ்சம் தூக்கலாப் போட்டுச் சாப்பிடிய்யா!"&lt;br /&gt;&lt;br /&gt;"வக்காலி..ஈரலை வறுத்துத் தின்னா...ஒடம்புல இரும்பு ஒட்டும்டா"  என்பது மாதிரியாக ஆரம்பித்து,&lt;br /&gt;&lt;br /&gt;"யேய்..ஆளுக்கு ரெண்டு வாழைப்பழத்தைத் தின்னுங்கடா..காலைல கலகலன்னு போயிரும்ல" என்பதில் வந்து முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் எங்களுடன் சேர்ந்து செய்தாலும், சுற்றினாலும்.அவருடைய பயிற்சிகளும், இராணுவத் தேர்வுகளும்  ஒருபுறம் நடந்து கொண்டுதானிருந்தது. ஆனால், நாங்கள்தான் பள்ளிகளிலிருந்து  கல்லூரிக்கு முன்னேறியிருந்தோம்.செந்தில் மாமா அப்படியேதான் இருந்தார். இடையில் அவருக்கு திருமணம் நடந்திருந்தது.வசதியான குடும்பம் என்பதால் சாப்பாட்டிற்கு எதுவும் பிரச்சனையில்லாமல் சென்று கொண்டிருந்தது. யார் யாரோ எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ’இலஞ்சம்’ கொடுத்து இராணுவத்தில் சேர முற்றிலுமாக மறுத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலப் போக்கில், நாங்களும் படிப்பை முடித்து வாழ்தலின் பொருட்டு, கிராமத்தை விட்டு பெரு நகரங்களில் குடியமர்ந்திருந்தோம். எப்போதாவது  பங்குனிப் பொங்கலுக்கோ அல்லது வைகாசித் திருவிழாக்கோ ஊருக்கு வந்தால்தான் உண்டு.  அப்படியாக, சென்ற தீபாவளிக்காக  ஊருக்குச் சென்றிருந்த சமயம், கூறுகறிக் கடையில், "வக்காலி. நெஞ்சுக்கறியாப் போடுண்ணே!" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.  நினைத்தது போலவே,அங்கே செந்தில் மாமாதான் நின்று கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னா மாமா... நல்லாருக்கீகளா" என்று கேட்டு முடிக்கும் முன்பே முந்திக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"யேய்..மாப்ள நல்லாருக்கியாய்யா..வக்காலி பார்த்துக் கொள்ள நாளாகிப் போச்சேய்யா" என்றவாறே வந்து கட்டிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின், என் பார்வையைப் புரிந்து கொண்டு அவரே தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதையேன் மாப்ள கேட்குற..எவ்வளவோ மொயற்சி செஞ்சும்..வக்காலி நமக்கு உசரம் கூடி வரலைடா..வயசாகிருச்சி 'ஏஜூ பார்டு'ன்னு ஏதோ சொல்லிட்டாய்ங்க..இனிமே செலக்சன் போகவும் முடியாது. ஆனா, எப்பாடு பட்டாவது நம்ம போஸ்ஸூ பயல மிலிட்டரில சேத்துரணும் மாப்ள..அதுல உறுதியா இருக்கேன்யா”&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு பதிலாக, என்ன சொல்வதென்று தெரியாமல் வெற்றுச் சிரிப்பாக சிரித்து வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”சரி மாப்ள..தோதிருந்தா, வீட்டுப் பக்கம் வாய்யா..உங்க அக்கா கத்துவா.. நான் வர்றேன்” - கிளம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்தில் செந்தில் மாமாவினுடைய மகன், ‘சந்திர போஸ்’ தன் சக கால்சட்டைச் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-5571855902117790045?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/5571855902117790045/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=5571855902117790045' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/5571855902117790045'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/5571855902117790045'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/11/blog-post.html' title='தலைமுறைக் கனவு!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-422857033516199957</id><published>2011-10-18T11:18:00.006+05:30</published><updated>2011-10-18T14:12:37.330+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூரியனுக்கு டார்ச்சடித்தல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>குணசித்தர்கள் - க.சீ.சிவகுமார்.</title><content type='html'>மலேரியாவால் பீடிக்கப்பட்டு, ஐந்து நாட்கள் மருத்துவமனையில் தஞ்சமடைய நேர்ந்தது. பிணிக்காலங்களில், அவதானித்த வரையிலும் 'எல்லா மருத்துவமனைகளிலும் மருத்துவர் இருக்கிறாரோ இல்லையா, சர்வ நிச்சயமாக தொலைக்காட்சி இருக்கின்றது. அதில் நேரம் தவறாமல், சன்னமான ஒலியில் சீரியலும் ஓடிக் கொன்டிருக்கிறது' எனக்குதான் மண்டையிலிருந்து  தொண்டை வரை காய்ந்தது. அதைப் போக்க க.சீ.சிவகுமார் வந்தார். தன்னுடைய 'குணசித்தர்கள்' புத்தகங்களின் வாயிலாக!&lt;br /&gt;&lt;br /&gt;குணசித்தர்கள் - கையில் எடுக்கும் போதே, பெயரைப் பார்த்து, ஏதோ இமயமலை வாழ் சித்தர்களைப் பற்றியதோ என்று கொஞ்சம் டரியலாகித்தான் போனேன்.ஆனால், க.சி.சீ,  'அப்படிப் பட்டவரில்லை' என்பதால் தைரியம் வந்தது. குங்குமத்தில் நான் பால்குடி மறவாத காலத்தில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு என்கிறார்கள்.ஆனால், இப்போது வாசிக்கவும் புதியதாகவே இருப்பதுதான் க.சி.சீ-யின் எழுத்து பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னே ஒரு தமிழ்! என்னே ஒரு நடை! பளிங்குத் தரையில், எண்ணெய்யை ஊற்றிவிட்டால் ச்சும்மா வழுக்கிக் கொண்டு போகுமே அம்மாதிரியானதொரு நடை. இடையிடையில் வட்டார வழக்குகளும் சேர்ந்து  சாட்டையைச் சுழற்றியடிக்கின்றது. ஒரே தம்தான்! புத்தகம் முடிந்து விட்டது. வலது கையில் 'ட்ரிப்ஸ்' ஏற்றிக்கொண்டு, இடது கையில் புத்தகம் வைத்துப் படித்து விழுந்து விழுந்து சிரித்ததைப் பார்த்துதான், மருத்துவமனை ஊழியர்களும், சக நோயாளிகளும் என்னைப் 'பிராந்தன்' என நினைத்திருக்கக் கூடும். அதனாலென்ன, 'இப்ப மட்டும் என்னா வாழுதாம்..?" என்ற மனசாட்சியின் குரல் என்னைக் கட்டுப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-F449yRmmBQw/Tp0VEtu_TNI/AAAAAAAAAuU/wPr2C5nO-_s/s1600/ka.se.si.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 215px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-F449yRmmBQw/Tp0VEtu_TNI/AAAAAAAAAuU/wPr2C5nO-_s/s320/ka.se.si.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5664707077042293970" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதை, குறுநாவல் உட்பட எந்தவொரு வரையறைகளுக்குள்ளும் சிக்காமல், மனிதர்களில் இத்தனை நிறங்களுண்டு என ப்ளோரெசென்டில் வெளிச்ச மின்னலடித்துக் காட்டுகிறார் க.சி.சீ! எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும் வந்து போகும் சந்தோஷம், சோகம் உள்ளிட்ட 'எல்லாவற்றையும்' ஒரு நகைச்சுவை இழையோடு சொல்லிச் செல்லும் பாங்கு யாரையும் கவராமலிருக்க முடியாது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் வைத்திருக்கும் தலைப்புகள் கூட அட்டகாசம். ஒரு அத்தியாயத்தை வாசித்து முடித்து விட்டு, பின்னால் திருப்பி மீண்டுமொருமுறை, வாசகனைத்  தலைப்பைப் பார்க்க வைக்கும் சாமர்த்தியம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்த்து விடாது. ஆனால்,நம்மாளுக்கு அது கனகச்சிதமாக வருகின்றது. ஒரு கிராமம் என்று எடுத்துக் கொண்டால், அங்கு மைனர், பநதா பார்ட்டியென பல குணாதிசயங்கள் நிரம்பிய பலரைச் சந்திக்கலாமல்லவா..? அவர்களை தன் எழுத்தின் மூலம் சந்திக்க வைக்கிறார் எழுத்தாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;"செல்வக் கடுங்கோ கோழியாதன்" - இம்மாதிரியான தலைப்புகளையெல்லாம் சிவகுமார் எங்கு ரூம் போட்டு யோசிப்பார் என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட எல்லா தலைப்புகளுமே இம்மாதிரிதான். ஏதோ ஒரு குருட்டாம் போக்கில், ஒருவன் சாபம் விட்டு பக்கத்து வீட்டு அவரைச் செடி கருகிப் போக, அவன் ஊருக்குள் சாமியாராகிறான். அதற்கு "அவரைச்சாமி" என்ற தலைப்பு. தன் கணவனை,பிறன் மனை நோக்குதலின் பொருட்டுச் சந்தேகிக்கும் மனைவி திரியும் அந்த்தியாயத்திற்கு, "பகலுறங்கும் பெருமான்" என்ற தலைப்பு. மேகத்தைப் போல, எப்போதும் எங்கேயும் நகர்ந்து கொண்டே இருக்கும் பேருந்து நடத்துனருக்கு, சிவகுமார் வைத்திருக்கும் பெயர், மேக வண்ணன். எப்போதும் பீர் குடித்துப் போதையிலேயே மிதந்து கொண்டிருக்கும் ப‌ரமாத்மாவுக்கு, க.சி.சீ கொடுத்திருக்கும் நாமம் "பொங்கி வழிபவன". எல்லா ஆண்களுக்கும், தன் மகள், பேத்தி தவிர மற்ற எல்லோருமே ஃபிகர்கள்தான்,.சைட்டடித்தால் தப்பில்லை என்பது எழுதப்படாத, ஆனால் இன்றளவும் கடைபிடிக்கப் படும் விதி. அம்மாதிரியான ஒருவர், 70 வயது கிழவர்,"வயோதிக வாலிபர்" என்ற தலைப்பின் கீழ் வருகிறார். வீராச்சாமியின் பெயர் எப்படி "பூட்டு ஜான்" என மாறியதென்பதை,விவரிக்கும் விதம் அதகளமான ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா ஊர்களிலும், ஊசியின் ஓட்டைக்குள் ஒட்டக்த்தை நுழைத்து விடுவேன் என்ற நொன்ன நாட்டியம் பேசும் நபர் மைனர் செயின் சகிதமாய் குறைந்தபட்சம் ஒருவராவது இருப்பது சாத்தியமானதுதான். சிவகுமார் மட்டும் விதிவிலக்கல்லவே! அவரும் அப்படியொருவனை, தான்தான் கவிஞர். கண்ணதாசன் என்று ஊர்மக்களிடம் பீலா விடுபவனை, அவனின் உடல்மொழி கொஞ்சமும் சிதையாமல், "தானாகி நிற்பவன்" என வகைப்படுத்துகிறார். "கேள்வியின் நாயகன்" பகுதியின் நாயகன் பழனிச்சாமி கேட்கும் கேள்விகளெல்லாமே பகீர் ரகம். சுவாரசியமும் கூட! உடன் சிறிது மொக்கையும். "தமிழ்த்தாயை எப்புடி டீச்சர் செயல் மறந்து வாழ்த்தலாம்..? தப்பில்லையா..?" என்று அவன் கேட்கும் கேள்விக்கு,  ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர் மயங்கி விழுவதைத் தவிர வேறென்ன பெரிதாகச் செய்து விடமுடியும்!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வார்த்தைகளுக்கொரு முறை ஒரு கெட்ட‌ வார்த்தை பேசும் மனிதர்களைப் பார்த்திருப்போம். சமய‌ங்களில், கெட்ட வார்த்தைக்குப் பதிலாக நல்ல வார்த்தைப் பேசும் மனிதர்களும் இருப்பர்.  "பொசிசன்" என்ற தலைப்பின் கீழ் அப்படியொரு மனிதனைச் சித்திரமாக்குகிறார். யூகம் சரியெனில், சிவகுமார் தன் சிறுவயதில், கபடி விளையாட்டு வீரராகவோ அல்லது வெறி கொண்ட அதி தீவிர உக்கிர பார்வையாளராகவோ இருந்திருக்க வேண்டும். ஏனெனில், கபடியைப் பற்றி அவ்வளவு விளக்கங்களை அள்ளித் தெளிக்கிறார் மனிதர்.  "ஏனைய அறிவிப்பாளன்" பகுதியில் கபடி கமெண்ட்ரி கொடுப்பவர்களையும் சொல்லத் தவறவில்லை. அந்தப் பகுதியில், அவர்கள் மைக் பிடிக்கும் லாவகம் முதல், சுக்குக் காபி குடித்துத் தொண்டையை  இதமாக்குவது வரை சூப்பர் அவதானிப்பு.  எனக்கு அதைப் படிக்கும் போது, எங்கள் ஊர் ஜல்லிக்கட்டு அறிவிப்பாளர் நினைவிற்கு வந்தார். வெண்ணிலா கபடிக் குழு படத்தில், எழுத்தாளர்.பாஸ்கர் சக்தி இந்த அறிவிப்பாளர் பதவியை ஏற்றிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;க.சி.சீ, என்னதான் நகைச்சுவையைத் தன் களமாகக் கொண்டிருந்தாலும், ஒரு எழுத்தாளனுக்கேயேயுரிய சமூக அக்கறையில் கவனம் செலுத்தவும் தவறவில்லை. தேவேந்திரன் என்ற ஒரு பாத்திரத்தை வைத்து, சமூகத்தில் நிலவும் சாதி வேறுபாடுகளைச் சாடியிருக்கிறார். தேவேந்திரன் இறுதியில் மரணித்ததைப் படிக்கும் போது ஒரு நிமிடம் மௌனிப்பதில் நம் குற்றவுணர்வும் சேர்ந்து வெளிப்படும். "அர்த்த நாரேஸ்வரி" என்ற அத்தியாயத்தில் அதிகமாகப் பதிவு செய்யப்படாத, திருநம்பிகளைப் பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் அவமானங்களையும், பிரச்சனைகளையும் பதிவு செய்திருக்கிறார். "திலோத்தமா" என்ற பகுதியில், ஒரு பெண் பாலியல் தொழிலாளியின் பார்வையில்,இந்த சமூகத்தை எள்ளலுடன் சொல்வதும்,அதிகார மையத்தைச் சாடுவதும் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி,'வீடில்லாதது ஈடில்லாதுமான நாய்' அளவிற்கு, "இவன் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவன்", "சோறு வைப்பதற்கு முன் பெயர் வைத்தனர்"  போன்ற அக்மார்க் சிவகுமார் சிக்ஸர்களுக்கும் புத்தகத்தில் பஞ்சமேயில்லை.ஆங்காங்கே இரஜினிகாந்த், சிவாஜி கணைசன் உள்ளிட்ட சினிமா நாயகர்களையும் கலாய்க்கத் தவறவில்லை.மினிமம் சிரிப்புக்கு, பிரீத்தியைப் போல கியாரண்டி கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணிக்கைக்காக,வலிந்து  சிலவற்றைச் சேர்த்துள்ளனரோ எனத் தோன்ற வைக்கும் சில பகுதிகளும் புத்தகத்தில் உண்டு. வார இதழில் கட்டுரைகளாக வந்ததாலோ என்னவோ, எல்லா அத்தியாயங்களும் நிர்ணயிக்கப் பட்ட பக்கங்களுள் அடங்கிப் போவதும், இழுத்துக் கொண்டு செல்வதும் கொஞ்சம் ஏமாற்றம். எனக்கு,’இன்னும் இறங்கி அடித்திருக்கலாம்' என்று தோன்றிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;'குணசித்தர்கள்' புத்தகம் கிழக்கு பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;குறிப்பு:-&lt;/u&gt; ஒரு புத்தகம் படிக்க எனக்கு 'மலேரியா' வர வேண்டியிருக்கின்றது என்பதை நினைக்கும் போதுதான் நெஞ்சிலிருந்து எல்லாமும் விம்முகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-422857033516199957?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/422857033516199957/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=422857033516199957' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/422857033516199957'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/422857033516199957'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/10/blog-post_18.html' title='குணசித்தர்கள் - க.சீ.சிவகுமார்.'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-F449yRmmBQw/Tp0VEtu_TNI/AAAAAAAAAuU/wPr2C5nO-_s/s72-c/ka.se.si.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-9013583165667816210</id><published>2011-10-04T11:16:00.002+05:30</published><updated>2011-10-04T11:20:01.493+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமாரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வருத்தம்'/><title type='text'>முரண்.</title><content type='html'>'யுத்தம் செய்' க்குப் பிறகு சேரன்  நடித்திருக்கும் முரண். அஞ்சாதே-வுக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லாத/செய்யாத பிரசன்னாவும் உடன் இணைந்திருக்கிறார். இராஜன் மாதவ் என்பவர் இயக்கியிருக்கிறார்.&lt;br /&gt;முரண். பெயரிலேயே நல்ல வசீகரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையென்று பார்த்தால், இது ஒரு நல்ல களம். திரைக்கதையிலும் இயக்குநரின் மெனக்கெடல் நன்றாகத் தெரிகின்றது. சேரன் ஒரு 'என் இனிய பொன் நிலாவே' பார்ட்டி. அது ஏன், எல்லாப் படத்தில் வரும் எல்லா இசைப்பிரியர்களும் கிடார்களைச் சுமந்தபடியே திரிகிறார்களெனத் தெரியவில்லை.ஒரு வீணையையோ,குறைந்தபட்சம் ஒரு புல்லாங்குழலைத் தூக்கிக் கொண்டு திரிந்தாலாவது சிரமம் குறைவாக இருக்குமே!! பிரசன்னா ஒரு பணக்கார நல்லவருக்குப் பிறந்த,ஒரு..ஒரே ஒரு மகன்.இவர்களுக்குள், இவர்களே பின்னும் வலைதான் கதை!&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் ஹீரோ பிரசன்னா. என்னா நடிப்புடா சாமீ! பார்வையிலேயே மிரட்டுகிறார். ஒரு பணக்கார இளைஞனின் குறும்பு,  குரூரம், துணிவு என எல்லாம் கலந்து கட்டி அடித்திருக்கிறார். காட்சிக்குக் காட்சி பிரசன்னா காட்டும், முகபாவங்களும், அங்க அசைவுகளும் அருமையோ அருமை. எதையுமே 'ஜஸ்ட் லைக் தட்' என்று செய்கிறார். ஆனாலும், திரையில் கான்ஷியஸாக 'சிகரெட்' பிடிப்பதிலும்,  இறுதிக் காட்சியில் சரக்கடித்துவிட்டு உளறுவதிலும் மட்டும் கொஞ்சம் சொதப்புகிறார். பிரசன்னா-வின் திரையுலக வாழ்வில் இது ஒரு முக்கியமான படம். வாழ்த்துகள் பிரசன்னா!&lt;br /&gt;&lt;br /&gt;சேரன். மனிதர் ஷேவ் செய்தாலே, சோகமாகத்தான் தெரிவார். இதில் சுத்தம். ஆரம்பத்தில் கொஞ்சம் எரிச்சலைக் கொடுத்தாலும், போகப் போக நடிக்க முயற்சி செய்கிறார். ஹரிப்பிரியாவுடனான காட்சிகளில்,  ரசிக்க வைக்கிறார். படத்தில்,சேரனை விட அவர் அணிந்து வரும் உடைகள் கனகச்சிதம். அருமையாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஹரிப்பிரியா, நிகிதா, இன்னோர் பெண் என படத்தில் மூன்று நயகிகள். ஹரிப்பிரியா மட்டும் கொஞ்சம் தேறிகிறார். மற்ற இருவரும் ம்ம்ம்ம்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்மேஷ். ஒளிப்பதிவாளர். புகுந்து விளையாடியிருக்கிறார். அதுவும் சேரன், பிரசன்னாவுடனான கார்க் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். வித விதமாக ஆங்கிள்களில் அசரடிக்கிறார். பிரசன்னாவுக்காக ஒருமுறையென்றால், பத்மேஷுக்காக மறுமுறை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னணி இசை சிற்சில இடங்களில் ரசிக்க வைத்தாலும், பாடல்கள் ஈர்க்கவேயில்லை. பர பரவெனச் செல்லும் படத்திற்கு பிரேக் போடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பி.கு:-&lt;/u&gt; இந்தப்படம் ஏதோ ஒரு ஹிட்ச்காக் படத்தின்,இன்ஸ்பிரேஷன் என்கிறார்கள், சேரன் கூட படத்தின் பெயரைக் குறிப்பிடாமல், இயக்குநரின் இன்ஸ்பிரேஷன்  என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ஆனால், அண்மையில் நடந்த 'மிர்ச்சி மியூஸிக் அவார்ட்ஸ்' நிகழ்ச்சியில் பாடகி. தஞ்சை செல்விக்கு விருதளித்துப் பேசிய சேரன், ' நம் சொந்த மண் சர்ந்த கலைகளைக் கொண்டாடத் தவறுகிறோம்' என ஆதங்கப்பட்டார். எனக்கும் கூட, வெற்றிக்கொடிகட்டி,தேசியகீதம் பாடிய சேரனைப் பார்த்தால்,ஆதங்கமாகத்தான் இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு 'கிரடெடிட்'டாவது போட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-9013583165667816210?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/9013583165667816210/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=9013583165667816210' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/9013583165667816210'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/9013583165667816210'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/10/blog-post.html' title='முரண்.'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-6256123252879494346</id><published>2011-09-22T12:07:00.003+05:30</published><updated>2011-09-22T12:14:16.539+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வருத்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>காமெடி கமிஷன்கள்!</title><content type='html'>வேலு நாயக்கரைக் கூட கொஞ்சம் பிரயத்தனப்பட்டால், நல்லவரா.. கெட்டவராவென்று சொல்லி விடலாம். ஆனால், நம் தமிழக முதல்வரம்மாவை சொல்ல முடியவில்லை.வலது இன்டிகேட்டரைப் போட்டு, இடது புறம் கைக் காட்டி விட்டு நேராகச் சென்று கொண்டிருக்கிறார். மோடி உண்ணாவிரதமா..?! தம்பித்துரையை அனுப்பி வைத்து,காங்கிரஸுக்குக் காலரா வர வைக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தையா..? ஓ.பி.எஸஸை உட்கார வைத்து விட்டு, கிட்டத்தட்ட‌ எல்லா இடங்களுக்கும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து கேப்டனுக்கும், தோழர்களுக்கும் கல்தா  கொடுக்கின்றார். கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக‌  மத்திய அரசிற்கு கடிதமெழுதி உண்ணாவிரதம் வாபஸ் வாங்க வைக்கின்றார். மற்றொரு புறம், மடிக்கணிணி உள்ளிட்ட இலவசப் பொருட்களைக் கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்றும் பிம்ப‌த்தைத் தக்க வைத்துக் கொள்கின்றார். மின்விசிறி தேவையில்லாத மலைவாழ் மக்களுக்கு அதை மாற்றி மின் அடுப்பும் கொடுக்கிறாராம். அதற்குள்,' எங்க பள்ளியோடத்துக்கு இன்னும் லேப்டாப் தரலை'  என்று சில மாணவர்கள் போராட்டம். அட பொறுங்கப்பா..! இன்னும் முழுசா அஞ்சு வருஷமிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆட்சியில் திருமங்கலம் இடைத் தேர்தலென்றால், இந்த ஆட்சியில் திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல்.வேட்பாளர் பட்டியல் முதற்கொண்டு எல்லாவற்றையும் அதிரடியாக அறிவிக்கும்  'அ.இ.அ.தி.மு.க' அல்லது ஜெயலலிதா, சார்பில் இறுதித் தகவலின் படி பரஞ்ஜோதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.   'தி.மு.க' வோ, 'கடமையில் காந்தி; நேர்மையில் நேரு' என திருச்சி வாழ் மக்களால் ஏகத்திற்கும் "போற்றப்படும்" கே.என். நேருவைக் களமிறக்கியுள்ள‌து. நேருவுடன் சொத்துக்குவிப்பு வழக்கும் நில மோசடி வழக்கும் கபடி ஆடிக் கொண்டிருக்க, மறுபுறம் பரஞ்ஜோதியின் மீது செக்ஸ் புகார் நூதனமாக செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறது. எவ்வித கலகங்களிலும்,எந்த கழகமும் சளைத்ததில்லையென மறுபடியும் மறுபடியும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. 'சபாஷ்;சரியான போட்டி' என சிரிக்க வேண்டிய‌ பி.எஸ்.வீரப்பாக்களாகிய மக்கள் எப்படி சிரிக்கப் போகிறார்களென்று தெரியவில்லை. 'வன்னியர்களைக் உய்விக்க‌ வந்த வாழும் இயேசு' வான இராமதாஸின்  பா.ம‌.க, தனித்துப் போட்டியிட்டு வாகை சூடுமென பெரிதும் எதிர்பார்த்தேன். வட போச்சே!!&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்வாதிகள்தான் காமெடிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார்களென்றால், சமயங்களில் அரசினாலும், நீதிமன்றங்களாலும் அமைக்கப்படும் ஆய்வுக் கமிஷன்களும், விசாரனைக் கமிஷன்களும்  கூட கலக்குகிறார்கள். ண்மையில்,உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப் பட்ட திட்டக் கமிஷனொன்று, கிராமவாசிகளின் அன்றாடத் தேவைக்கு ரூ.25/- என்றும் நகரவாசிகளுக்கு ரூ.32/- என்றும் "ஆய்வு" செய்து சமர்ப்பித்துள்ளது. இவ் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிக்கையைத் தயார் செய்தவர்களைப் பார்த்து வாயால் சிரிக்க முடிய‌வில்லை. ஏ.சி. அறையின் காற்று, குளிராமலிருக்க  கோட்-சூட் போட்டவர்களின் இந்த‌ வன்முறையை என்னவென்று சொல்வது..? பொதுகழிப்பிடத்தில் மலஜலம் கழிக்கவே இப்போது குறைந்தபட்சம் ரூ.3/- செல்வழிக்க வேண்டும். அரசுப் பேருந்துகளின் குறைந்தபட்ச கடணமே ரூ.3/-.' தேசியகீதம்' என்று சேரன் படமொன்று இருக்கின்றது. அப்படத்தில் வருவது போல, இந்த அறிக்கை தயாரித்த 'நிபுணர்களிடம்'  தினமும் 32 ரூபாயைக் கொடுத்து குடும்பம் நடத்தச் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிக்கையின்படி, சட்டம் அமலாக்கப் பட்டால் எப்படியும் ஏறக்குறைய 80% மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேல்தான் இருப்பார்கள். மாண்புமிகு.பிச்சைக்காரர் கூட நாளொன்றிற்கு ரூ.50 க்குக் குறையாமல் சம்பாதிக்கிறார். பிறகென்ன இந்தியா ஏட்டளவில் வல்லரசுதான்! ஸ்வீட் எடு;கொண்டாடு!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-6256123252879494346?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/6256123252879494346/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=6256123252879494346' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6256123252879494346'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6256123252879494346'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/09/blog-post_22.html' title='காமெடி கமிஷன்கள்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-5516662350444817110</id><published>2011-09-20T14:07:00.001+05:30</published><updated>2011-09-20T14:10:27.997+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீடியாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வருத்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>அணு அணுவாய்!</title><content type='html'>&lt;span style="font-weight: bold; font-style: italic;"&gt;அமைச்சர் வேண்டுகோளை மக்கள் நிராகரித்தனர். கூடங்குளத்தில் உண்ணாவிரதம் வலுக்கிறது – சன் நியூஸ் கதறிக் கொண்டிருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா..திறக்குற எல்லா பவர் ப்ளாண்ட்களுக்கும் இப்படி ஏதாவது லொட்டு லொசுக்குக் காரணம், உண்ணாவிரதம்ன்னு இருந்து நிறுத்திடுங்க..இல்லைன்னா லேட்டாக்கிடுங்க! அப்பறம் மின் வெட்டுன்னு பொலம்புங்க" - எலெக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் படித்த நண்பர் புலம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா இல்ல பாஸ்..அணுமின் நிலையம் திறந்தா, அங்க இருக்குற மக்கள் கதிர்வீச்சுனால ரொம்ப பயங்கரமா பாதிக்கப் படுவாங்க..அதனாலதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் முதல்ல இருந்தே போராடிட்டு இருந்தாங்க.. இப்போதான் மக்களுக்கு ஓரளவு தெளிவு கிடைச்சி போராட்டம் வலுத்துருக்கு.. இதுக்குப் போயி சலிச்சுக்குறீங்களே!!"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் பாஸ்..? அததுக்கு உண்டான 'ஸேஃப்டி மெஸ்ர்மென்ட்ஸ்' இல்லாமலா ப்ளாண்ட் வரும்"&lt;br /&gt;&lt;br /&gt;"அட.. அந்த மெஸர்மென்ட்ஸெல்லாம்  ஓரளவு ஒழுங்கா வச்சிருந்த, ஜப்பானே ஆட்டங்கண்டு போச்சு! சுடுகாட்டுக் கூரையிலெல்லாம் ஊழல் நடத்தின நம்மள்ளாம் எம்மாத்திரம்..? அதுக்கும் மேல, ப்ளாண்ட் கமிஷனிங் நடந்துட்டு இருக்குறப்பவே பல பிரச்சனைகள்..இன்னும் ஒர்க் ஆக ஆரம்பிச்சிருச்சுன்னா யோசிச்சுக்கோங்க!"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பறமெதுக்கு..மின் வெட்டுப் பிரச்சனை அது இதுன்னு அரசங்கத்த குற்றஞ் சொல்றீங்க..?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஃபேன் இல்லாம இருந்திராலாம் பாஸூ! உயிரில்லாம இருந்துருவீங்களா..?"&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா சப்பைக் கட்டுக் கட்டக்கூடாது! பாரதியாரே, 'அணுவைப் பிளந்து ஏழ் கடலைப் புகுத்தி'ன்னு பாடிருக்காரு தெரியுமா..?"&lt;br /&gt;&lt;br /&gt;"சிரிப்புதான் பாஸ் வருது. 'சாதிகள் இல்லையடி பாப்பா'ன்னு கூடதான் அந்தாளு பாடுனாப்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க இப்பிடி சொல்றீங்க...? இப்பல்லாம் யாரு சாதி பார்க்குறா..!!"&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ்..பரமக்குடி மேட்டர் தெரியாதா..? அது என்னாவாம்!"&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ்..அது 'போலிஸ்-மக்கள்' கலவரம். சாதிச்சாயம் பூசாதீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா..ஹா! இப்போ யாரு சப்பைக் கட்டு கட்டுறது..? இத்தனை வருஷமா அக்டோபர் மாதங்கள்ல நடந்த குருபூஜைல இல்லாத விதிமீறலும், அராஜகங்களுமா செப்டம்பர் மாதம் நடந்த குருபூஜைல நடந்துச்சு..? அக்டோபர் 30 ல நடக்குற குருபூஜைக்கு அத்துமீறல்களை, தென் மாவட்ட மக்கள்க்கிட்ட கேட்டுப் பாருங்க. கத கதயாச் சொல்வாங்க! அப்பல்லாம் போலீஸ் கையை மட்டுமில்லாம எல்லாத்தையும் கட்டிக்கிட்டுதான் நின்னுட்டு இருப்பாங்க! இப்போ மட்டும் ஏன் விஜயகாந்த் பட போலீஸ் மாதிரி துப்பாக்கியத் தூக்குனாங்கன்னு யோசிச்சுப் பாருங்க. புரியும்."&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சும்மா எல்லாத்துக்கும் சாதி, மதம்ன்னு  இப்ப்டியே பேசுனா எப்பிடி பாஸூ..?"&lt;br /&gt;&lt;br /&gt;"அட..அதாங்க நிதர்சனம். 'நாடார் மஹாஜன சங்கம்'ன்னு அடிக்கிற போஸ்டர்ல எல்லாம் பாருங்க காமராஜர் இருப்பார். அவ்வளவு ஏங்க..? பிரபாகரன் பிள்ளை மார்ன்ற ஒரே காரணத்துக்காகவே பிரபாகரனை சப்போர்ட் பண்ற ஆளுகயெல்லாம் பார்த்துருக்கேன். இன்னும் பாடப்புத்தகங்கள்ல, சாதியே வேணாம்ன்னு சொன்ன, தந்தை பெரியாரோட இயற்பெயர் 'ஈ.வே.ராமசாமி 'நாயக்கர்'-அப்டின்னுதானே படிக்கிறோம்."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா..?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன நொப்படியா..? போன தடவை நடந்த தேவர் குருபூஜைக்கு, மதுரையிலிருந்து  வேன்ல தொங்கிட்டு அலப்பறை பண்ணிட்டுப் போனதில கீழ விழுந்து இறந்து போனது யார் தெரியுமா..? ஒரு இஸ்லாமியச் சிறுவன்!"&lt;br /&gt;&lt;br /&gt;"இதெல்லாம் மீடியா-வுல அவ்ளோ பரபரப்பா வரலையே பாஸ்!"&lt;br /&gt;&lt;br /&gt;"வராது! வரவும் விட மாட்டாங்க..ஏன்னா ஆதிக்க சாதி வாக்கு வங்கியும், சிறுபான்மை வாக்கு வங்கியும் ஆளுங்கட்சிக்கும் சரி. எதிர்க்கட்சிகளுக்கும் சரி பாதிக்கப் படுமே!"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க பாட்டுல பேசாதீங்க! அன்னா ஹாஜாரே-வையெல்லாம், ஆளுங்கட்சியை எதிர்த்துக்கிட்டுதான் மீடியா சப்போர்ட் பண்ண‌லயா..?"&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க..ஹாஜாரே, லோக்பாலுக்குள்ள கார்ப்பரேட் கம்பெனிகளும், மீடியாக்களும் வரணும்ன்னு ஒரு வார்த்தை சொல்லட்டும். அப்பறம் அவர் பேசுறதுக்கு, எவன் மைக்கை நீட்டுறான்னு பார்க்கலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாத்தையும் நொட்டை சொல்றீங்களே! ஏன் லோக்பால் வந்தா நாடு நல்லாருக்காதா..?"&lt;br /&gt;&lt;br /&gt;"அட ஏங்க நீங்க வேற..?! இதென்ன ஷங்கர் படமா..? லோக்பால் பில் பாஸாகிட்டா நம்மூரு டாஸ்மாக்குல, பீருக்கு கூலிங் சார்ஜுன்னு சொல்லி ரெண்டு ரூவா எக்ஸ்ட்ரா புடுங்குறானே அத நிறுத்திருவானா..? டவுன் பஸ் கண்டக்டரெல்லாம் 50 பைசா சில்லரை வாங்கி ஜோல்னா பைக்குள்ள போட்டுட்டுத்தான் டிக்கெட் போட ஆரம்பிப்பானா..? வயித்தெரிச்சலக் கிளப்பாதீங்கய்யா"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ, லஞ்சத்தை ஒன்னுமே பண்ண முடியாதுன்றீங்களா..?"&lt;br /&gt;&lt;br /&gt;"லஞ்சமென்ன ஒன்வே ட்ராஃபிக்கா..? நீங்க கொடுக்குறதை நிறுத்தினா ஆட்டோமேட்டிக்கா வாங்குறது நின்னுட்டுப்  போகுது!"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்...சரி..பேசுனா பேசிட்டே இருக்கலாம். 'எங்கேயும் எப்போதும்' படம் கலக்கலா இருக்காம்.. போவோம். வர்றீங்களா பாஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"போலாமே! ஆனா லேட்டாகிருச்சே. சரி டிக்கெட் பிளாக்ல வாங்கிக்கலாம். வாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-5516662350444817110?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/5516662350444817110/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=5516662350444817110' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/5516662350444817110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/5516662350444817110'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/09/blog-post_20.html' title='அணு அணுவாய்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-2402150302564993350</id><published>2011-09-19T11:15:00.003+05:30</published><updated>2011-09-19T11:30:59.312+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>வந்தானாம்...வென்றானாம்! - திரைவிமர்சனம்.</title><content type='html'>ஜீவா, ஒரு ஹிட் படம் கொடுத்தால், ஒம்போது மொக்கைப் படம் கொடுப்பதைத் தன் கொள்கையையாக வைத்திருக்கிறார் போலும்.அக்கொள்கைக்கு மற்றுமொரு விளக்கப் படமாக வந்திருக்கும் படம்தான் 'வந்தான்,வென்றான்'.நாம் ஏற்கனவே பார்த்த கதைதான்.அதைப் படமாக்கிய விதத்தில் சில புதுமைகள் செய்திருக்கிறார் இயக்குநர்,கண்ணன். ஆனால், படத்தின் முதல் பாதியில் எல்லா கேரக்டர்களும் போடும் சராமாரியான மொக்கையால் நாம் 'விட்டா போதும்டா சாமீ' மன நிலைக்கு வெகு சீக்கிரமாக வந்து விடுவதுதான் கொடுமையிலும் கொடுமை!&lt;br /&gt;&lt;br /&gt;ஜீவா என்ட்ரிக்குக் கூட கேட்காத விசில் சத்தமும், கரவொலிகளும் சந்தானத்தின் என்ட்ரிக்குக் கேட்டது.  ஆனால், அவரும் மொக்கை போடுவதால் புஸ்ஸ்ஸ் என்றாகி விடுகிறது. முதல் பாதியில் போட்ட சூர மொக்கைக்கு இரண்டாம் பாதியில் கொஞ்சமே கொஞ்சம் பிராயச்சித்தம் செய்திருக்கிறார் என்பது ஆறுதல். ஆனால்,அடிக்கடி க்ளோஸ்-அப்பில் 'தமிழேன்ன்ன்டா'  என்கிறார். இரு மராத்தியர்களுக்கு சண்டை மூட்டி விட்டு, 'தமிழேன்ன்ன்டா'  என்கிறார் பிறகொருமுறை  சம்பந்தமேயின்றி, குல்லா போட்டுக் கொண்டு வந்து, 'தமிழேன்ன்ன்டா'  என்கிறார் இதெல்லாம் என்ன எழவுக்கென்றே தெரியவில்லை. உள்குத்துகளை ஆராயும் என் கொடூரமனம் விபரீதமாகச் சிந்திக்க ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தா. செம்ம மேன்லி. வலது கையில் வாட்ச் கட்டும் தாதா வேடம்.'மௌனம் பேசியதே' நந்தாவா இது...? இறுக்கமான முகத்துடன் வந்து ஆச்சர்யப் பட வைக்கிறார். ஆனால், கூலர்ஸ் போட்டுக் கொண்டு, தல அஜித்க்கு போட்டியாக நடந்து கொண்டேயிருக்கிறார். எத்தனை டேக்கில் எத்தனை கி.மீ நடந்தாரோ, எல்லாம் பி.ஜி.முத்தையாவுக்குத்தான் வெளிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜீவா. கீழுதட்டிற்கு ரோஸ் சாயம் பூசி வரும் கதாநாயகன் வேடம். டான்ஸாடுகிறார். சண்டை போடுகிறார். காமெடி செய்கிறார்.அடிக்கடி நந்தாவிடம் வந்து போதிய இடைவேளைகளுடன் ஒரு த்ராபையான காதல் கதை சொல்கிறார்.நந்தாவும் மிக சிரத்தையாக அதை 'உம்' கொட்டிக் கொண்டு பூம் பூம் மாடு போலக் கேட்கிறார். வன் கொடுமை மச்சி!!&lt;br /&gt;&lt;br /&gt;தாப்ஸி பாடல்களுக்குப் பயன் பட்டிருக்கிறார். மற்றபடி, 'பெரிதாக' ஸ்கோப் ஒன்றுமில்லை. ஆனால், அவரை வைத்து இயக்குநர் முயற்சித்திருக்கும் விஷயங்கள் சுவாரசியம். இறுதியில் வரும் 20 நிமிட, ஜீவா- நந்தா சண்டைகள் ரசிக்க வைக்கிறது. ஆனால்,அதற்கு முந்தைய மட்டமான திரைக்கதையால், அது அவ்வளவாக எடுபடவில்லையென்பது சோகம். காலங்காலமாக ஒரு அப்பா, இரு அம்மாக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கான சண்டை என்ற 'அக்னி நட்சத்திர' பாணியை கட்டுடைத்தமைக்கு இயக்குநருக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமனின் இசையில் பாடலகளனைத்தும் கேட்கும் ரகம். காஞ்சனமாலா டாப்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பி.கு:&lt;/u&gt; படத்தின் ஆரம்ப‌ டைட்டில் கார்டில்,ஜெயா டிவிக்கு நன்றி தெரிவித்துவித்ததையும், காலங்காலமாக் நாம் வழங்கி வரும் உறுதிமொழியில், இந்தியர் அனைவரும் எனது "உடன்பிறப்புகள்" என்பதை மாற்றி, இந்தியர் அனைவரும் எனது  "சகோதர-சகோதரிகள்" என்று சொன்னதையும்,இறுதியில் முரசொலி இதழுக்கு நன்றி தெரிவித்ததையும் இந்தப் பதிவிற்கு தேவையில்லாத விஷயங்களாகக் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-2402150302564993350?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/2402150302564993350/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=2402150302564993350' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/2402150302564993350'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/2402150302564993350'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/09/blog-post_19.html' title='வந்தானாம்...வென்றானாம்! - திரைவிமர்சனம்.'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-8000928516172476061</id><published>2011-09-14T16:36:00.000+05:30</published><updated>2011-09-16T12:30:46.531+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்..'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை முயற்சி'/><title type='text'>உயிர்த்தெழுதல்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;இரவொன்றுக்கு ஒன்றுவீதமென&lt;br /&gt;பேய்க் கதைகள் பல&lt;br /&gt;சொன்ன பாட்டியவள்&lt;br /&gt;உக்கிரமாய் வெயில் பெய்த&lt;br /&gt;நாளொன்றில்&lt;br /&gt;மரித்துப் போனாள்!&lt;br /&gt;&lt;br /&gt;அவளைப் புதைத்த&lt;br /&gt;நாளின் இரவில்,&lt;br /&gt;ஊரை வலம் வந்த&lt;br /&gt;கருப்பண்ண சாமியின்குதிரை&lt;br /&gt;எனக்கான கதையை&lt;br /&gt;காற்றில்&lt;br /&gt;எழுதிச் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-8000928516172476061?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/8000928516172476061/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=8000928516172476061' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/8000928516172476061'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/8000928516172476061'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/09/blog-post.html' title='உயிர்த்தெழுதல்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-7164437610600870455</id><published>2011-08-29T10:45:00.005+05:30</published><updated>2011-08-30T08:32:12.706+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வருத்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொகுப்புப்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இரைக்கெதிரான இறையாண்மை!</title><content type='html'>காத்த வகுத்தலும் வல்லது அரசு!&lt;br /&gt;&lt;br /&gt;ஆளும் அ,தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகளில், தமிழுணர்வாளர்களால்&lt;br /&gt;பெரிதும் வரவேற்கப்பட்டதொரு வாக்குறுதி 'கச்சத்தீவை மீட்போம்' என்பதுதான். இலங்கைக்கெதிரான பொருளாதாரத் தடை விதிக்கும் தீர்மானம், இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டி தமிழக அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசிய பேச்சின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அதற்குள், இடி போல் வந்து இறங்கியிருக்கிறது 'கச்சத்தீவில் இந்தியர்கள் மீன் பிடிக்கக்கூடாது' என்ற அதிகாரப் பூர்வ அறிவிப்பு. இத்தனை நாட்களாக மறைமுகமாகச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது வெளிப்படையாகச் சொல்லி விட்டார்கள். இங்கு, இந்தியரென அறியப்படுவோர் யாரெனில் தமிழ‌ர்கள்! அறிவித்தவர் வெளியுறவுத் துறை அமைச்சர் S M கிருஷ்ணா.  சென்றமுறை, போர்ச்சுக்கல் அமைச்சரின் உரையை தன் உரையாகப் படித்தப் பாவத்திற்கு  பிராயச்சித்தமாகவோ என்னவோ, இம்முறை தன்னுரையை மிகச் சரியாகப் படித்திருக்கிறார். இது ஒரு இனத்தின் வாழ்வாதாரத்தையே அழிக்கும் செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய முப்பதாண்டு காலமாக, இலங்கைக் கடற்படையினரால் மட்டுமே தாக்கப் பட்டு வந்த தமிழக (இந்திய?) மீனவர்கள், இப்போது  இலங்கை மீனவர்களாலும் தாக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் இன்னும் எகத்தாளமாக, நம் மீனவர்களைப் பார்த்து கொக்கரித்துத் தாக்குவதற்கு அணி சேர்க்கும் முறையாக வந்துள்ளது இந்த அறிவிப்பு.சர்வதேச எல்லையைத் தாண்டுவது குற்றமா..? எனில் கண்டிப்பாக மறுக்கவே முடியாத குற்றம்தான்.ஆனால், அதற்குத் துப்பாக்கிச் சூடு  நடத்துவதையும்,வன்மமாகத் தாக்குவதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்திய மத்திய அரசும், இலங்கைக்கு வக்காலத்து வாங்காத குறையாக, இறையாண்மை போன்று சாமானிய மக்களுக்குப் புரியாத வகையில் அறிக்கை விடும் விளையாட்டையையே அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. இப்படியே இது தொடருமாயின், கச்சத்தீவு மட்டுமின்றி மிச்சத்தையும் எழுதிக் கொடுத்து விட்டுப் போக வேண்டியதுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;'என் மீனவை நீ அடித்தால்,உன் மாணவனை நான் அடிப்பேன்' என்று சீமான் சொன்னபோதும்,அவரின் கட்சிக்காரர்களில் சிலர், தமிழகம் வந்த சிங்கள புத்த பிட்சுக்களைத் தாக்கிய போதும் அவற்றைக் கண்டித்தவர்கள்தான் நாம். ஆனால், இப்போது நடப்பவற்றைப் பார்த்தால், நம்மால் கண்டிக்கவும் முடியாதோ! என்றெண்ணத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும், தமிழக மீனவர்கள் சம்பந்தமான செய்திகளைப் பார்க்கும் போதெல்லாம், தோன்றும் ஒரே கேள்வி இதுதான்! "நம் இந்திய கடலோரக் காவல் படை எதைத்தான் புடுங்கிக் கொண்டிருக்கின்றது...?"&lt;br /&gt;&lt;br /&gt;************************&lt;br /&gt;&lt;br /&gt;பேரறிவாளன்,சாந்தன்,முருகன்!&lt;br /&gt;&lt;br /&gt;கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தூக்கு மேடையில் நிற்கும் மூவரின் உயிர் காப்பதற்கான போராட்டம் தமிழ்த் தேசியவாதிகளிடமும், மனித உரிமை ஆர்வல்ர்களிடமும், பொது மக்களிடமும்  வலுத்து வருகின்றது.தூக்குத் தண்டனைக்கு முற்றிலும் எதிரானவனல்ல நான்.இங்கேயே,'கசாப்'-பை தூக்கில் போடச் சொல்லி எழுதியும், நண்பர்களிடையே பேசியும் இருக்கின்றேன்.தர்மபுரி வழக்கிலும்,நொய்டா வழக்கிலும் வெளியானதீர்ப்புகளைக் கைதட்டி வரவேற்றிருக்கின்றேன்.அவ்வழக்குகளின் Transparency அப்படி! ஆனால், இராஜிவ் தொடர்பான,இவ்வழக்கை விசாரித்த விதத்திலேயே,ஏகப்பட்ட குளறுபடிகள். அதிகாரமட்டங்களில் பலர் தப்பியிருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகின்றது. அப்படியிருக்க, 20 வருடங்கள் சிறையிலுருந்த பின்னும் இம்மூவரையும் தூக்கில் போடுவது ஏன்..? திருச்சி வேலுச்சாமி போன்றோர் எழுப்பும் கேள்விகளுக்கு அரசோ, புலனாய்வுத் துறையோ பதில் சொல்லாதது ஏன்..? என்றும் தெரியவில்லை! குறைந்தபட்சம் இராஜிவ் கொலை தொடர்பான இவ்வழக்கை மீண்டும் உருப்படியாக, அதே சமயம் மிக மிக வேகமாகவும் விசாரிப்பதற்காகவாவது அரசு உத்தரவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்காக,மூன்று பெண் வழக்கறிஞர்களின் உண்ணாவிரதம், ஜெயலலிதா,பிரத்திபா பாட்டில்,சோனியா காந்தி ஆகிய மூன்று பெண்களையும் நோக்கியது.இவர்களுக்கும்,நீதியின் பெயரால‌ நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்.மடத்தனமாக,உணர்ச்சி வேகத்தில், நடந்த செங்கொடியின் தீக்குளிப்பும் வருத்தப்பட வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மெய்ப்பொருள் காண்பதறிவு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;b&gt;♠ ராஜூ ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-7164437610600870455?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/7164437610600870455/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=7164437610600870455' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/7164437610600870455'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/7164437610600870455'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/08/blog-post_29.html' title='இரைக்கெதிரான இறையாண்மை!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-7872513612391972532</id><published>2011-08-23T12:02:00.004+05:30</published><updated>2011-08-23T12:25:31.409+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நையாண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீடியாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஊழலை ஒழிப்போம்!</title><content type='html'>&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;நோக்கம் :-  &lt;/span&gt;ஊழலை ஓழித்தல், ஒளித்தல் அல்லது தொப்பையைக் குறைத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;தேவையான பொருட்கள்:- &lt;/span&gt;ஒரு பைஜாமா, ஜிப்பா, (வெள்ளை நிறம்). ஒரு குல்லா, (அதுவும் வெள்ளை நிறத்தில் இருப்பின் ,உசிதம்) இந்திய தேசியக் கொடி ஒன்று, புகழ் பெற்ற 'சேனல்'களின் மைக்குகள் நான்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;செய்முறை விளக்கம்:-&lt;/span&gt;&lt;br /&gt;முதலில் ஜிப்பா, பைஜாமா, குல்லா போன்ற அத்தியாவசியப் பொருட்களை அணிந்த பிறகு,   நீங்கள் தேர்ந்தெடுத்த மைதானத்திலோ அல்லது அரசு அனுமதித்த மைதானத்திலோ சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் மேலே தூக்கி, தலையைக் கொஞ்சம் சாய்வாக வைத்துக் கொண்டு, "ராம்..ராம்" என்று இராகத்தோடு பாட வேண்டும். அவ்வப்போது,'வந்தே மாதரம்' கூட சொல்லலாம். தப்பில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு, நம் முன்பு ஏதாவது சேனலின் மைக் நீட்டப்படும்போது வாயில் வந்தபடி பேசலாம்.கத்தலாம்.உளறலாம்.கேட்பதற்கு மக்கள் இருக்கிறார்கள். கவலை வேண்டாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;முடிவு:-  &lt;/span&gt;ஊழல் ஒழிந்து, இந்தியத் தாய்த் திரு நாடு சுபிட்சமாகி விடும்.அப்படியே, உங்கள் தொப்பையும் குறைந்து நீங்களும் ஸ்லிம் ஆகிவிடுவீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-7872513612391972532?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/7872513612391972532/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=7872513612391972532' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/7872513612391972532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/7872513612391972532'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/08/blog-post_23.html' title='ஊழலை ஒழிப்போம்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-2621299692267884769</id><published>2011-08-16T12:14:00.004+05:30</published><updated>2011-08-16T12:41:43.162+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>ரௌத்திரம் - கடவுள் ஜீவா உங்களை இரட்சிப்பாரக!</title><content type='html'>"சார், சென்னைல ஒரு பெரிய ரவுடி சார். 'திமிரு' விஷால் மாதிரி, நீங்க அவரை அடிக்கப் போக, அவரு 'சண்டைக்கோழி' லால் மாதிரி, உங்களை கொலை பண்ணப் பார்க்குறாரு. உங்க அப்பா, ஏ.சி. மாமா எல்லாரும் சேர்ந்து உங்களை 'கிரீடம்'அஜித் மாதிரி பாதுகாக்கப் பார்க்குறாங்க! ஆனா, நீங்க‌ 'கில்லி' விஜய் மாதிரி அவரை முடிக்கிறீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் கோகுல்,ஜீவாவிடம் கதை சொல்லும்போது இப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோ- ஹிட்டானவுடன், தான் ஒரு ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுக்க வேண்டும் என்று ஜீவா நினைத்திருக்லாம். தப்பில்லை. ஆனால், அதற்குத் தகுந்த கதை-திரைக்கதையைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஒருவேளை, கோ-வுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்ட (அப்படிதான் நினைக்கிறேன்) படமெனில், ஜீவாவின் மனதைரியத்தைப் பாராட்டுவதில் தவறேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ஜீவாவின் தாத்தா பிரகாஷ்ராஜ் ஒரு 'நாமார்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்' பார்ட்டி! சிறு வயதிலிருந்து அவரிடம் வளரும் ஜீவா ஆட்டோமேட்டிக்காக, 'ரௌத்திரம்' பழகுகிறார்.பின் அவர் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வந்து,  அப்பாவிடம்'வளர்கிறார்'.கூடவே ரௌத்திரமும் பழகுகிறார்.அவ்வப்போது ஸ்ரேயாவுடனும் பழகுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சமயத்தில், கௌரி, கௌரி என்று ஒரு ரவுடிக்கு, ஏக பில்டப்பு கொடுக்கப் படுகிறது. இயக்குநருக்கு, 'ஓள'காரத்தில் அப்படியென்ன விருப்பமென தெரியவில்லை.  பில்டப்பென்றால், உங்க வீட்டு பில்டப்பு எங்க வீட்டு பில்டப்பில்லை ங்கொக்காமக்கா பில்டப்பு. நாமும் "எவந்தாண்டா கௌரி..காட்டித் தொலைங்கடா" என்று எரிச்சலின் உச்சத்திற்குச் செல்ல,'காற்றிலாடும் நாணலுடலுடையான்' போல வந்து நிற்கிறார் நம்ம 'பொல்லாதவன்' புகழ் சென்ராயன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ராயன் உடல்மொழியில், வடசென்னை ரவுடியைக் கச்சிதமாகக் கொண்டுவந்தாலும், அதற்கு முன்னர் அவருக்குக் கொடுத்த பில்டப்பிற்கு ஏற்றாற்போல் அமையவில்லை. குருவி தலையில் பனம்பழம் வைத்ததைப் போலாகி விட்டது அவருடைய பாத்திரம்.ஆனாலும் சமாளித்து, குரங்குபெடல் போட்டு சில காட்சிகளில் ஷோபிக்கிறார். குறிப்பாக, மார்க்கெட்டில் 'ஸ்ரேயா'வை மிரட்டும் கட்சியில் பின்னி பெடெலெடுத்திருக்கறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரேயா-வழக்கம் போல வருகிறார்.காட்டுகிறார். தமிழ் தப்பித் தவறிக்கூட தனக்கு, 'லிப் ஸிங்க்' ஆகிவிடக்கூடாதெனக் கங்கணம் கட்டிக் கொண்டு பேசுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் இசையென்று ஒன்று இருப்பதாகத் தெரியவேயில்லை. கணேஷ் ஆச்சார்யாவும், ரோபோ சங்கரும் வரும் ஒரே ஒரு பாடல் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் கவர்கிறது. ஓளிப்பதிவில் சிற்சில கேமராக் கோணங்கள் பாராட்டத் தகுந்தவை. சத்யனும் ஸ்ரீதரும் கொஞ்சம் கலகலக்க வைக்கிறார்கள்.அரசு-வின் சண்டைக்காட்சிகள் அருமை. ஆனால், எத்தனை முறைதான் அதையே பார்த்திக் கொண்டிருப்பது!!&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநரைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். என்னதான் பலவீனமான திரைக்கதை என்றாலும் சில காட்சியமைப்புகளால் தன்னை நிரூபிக்கிறார். வெட்டுப்பட்டுக் கிடக்கும், காவல்துறை அதிகாரியை சக அதிகாரிகள் உட்பட‌ அனைவரும்  சும்மா பார்த்துக் கொண்டிருக்க, ஒருபடி மேலே போய் நிருபரொருவர் அதைப் புகைப்படமெடுக்க, ஜீவா வந்து அவரை ஓங்கி ஒரு அடி விடுவார். பாடலின், ஐந்தே வினாடிகளில் வரும் காட்சி இது என்றாலும், இது மானங்கெட்ட மீடியாக்களுக்கு இயக்குநர் கொடுத்த செருப்படி!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, படத்தின் இறுதிக்காட்சி ஒரு அழகான மற்றும் அழுத்தமான‌ சிறுகதை. அதுவரை விசிலடித்துக் கொண்டும், கத்திக் கொண்டுமிருந்த இரசிகர்கள் அக்காட்சியில் மட்டும் அமைதியாவதே அதற்கு சாட்சி! முன்னமே இறுதியை வடிவமைத்து விட்டு, திரைக்கதை எழுத‌த் தொடங்கியிருக்கலாம். எனக்கு கிளைமேக்ஸ் மிகப் பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் படமாம்.வாழ்த்துகள் கோகுல்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-2621299692267884769?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/2621299692267884769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=2621299692267884769' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/2621299692267884769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/2621299692267884769'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/08/blog-post.html' title='ரௌத்திரம் - கடவுள் ஜீவா உங்களை இரட்சிப்பாரக!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-3031609810744825434</id><published>2011-08-11T12:51:00.006+05:30</published><updated>2011-08-11T14:10:16.896+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Mangatha Songs'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாடல் விமர்சனம்'/><title type='text'>மங்காத்தா - ஆடாம ஜெயிப்போமடா!</title><content type='html'>'கிங் ஆஃப் ஓப்பனிங்' தல-யின் ஐம்பதாவது படம் 'மங்காத்தா'. சில பல அலைக்கழிப்புகளுக்குப் பிறகு, ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கிடையில் பாடல்கள் வெளியாகியிருக்கின்றது. படத்துல, அஞ்சு பேரு  கெட்டவனுக,அதுல ஒருத்தன் ரொம்பக் கெட்டவன்! இதுதான் படத்தின் ஒன்லைனென இயக்குநர். வெங்கட்பிரபு சொல்கிறார். படத்தின் ஸ்டில்களில் தல செம்ம 'ஸ்டைல் லுக்'காக இருக்கிறார். எந்தப் படத்திலும்  அவர் அப்படித்தான் என்றாலும், இந்தப் படத்தில் கொஞ்சம் ஸ்பெஷல்.&lt;br /&gt;&lt;br /&gt;யுவனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். புலிக்குப் பிறந்த புலி. இந்தப் புலியின் உடம்பில் கொஞ்சம் கோடுகளும் அதிகம். ஏற்கனவே யுவனால், தல-க்கு அமைந்த ராயலான  'பில்லா' ஆல்பத்திற்குப் பிறகு மீண்டும் தலயுடன் 'மங்காத்தா'வில் இணைந்திருக்கிறார். 'ஆரண்ய காண்டம்', 'அவன்-இவன்' என சீரியஸான ஆல்பங்களுக்குப் பிறகு யுவனின் ஜாலியான ஒரு ஆல்பம் 'மங்காத்தா'.  அதுவும் பங்காளி.வெங்கட் படங்களென்றால், யுவன் பட்டையைக் கிளப்புவார். ஹேட்ரிக் அடித்த இந்த ஜோடி,இப்போது ஃபோட்ரிக்குகாக களம் காண்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓவர் பில்டப்பு ஒடம்புக்காவது மச்சி" என்றொரு உலகப் பொது மறை இருப்பதாலும், "வெட்டிப் பந்தா வேஸ்ட்" என்ற பிறிதொரு  விதியும் அதையே வழிமொழிவதால், மேட்டருக்குள் போவோம் வாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-2uRzpgDihjI/TkOEdGbv6CI/AAAAAAAAAuE/JmrKHAwL1Uc/s1600/2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/-2uRzpgDihjI/TkOEdGbv6CI/AAAAAAAAAuE/JmrKHAwL1Uc/s320/2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5639496793876064290" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;பல்லேலக்கா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது (வி)நாயகனின் கொள்கை விளக்கப் பாடல். ஆரம்பத்தில் கொஞ்சம் 'தேவிஸ்ரீபிரசாத் தனமாக 'ஆரம்பிக்கும் பாடல்,தப்பைக் கூட தப்பாம சரியா செய்யணும், அடுத்தவன் காசை ஆட்டையைப் போடணும் போன்ற 'உயரிய' தத்துவங்களைப் பேசுகிறது. வழக்கமாக, தல-யின் இம்மாதிரியான பாடல்களை வைரமுத்துதான் எழுதுவார். ஆனல், இந்த முறை கங்கை அமரன் எழுதியிருக்கிறார். வயசானாலும் அமரன் அமரனாகவே இருக்கிறார். பாடல் வரிகளில் அவ்வளவு இளமை துள்ளி விளையாடுகிறது. இது அமரனுக்கு இன்னொரு, 'ஜில்பா' பாடல் கார்த்திக் வழக்கம் போல கலக்கியிருக்கிறார்.  இதில் புதியதாகப் பாடியிருப்பது மு.க.அழகிரியின் புது மருமகள் அனுஷா! இன்னும் கொஞ்ச நாட்களில், சுசித்ராவுக்கு செமத்தியான போட்டியாக வருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;அம்பானி தலைமுறை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சரோஜா சாமான் நிக்காலோ' மாதிரியாக முயற்சித்திருக்கிறார்கள். அந்தப் பாடலைப் போலவே, 'மச்சி, ஓப்பன் த பாட்டில்' என்ற பிரேம்ஜி-யின் 'கத்தலோடு' ஆரம்பிக்கும் பாடல். போகப் போக உச்சத்தைத் தொடுகிறது.&lt;br /&gt;செம்ம குத்து மச்சி!  அதிக நாட்களுக்குப் பிறகு மனோ இந்தப் பாடலில் ரீ-என்ட்ரி. துள்ளல் பாடல்களின் மன்னர்களாக இருக்கும் திப்பு, ஹரிச்சரண், நவீன் ஆகியோர் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். பாடலின் ஓரிடத்தில் வரும் நீண்டா சாக்ஸ் கலக்கலோ கலக்கல்.வாலியும் தன் பங்குக்கு பேனாவில், உற்சாக 'மை' ஊற்றியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில், இராமன் ஆண்டாலும் என்ற ரஜினி பாடலை ரீமிக்ஸியிருக்கிறார்கள். அ நேகமாக‌&lt;br /&gt;அதுதான் இப்பாடலில், தல-யின் என்ட்ரியாக இருக்க வேண்டுமென யூகிக்கிறது இரசிக மனம். அதுல பாருங்க, தலைவருகக்கே வெள்ளியில்தான் கூஜா! ஆனால், தல-க்கு தங்கத்தில். இதுதான் 'பிக் ஆஃப் த ஆல்பம்' பாஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;கண்ணாடி நான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பாடலில், ஸ்பெஷலாக எதுவுமில்லை எனினும் ரசிக்கத்தகுந்த அருமையான மெலடி இது! சரணும் பவதாரிணியும் உருகியிருக்கிறார்கள். ஆடுகளத்தின் 'அய்யய்யோ' பாடலுக்குப் பிறகு, சரண் எந்தப் பாடலைப் பாடினாலும் அது கேட்க‌ நன்றாகத்தானிருக்கிறது. அவ்வளவு அழகாகப் பாடுகிறார் மனிதர்.பவதா-வும் அவருக்குச் சளைக்காமல் ஈடு கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சமகாலக் காதலர்கள், 'காலர் டியூனாக' வைக்கத் தகுந்தப் பாடல்&lt;br /&gt;எழுதியிருப்பவர் நிரஞ்சன் பாரதி."என் மேனி நீ, உன் ஆடை நான்" என சிற்சில இடங்களில் சிக்ஸர் அடித்திருக்கிறார்.பாரதியார் பேரனாம்! கோடம்பாக்கத்துல நீங்களும் ஒரு ஓரத்துல இருந்துட்டு போங்க பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;வாடா பின்லேடா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரிஷும், சுச்சியும் பாடியிருக்கிறார்கள். சுசியின் ஹஸ்கியான வாய்ஸ் இந்தப் பாடலுக்கு அழகாகப் பொருந்திச் சொல்கிறது. கிரிஷ் ஓகே! இசையைப் பொருத்த மட்டில், ஏற்கனவே பலமுறை கேட்டுக் கேட்டுப் பழகிப் போன இசைதான்! ஆனால் புளிக்காத இசை. இசையருவி, சன்மியூஸிக்குகளின் புண்ணியத்தில் ஹிட்டாகலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நூலாடை நிற்காத இடுப்பு - நீ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;வந்து சோறாக்கும் அடுப்பு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அவ்வ்வ்..வாலி ஸார்..! ஏன் ஸார் இப்படி..?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;என் நண்பனே...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யுவன், இந்தப் பாடலைக் கொஞ்சம் வித்தியாசமாக முயன்றிருக்கிறார்.  இசை உறுத்தாமல், அளவாக அழகாக வருகின்றது. ஆனால், மதுஸ்ரீ தான் தமிழைக் கடித்துத் துப்புகிறார்.  வழக்கமாக, யுவனின் இசையில் அவரே பாடும் பாடல்களெல்லாம் அதகளமாக அமையும். அந்த வகையில், இந்தப் பாடல் கொஞ்சம் ஏமாற்றம்தான்! ஆனால், வாலி  செஞ்சுரி அடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;உன் போலவே நல்ல நடிகன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;ஊரெங்கெலுமில்லை ஒருவன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அப்பறமென்ன..? நான் வேற சொல்லணுமா மக்களே!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;விளையாடு மங்காத்தா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டைட்டில் பாடல்! படத்தின் ப்ரோமா-வுக்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட பாடல்தான். இந்தப் பாடலின் இசைக்கோர்வை, அமர்க்களமான‌ அதகளம். அட்டகாசமான சவுண்டு மேக்கிங்.யுவன், சுச்சி, ரஞ்சித் என பல ஹிட் பாடகர்கள் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள் என்றுதான்  சொல்ல வேண்டும். மறுபடியும் கங்கை அமரன். பெப் குறையாமல் எழுதியிருக்கிறார். அதுவும் அந்த இந்தி வரிகளை சுச்சித்ரா பாடும் போது காதுக்குள்ள ஷாக்கடிக்கும் மச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;விளையாடு மங்காத்தா - கிளப் மிக்ஸ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட அதே பாடல்தான். ஆனால், டிஸ்கோத்தே பார்ட்டிக்காக ஃபாஸ்ட் பீட்டில், செம்ம துள்ளலாக‌ ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள்.அந்தப் பாடலே செம்ம ஸ்ட்ராங். இது டபுள் ஸ்ட்ராங். பார்ட்டிகளில், கெட்ட ஆட்டம் போட மற்றொரு துள்ளலிசைப் பாடல் ரெடி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-tVWhhaSlqrg/TkOEdN-PfSI/AAAAAAAAAt8/VxHcjLGrv6k/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/-tVWhhaSlqrg/TkOEdN-PfSI/AAAAAAAAAt8/VxHcjLGrv6k/s320/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5639496795899788578" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தத்துல, எழுந்துட்டோம் மச்சி! கிளம்பி வந்துட்டே இருப்போம். மற்றபடி, 'தல‌-த்ரிஷா கூட்டணி ஒர்க்-அவுட் ஆகாது,ஹாலிவுட் காப்பி, ஊத்திக்கிரும்,இது என்னமோ சரியாப்படலை' என்றெல்லாம் புலம்பும் ESP சக்தி படைத்த, 'அழுக்கு தமிழ் மகன்கள்'எல்லாரும் கொஞ்சம் ஆஃபீஸ் ரூம்ல வெயிட் பண்ணுங்க! சரியாகவே படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;மங்காத்தா - ஆட்டம் சூடு பிடிக்குது சார்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-3031609810744825434?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/3031609810744825434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=3031609810744825434' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/3031609810744825434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/3031609810744825434'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/08/mangatha.html' title='மங்காத்தா - ஆடாம ஜெயிப்போமடா!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-2uRzpgDihjI/TkOEdGbv6CI/AAAAAAAAAuE/JmrKHAwL1Uc/s72-c/2.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-8293742582551714734</id><published>2011-07-25T10:52:00.004+05:30</published><updated>2011-07-25T11:00:51.167+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>தெய்வத்திருமகள்!</title><content type='html'>விக்ரம், வெளியே போனால் வீட்டைப் பூட்டி சாவி எடுத்துக் கொண்டுச் செல்லுமளவிற்கு மனம் வளர்ச்சி குன்றியவர். அதாவது நம் நித்யானந்தாவைப் போல மனதால் ஆறு வயதே ஆனவர். ஊட்டியில் கொகெய்ன் விற்க வழியேதும் இல்லாததால் சாக்லேட் உற்பத்தி ஆலையில் வேலை செய்கிறார். 'சம்பவம் நடக்கும் போது, இருவரில் ஒருவருக்கு விவரம் இருந்தால் போதும்' என்ற நியூட்டன் மெய்ப்பிக்க மறந்து போன விதியால் விக்ரமிற்கு குழந்தை பிறக்கிறது. மேற்சொன்ன விதிக்கும்,குழந்தையின் பாலுணர்விற்கும் (Gender) யாதொரு தொடர்பும் இல்லாததாலொ என்னவோ அக்குழந்தை பெண் குழந்தையாக இருக்கின்றது. இனி அக்குழந்தைக்கும் (சாரா) விக்ரமிற்கும் நடக்கும் பாசப்போராட்டம்தான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே வயதாலான தந்தை, மகளுக்குமிடையேயான கதை என்ற ஒற்றை வரியை எடுத்துக் கொண்டு திரைக்கதைசெய்திருக்கிறார் இயக்குந‌ர் விஜய்.திரைக்கதை என்று பார்த்தாலும்,&lt;br /&gt;அது ஏற்கனவே அவர் கையாண்ட‌,'பொய் சொல்லப் போறோம்' படப்பாணி திரைக்கதைதான். சந்தானம்,அனுஷ்கா,எம்.எஸ்.பாஸ்கர் உதவியுடன் அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;விக்ரம்-சாராவுக்கு இடையிலான உணர்வுகளை, ஒய்.ஜி.எம் -அனுஷ்கா உறவினால் உணர்த்துதல், எம்.எஸ்.பாஸ்கர் அமலாபாலிடம்  ஒரே ஒரு முறை கோபத்துடன் பேசுவதால் ஏற்படும் திருப்பம், டாக்டரானாதான் உன்னைப் பார்த்துக்க முடியுமா..? என்பது போலான வசனங்கள் என சிற்சில இடங்களில் பந்து பவுண்டரியைத் தாண்டி பறக்கிறது.  இவற்றைத் தவிர்த்து வரும் ப‌லவற்றை,  இயக்குநர் விஜயை மட்டும் தெரிந்திருந்தால் ரசிக்கலாம். ஆனால், நமக்கு 'ஜெஸ்ஸி நெல்சனையும்' தெரிந்திருப்பதால் அவற்றில் ஒன்ற முடியவில்லை. ஒருவேளை விஜயுக்கும் கூட‌ நெல்சனைத் தெரிந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;படத்தில் பிடித்த ஒரு காட்சி:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாராவுக்காகக் 'கதை' தேடி வரும், விகரமுக்கும் எம்.எஸ். பாஸ்கருக்கும் இடையே நடக்கும் சிறு உரையாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;"எவ்ளோ நாள்தான் இப்டியே இருப்பே!! உனக்கு இன்னும் வயசிருக்கு, உன்னையும் நிலாவையும் பார்த்துக்க ஒரு பொண்ணு வேணாமா..?" - எம்.எஸ்.பாஸ்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் இராஜி இருக்காளே!" -இது விக்ரம். (இராஜி = அடுத்தவன் மனைவி).&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காட்சி வேறு யாருக்குமல்ல.இயக்குநர் விஜய்க்குதான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-8293742582551714734?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/8293742582551714734/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=8293742582551714734' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/8293742582551714734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/8293742582551714734'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/07/blog-post_25.html' title='தெய்வத்திருமகள்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-2695160509413484812</id><published>2011-07-18T10:00:00.001+05:30</published><updated>2011-07-18T10:02:55.255+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்..'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை முயற்சி'/><title type='text'>நட்பு!</title><content type='html'>பழையன கழித்தலில்&lt;br /&gt;சிக்கியது &lt;br /&gt;நண்பனொருவன் முன்பு&lt;br /&gt;எழுதிய கடிதமொன்று!&lt;br /&gt;கடிதத்தில் நண்பனின் &lt;br /&gt;பெயரிருந்த இடம்&lt;br /&gt;கரையான் அல்லது&lt;br /&gt;க‌ரையான்களுக்கு&lt;br /&gt;இனித்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரிவன் என்ற கேள்வி&lt;br /&gt;நினைவுகளின் எண்ணெயில்&lt;br /&gt;வழுக்கிக் கொண்டே&lt;br /&gt;இருந்தது பதிலேயின்றி.&lt;br /&gt;கடைத் தெருவில்,&lt;br /&gt;மிட்டாய் திருடிய சக‌&lt;br /&gt;கால்சட்டைகளையும்&lt;br /&gt;சுவரேறி சிறுநெல்லி&lt;br /&gt;பறித்த இளம்பிராயங்களையும்&lt;br /&gt;Facebook- ல் பிடிப்பது &lt;br /&gt;சற்று கடினம்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-2695160509413484812?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/2695160509413484812/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=2695160509413484812' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/2695160509413484812'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/2695160509413484812'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/07/blog-post_18.html' title='நட்பு!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-3528880712057577900</id><published>2011-07-12T16:43:00.001+05:30</published><updated>2011-07-12T16:47:21.988+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்..'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை முயற்சி'/><title type='text'>தேடல்!</title><content type='html'>மனப் பாலையின்&lt;br /&gt;சுடுமணல்&lt;br /&gt;பாதச் சுவடுகளில்&lt;br /&gt;எங்கிருக்கிறது எனக்கான&lt;br /&gt;கொலுசு&lt;br /&gt;அணிந்த பாதத்தின்&lt;br /&gt;சுவடு.&lt;br /&gt;&lt;br /&gt;மழை&lt;br /&gt;கரைத்திருக்கலாம்..&lt;br /&gt;காற்றானது&lt;br /&gt;கலைத்திருக்கலாம்.&lt;br /&gt;எதுவாகினும்,&lt;br /&gt;மீட்டெடுக்க முடியாத&lt;br /&gt;தருணங்களின்&lt;br /&gt;தொகுப்புதான் காதல்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;-ராஜூ&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-3528880712057577900?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/3528880712057577900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=3528880712057577900' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/3528880712057577900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/3528880712057577900'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/07/blog-post.html' title='தேடல்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-6892789842070591635</id><published>2011-06-29T16:13:00.005+05:30</published><updated>2011-06-29T16:25:33.010+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொகுப்புப்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மாமியார் மீது சத்தியம் செய்தல்.</title><content type='html'>மெரினாவில் ஒளி நினைவேந்தல் கூட்டத்தைப் பொறுப்பேற்று நடத்தியவர்கள் மீது, மூன்று வழக்குகள் போட்டுள்ளதாம் சென்னை மாநகரக் காவல் துறை.இதெல்லாம் எதிர்பார்த்ததுதான்! ஆனால், வழக்கு போட்டதற்கான காரணங்களைக் கேட்டால் தான் நம் வாயால் சிரிக்க முடியவில்லை.  உதாரணத்திற்கு ஒன்று என்னவெனில், மெழுகுவர்த்தி ஏற்றிய‌ போது, பயன்படுத்திய 'கப்' களை கடற்கரையிலேயே போட்டு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி விட்டார்களாம். அதற்காக வழக்காம்.  'சத்தியம் செய்யத் தெரியாத யோக்கிய‌ன், மாமியார் மேல‌ சத்தியம் செஞ்சானாம்'' என்று இதைத்தான் ஊர்ப்பக்கம் குறிப்பிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை நாட்களாக, கடற்கரையில் பிளாஸ்டிக், பாலிதீன் பேப்பர்களைப் பயன் படுத்தி விட்டு, குப்பைத் தொட்டியில் கூட போடாமல், அப்படியே போட்டுச் செல்லும் புண்ணியாத்மாக்கள் மீது இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்திருக்கிறதாம் நம் மாண்புமிகு காவல்துறை..? நினைவேந்தலில் பங்கு பெற்றவர்களில் பலரும் பயன்படுத்தியது மக்கிப் போகும் வகையான காகிதத்தால் செய்யப்பட்ட 'கப்' கள்தாம்.  வழக்குப் பதிவு செய்தோர்,ஆங்காங்கே,'இந்திய இறையாண்மை', 'தேசிய பாதுகாப்புச் சட்டம்' என சாமானியர்களுக்குப் புரியாத 'வார்த்தை'களைச் சொல்லி வழக்கு போட்டிருக்கலாம்.அப்படிப் போட்டிருந்தால்,நாம் ஏன் கேட்கப் போகிறோம்..? நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிப்பதற்கு வெளியிலிருந்து ஆட்கள் தேவையில்லை.இவர்களே போதும்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக சட்டமன்ற தேர்தலில்,காங்கிரஸின் படுதோல்விக்கு, திமுக-வினர்தான் முழுக்காரணம்.ஈழம் ஒரு காரணமே அல்ல. எனறவர்கள் இந்த நினைவேந்தலில் பங்கெடுத்த பல்லாயிரக்கணக்கான மக்களைப் பார்த்து எங்கே முகத்தை வைத்துக் கொள்ளப் போகிறார்கள்..? எனற கேள்வியும் நமக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;அண்டை மாநிலமான ஆந்திரா ,தெலுங்கானா குறித்து பற்றி எரிந்து கொண்டிருக்க மற்றொரு பக்கம் கர்நாடகத்தில், மிக 'சீரியஸாக' ஒரு 'காமெடி' அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இவர் சத்தியம் செய்வாராவென அவர் கேட்க, இவர் அவரைச் செய்யச் சொல்ல, சரியென்று முடிவாகி இறுதியில் இருவருமே (குமாரசாமி, எடியூரப்பா) சக்கரைப் பொங்கல் செய்யவில்லையாம். கர்நாடக மக்களைப் பார்த்தால், இவர்களிருவருக்கும் காமெடி பீஸ்களைப் போலிருக்கும் போல.இதில் ஹைலைட் என்னவென்றால், எடியூரப்பா பல்வேறு மடாதிபதிகளின் கருத்திற்கிணங்கி, தான் சத்தியம் செய்யவில்லையென அறிவித்திருப்பதுதான். ஆக, பா.ஜ.க மடாதிபதிகளால்தான் நடத்தப்படுகிறதென மீண்டுமொருமுறை தெரிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்,பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் எங்கே கஸாப்பையும்,அப்சல் குருவையும் மாரியாத்தா மீது,தாங்க்ள் எந்தக் குற்றமும் செய்யவில்லையென சத்தியம் செய்யக்கூறி, 'பூரண கும்ப மரியாதை'யுடன் (இறையாண்மை) பாகிஸ்தான் அனுப்பிவைத்து விடுவார்களோவென்ற ஐயமும் எழுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் அதிமுக வெற்றி. ஜெ.-வை சோனியா தேநீர் விருந்துக்கு அழைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸின் தோல்விக்குக் காரணம் திமுக-தான்!.- காங்கிரஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தோற்று விடுவோம் என்று தெரிந்துதான் தேர்தலிலேயே நின்றோம் - யுவராஜா (இளைஞர் காங்கிரஸ்)&lt;br /&gt;&lt;br /&gt;சோனியா டெல்லியில் இல்லாத போது, ஜெயலலிதா டெல்லி விசிட்.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி சென்ற கலைஞரை, காங்கிரஸார் யாரும் சந்திக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணி குறித்து காங்கிரஸ்தான் எங்களைக் கேட்க வேண்டும் - ஜெ.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்குள் கூட்டணி நகமும் சதையைப் போல அப்படியேதான் உள்ளது - காங்கிரஸ் &amp;amp; திமுக.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸிற்கு கொடுத்த  அவகாச நேரம் முடிந்து விட்டது- ஜெ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;டிங்...டிங்...டிங்...முதல் ரவுண்டு ஓவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லோக்பால் சட்டத்தில் பிரதமரைச் சேர்க்கக் கூடாது - ஜெ.&lt;br /&gt;&lt;br /&gt;கூடா நட்டு கேடாய் விளையும் - கலைஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;லோக்பால் குறித்த, ஜெ.-வின் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது - தமிழக காங்கிரஸ் (தங்கபாலு கோஷ்டி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இரண்டாவது ரவுண்டு ஸ்டார்ட்ஸ்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;இன்று ஒரு தகவல்:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக சமூகநீதிக்கான ஒரு பகுத்தறிவு இயக்கம் - பேராசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர், ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்காக மு.க.செல்வி இன்று காளஹஸ்தியில் பூஜை செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-6892789842070591635?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/6892789842070591635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=6892789842070591635' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6892789842070591635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6892789842070591635'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/06/random-musings.html' title='மாமியார் மீது சத்தியம் செய்தல்.'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-5026297904476822364</id><published>2011-06-27T15:37:00.005+05:30</published><updated>2011-06-27T15:55:54.237+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணூபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொந்த கதை..'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='che-gu-vera'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயம் பிரம்மாஸ்மி'/><title type='text'>பயண அரிப்புகள்!</title><content type='html'>சென்னை மாநகரப் பேருந்திலிருந்து இறங்கி நிலத்தில் கால் வைத்தவுடனேயே, பூமி அதிர்ந்து மனதிற்குள் மத்தாப்பூ! காரணம் என் முன்புறமிருந்த‌ மணல் லாரியின் பின்புறம் எம்.பிரகாஷ், எம்.சுரேஷ் என்ற‌ பெயர்களுக்கிடையில், "தோழர்.சேகுவேரா" என்றிருந்ததுதான். ஆஹா! தமிழ் நாட்டில் புரட்சி மலர்ந்து விட்டது. இங்கும் யாரேனும் தம் மகனுக்கோ மகளுக்கோ, 'ஃபேஸ்புக்' என்றோ அல்லது குறைந்தபட்சம் 'மணல் லாரி' என்றாவது நாமம் சூட்டக் கூடும் என்ற எண்ணம் வலுத்தது. மேலும் லுங்கி அணிந்திருந்த ஒரு அன்பர்  சே-வின் புகைப்படத்துடன் கூடிய 'டீ-ஷர்ட்' அணிந்திருந்ததைப் பார்த்த போது அவ்வெண்ணம் வலுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(சும்மா சொல்லக்கூடாது. பேருந்தில் ஏழே ஏழு ரூபாய்க்கு மிக நன்றாகவே ஊர் சுற்றிக் காட்டுகிறார்கள்.வழியெங்கும் மெட்ரோ ரயிலுக்காக தோண்டப்பட்ட குழிகள்,எங்கே நம்மையும் மூடி விடுவார்களோ என்ற பயத்தில் ஏங்கிய வண்ணம் உள்ளன.)&lt;br /&gt;&lt;br /&gt;மனசாட்சியோ புரட்சி, புரட்சி என்று கதறிக் கொண்டிருக்க நான் அமைதியாக ஒரு தேநீர் கடைக்குள் சென்று நண்பனின் வரவுக்காக காத்திருந்தேன்.  ஜூன் மாதமென்பதால், அனைது சுவர்களும்  கலைஞர் அவர்களுக்கு வாழ்த்து கூறிய வண்ணம் இருந்தன. ஓரிடத்தில், மு.க-வினை வணங்குவோர் பட்டியலில், 'த.மோ.அன்பரசன்'.தொழிலாளர் நலத்துறை அமைச்சர் என்றிருந்தது. என்னடா இது ஜெ. ஆட்சிக் காலத்தில், திமுக உறுப்பினரொருவர் அமைச்சரா..? என்று ஒரு கணம் திகைத்துப் போனேன். பின்புதான் தெரிந்தது, அது 'மார்ச்' மாதம்  எழுதப்பட்ட 'விளம்பரமென்று'.  கலைஞருக்கு வாழ்த்து கூறிய சுவரோடு, பிற்சேர்க்கையாக மு.க.ஸ்டாலினின் 2012 பிறந்த நாளுக்கும் வாழ்த்து கூறப்பட்டிருந்தது. சென்னை மிக அட்வான்ஸாகத்தான் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞருக்கு வாழ்த்து கூறிய சுவர்களுக்கு இணையான எண்ணிக்கையில் இன்னொருவருக்கும்  வாழ்த்து கோர‌ப்பட்டிருந்தது. அவர் 'பூவை ஜெகன் மூர்த்தியார்'. எல்லா சுவர்களுக்கும் மூர்த்தியார், மூர்த்தியார் என ஆர்ப்பரிக்க, எனக்கு மட்டும் மூர்த்தி யார்..? என்ற கேள்வி எழுந்தது. தேநீர் கடையிலிருந்த அரை மணி நேரமும், த்தா, பாடு போன்ற தமிழ்க் கலைச் சொற்களை மிகச் சுலபமாகக் கேட்க முடிந்தது. மேலும் அடிக்கடி லக்டோ பால், லாக்டோ பால் என்ற சொல்லையும் கேட்க நேர்ந்தது.   நானும் அது ஏதோ பாலினால் செய்யப்பட்ட தின்பண்டம் என நினைத்துக் கொண்டேன். நண்பன் வந்து, அருஞ்சொற்பொருள் கூறி விளக்கிய பின்புதான் தெரிந்த்து அது கெட்ட வார்த்தையாம்! அந்த ஹிந்தி கெட்ட வார்த்தை என் காதில் மருவி விழுந்திருக்கிறது. எனினும் நம் மக்களின் மொழியியல் அறிவை எண்ணி பெருமிதமாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு நண்பனின் அறைக்குச் சென்று,'கழித்துக் குளித்து உண்டு களிக்க' நான் உத்தேசமாகவும் அவன் சித்தமாகவும் இருந்ததால்,அவனது அறைக்குச் செல்ல நேர்ந்தது.சென்று கொண்டிருக்கையில், "பங்காளி..யாருக்காச்சும் மெடிக்கல் சீட் வேணும்ன்னா சொல்லு, சல்லீசா முடிச்சிரலாம்" என்றான்.எனக்கோ,என் நண்பன் இந்தளவு வளர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்வதா இல்லை அவனது சேவை மனப்பான்மை குறித்து வியப்பதா எனத் தெரியாமல் பொறி கலங்கிப் போய் நின்றிருந்தேன். "கவுண்ட்டர்ல கட்டுனா 50L,நம்மக் கிட்ட கொடுத்தா 30L தான்" என்ற அடுத்த குண்டைப் போட்டான். எல்-ன்னா இலட்சமா..? என்று எச்சிலை விழுங்கியவாறே கேட்டேன். என்னை ஏலியனைப் பார்ப்பது போல பார்த்து விட்டு, "அதிலென்ன சந்தேகம்" என்று கிளிப்பிள்ளையைப் போல சொன்னான். என் மனதிற்குள் 'அவ்வ்வ்வ்வ்' என்ற ஊளைச்சத்தம் வெகு நேரத்துக்கு கேட்டுக் கொண்டிருந்தது. நான் "ரைட்டு விடு" மன நிலைக்குத் திரும்ப வெகு நேரமாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக, சமகாலக் கல்வி மற்றும் கலவிச் சூழலைப் பற்றிய ஒரு விவாதத்தை நடத்திக் கொண்டிருந்ததில், பொழுது போனதே தெரியவில்லை. இரவாகியிருந்தது.  ஊரிலிருந்து வரும் நண்பன் உள்ளூர் நண்பனுக்கு சரக்கு வாங்கித் தர வேண்டுமென்ற உலக நியதி அவனுக்கு நினைவிற்கு வந்திருக்க வேண்டும். தீர்த்தவாரிக்கு அடிபோட்டான் நண்பன். ஆனால், அந்த விதியை அன்று நான் கட்டுடைத்ததால், சரக்கு அவன் காசிலும் 'சைடிஷ்' என் காசிலும் வாங்குவதென்பது பொதுக்குழு முடிவானது.  இரவு 9.30 மணி சுமாருக்கு, மொட்டை மாடியில் ஆரம்பித்த வைபவம் 1 மணி வரைக்கும் நீண்டது. இறுதியில் நண்பன் மட்டையாகி விண்மீன்களை எண்ணத் தொடங்கி விட்டான்.மற்றவர்களும் ஆங்காங்கே அடைக்கலம் ஆகியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலையில்,சூரிய வெயில் சுள்ளென முகத்திலடுத்து கடுப்பைக் கிளப்பியது. அதிமுக ஆட்சியில், சூரியன் வருவதை ஏன் இன்னும் தடை செய்யவில்லை என்று கோபம் கோபமாக வந்தது. அல்லது செம்மொழிச் சின்னத்தை மறைத்ததைப் போல, சூரியனையும் பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டியாவது மறைக்க வேண்டாமா..? சரி விடுங்கள்! எழுந்து மதுரைப் பிரயாணத்திற்கான பிரயத்தனங்கள் செய்து முடித்து பேருந்திலும் ஏறி அமர்ந்தாயிற்று.  'வாராந்திரி ராணி' யில் அந்தரங்கம் தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத யாரோ ஒரு வாசகி எழுதும் நிகழ்வுகளையும் படித்து எத்தனை நாளாயிற்று..? ராணியைத் திறந்தேன். பயணத்தில், எந்த புத்தகத்தையும்  திறந்தவுடனேயே தூங்கி விடுவது என் தொட்டில் பழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;தூங்கி மூன்றாவது முறையாக விழித்த போது பெரியார் பேருந்து நிலையம் வந்திருந்தது. பேருந்திலிருந்து இறங்கி மதுரையில் கால் வைத்த நொடியில் அதிர்ச்சி.  இயல்பாகவே, பேருந்து நிலையம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் அழகிரியாரின் முகங்களில் ஒன்றைக் கூடக் காணவில்லை. மதுரைக்குத்தான் வந்து இறங்கியிருக்கிறோமா..? என்ற ஐயம் வேறு சூழ்ந்து கொண்டது. நிமிர்ந்து பார்த்ததில், பாண்டி பஜார் தேவாலயம் "உனக்கு ஆசிர்வாதம் கிட்டும்" என்றது. ஆசிர்வதிப்பது கட்டிடமா..? அல்லது கர்த்தரா..? எனத் தெரியாமலேயே விழித்துக் கொண்டிருத்தேன். மதுரையே தான்!&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி,பெரியார் காம்ப்ளக்ஸ் பேருந்து நிறுத்தத்தில் கழிப்பிடம் இருந்தும் இருவர் வெளியில் சிறு நீர் கழித்து,  உலக அரங்கில் இந்தியா வல்லரசாவதைத் தடுத்துக் கொண்டிருந்தனர் என்பதை ஒரு பதிவன் என்ற முறையில் இங்கே பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-5026297904476822364?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/5026297904476822364/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=5026297904476822364' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/5026297904476822364'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/5026297904476822364'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/06/traveling.html' title='பயண அரிப்புகள்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-7742406765466865485</id><published>2011-06-24T12:38:00.006+05:30</published><updated>2011-06-24T13:00:23.169+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வருத்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='twitter'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>அநீதிகளுக்கெதிராக ஓர் ஒளியாயுதம்!</title><content type='html'>அண்மையில்,பிரிட்டீஷின்'சேனல்-4' தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சி உலக அரங்கையே உலுக்கியுள்ளது. ஏறக்குறைய 1 மணி நேரக் கணக்கில், இலங்கையின் மனித உரிமை அத்து மீறல்களையும் ஈழத்தமிழர்கள் மீது ராஜஃபக்சேவின் கொடுங்கோல் அரசு கட்டவிழ்த்துள்ள வன்முறையையும் அம்பலமாக்கியுள்ளது. உலக வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் எழுதப்படவேண்டிய மற்றுமொரு மாபெரும் இனப்படுகொலைக்கான சாட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த படக்காட்சிகள் முழுவதிலும் புத்தப்பித்து தலைக்கேறி, உலக யுத்த மரபிற்கும் தர்மத்திற்கும் எதிராக பெண்களையும், பிஞ்சுக் குழந்தைகளையும் மானபங்கப்படுத்தி கொன்று குவித்த கொடூரமான செயல்களின் தொகுப்புதான். ஒரு காலத்தில் நம்மை ஆண்டு கொண்டிருந்த இங்கிலாந்து முதல்  ஹிட்லரின் இனப்படுகொலைக்கு உள்ளான ஜெர்மனி வரை அனேகமாக எல்லா நாடுகளும் இலங்கைக்கு எதிராகக் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமெனவும், ராஜஃபக்சே சகோதரர்களை சர்வதேச போர்க்குற்றவாளிகளென அறிவிக்க வேண்டுமென்றும் ஐக்கிய நாடுகள் சபை வரை,நேயக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.ஆனால், இவை எவற்றிற்குமேசிங்கள அரசு செவி சாய்க்காமல் உள்ளது என்பதுதான் பெரிய கொடுமையான் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில 'சேனல்-4'-க்கு இருக்கும் தார்மிகக் கோபமும், நேய‌ உணர்வும் மாட்சிமை பொருந்திய நம் தமிழ் ஊடகங்களுக்கு இல்லாதது குறித்து ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. பாவம் அவர்களுக்கு வாரணாசியில் பிணந்தின்று பாவ்லா காட்டும் 'அகோரி' பாபாக்களையே மாய்ந்து மாய்ந்து பதிவு செய்ய நேரமில்லை. இதில் இதையெல்லாம் யார் பார்த்துக் கொண்டிருப்பார்கள். டி.ஆர்.பி-க்காக மாரடிக்கும் நம் ஊடக ஓநாய்களை விட்டுத் தள்ளுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகளெல்லாம், ஒருசேர‌ அனுசரிக்கும் காதலர் தினம், மகளிர் தினம், தாய்-தந்தையர் தினம், புகையிலை எதிர்ப்புத் தினங்களைப் போன்று, சித்ரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு உயிர் துறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினமாக ஜூன்-26 அனுசரிக்கப்படுகிறது. அந்நாளையொட்டி,கொல்லப்பட்ட நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை மெரினாக் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஓளியேந்தும் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியப்பெருங் கடற்கரையில் நடந்த கொடூரங்களின் துர்வலியை, வங்காள விரிகுடாவிற்கு ஒளியேந்திச் சொல்வோம் வாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-_wAYLthq9B4/TgQ68oVEvMI/AAAAAAAAAs8/aRjrSNHD_rk/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 220px;" src="http://1.bp.blogspot.com/-_wAYLthq9B4/TgQ68oVEvMI/AAAAAAAAAs8/aRjrSNHD_rk/s320/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5621683048157592770" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜூன்-26 அன்று நாம் ஏற்றும் இந்த தீபமானது, கொல்லப்பட்ட நம் சொந்தங்களுக்கு அஞ்சலியாக மட்டுமன்றி, முகாம்களில் மீதமிருக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு ஓர் நம்பிக்கைத் தீபமாகவும் இருக்கும். வாருங்கள் தோழர்களே, வரும் ஞாயிறன்று மெரினாவின்  இரவில் உதிக்கட்டும் மனித‌ நேய ஞாயிறு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://candlelightfortamils.blogspot.com/"&gt;மேலதிக தகவல்களுக்கும், குறிப்புகளுக்குமான சுட்டி.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடம் : மெரினா கடற்கரை,கண்ணகி சிலை அருகில், சென்னை.&lt;br /&gt;நாள்: ஜூன்-26,2011.&lt;br /&gt;நேரம்: மாலை 6 மணியளவில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-wzJRDf-niRQ/TgKlrduABpI/AAAAAAAAAHM/OcePQV2z_hE/s1600/theepam.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 128px; height: 168px;" src="http://4.bp.blogspot.com/-wzJRDf-niRQ/TgKlrduABpI/AAAAAAAAAHM/OcePQV2z_hE/s1600/theepam.gif" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பி.கு:&lt;/u&gt;எந்தவொரு அரசியல் இலாபமும், சாயமும் அற்ற, முழுக்க முழுக்க பொது மக்களால் நிகழ்த்தப்படும் நிகழ்வு இது. தயவு செய்து யாரும் இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்.  முறையாக, மாநகரக் காவல் துறையின் முன் அனுமதி பெற்றே இக்கூட்டம் நடைபெறுகின்றது.ஆகவே, பாதுகாப்புக் காரணங்களுக்காக பயம் வேண்டாம். வாய்ப்பிருக்கும் உணர்வாளர்கள், தத்தம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தவறாமல் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-7742406765466865485?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/7742406765466865485/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=7742406765466865485' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/7742406765466865485'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/7742406765466865485'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/06/light-candle-for-us.html' title='அநீதிகளுக்கெதிராக ஓர் ஒளியாயுதம்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-_wAYLthq9B4/TgQ68oVEvMI/AAAAAAAAAs8/aRjrSNHD_rk/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-7610240206469723575</id><published>2011-06-22T10:20:00.004+05:30</published><updated>2011-06-22T10:35:27.284+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்ஸ்'/><title type='text'>அவன்-இவன்.</title><content type='html'>பொதுவாக, தமிழில் அச்சு ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அல்லது அவர்களால் எடுத்துக் கொள்ள்ப்பட்ட சுதந்திரம் காட்சி ஊடகங்களுடன் ஒப்பிடுகையில் அதிகம்தான். கோடை மழை போல, யாராவது ஒன்றிரண்டு பேர் இதுவரையில்  பேசப்படாத 'எதார்த்த'ங்களைப் பேசி விட்டால் அது அத்துமீறலாகி விடுகின்றது. இப்போது அந்த&lt;br /&gt;அத்துமீறலை தன்னுடைய 'அவன்-இவன்' மூலமாக‌ பாலா செய்திருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் போல, இப்போதும் கதை கிடக்கிறது கழுதை என் விட்டுவிடலாம். காட்சியமைப்புகளுக்கும் வசனங்களுக்கும் வருவோம். எப்போதுமே பாலா படங்களில், மனிதம், அன்பு, விசுவாசம் போன்றவை ஒரு மெல்லிய இழையாக இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். ஜி.எம்.குமார் மீது விஷாலுக்கு இருக்கும் அதீத விசுவாசம், ஆர்யா குடும்பத்தினருக்கும், விஷால் குடும்பத்தினருக்கும் இடையிலிருக்கும்  பறைசாற்றிக் கொள்ளப் படாத அன்பு இவற்றையெல்லாம் தன் காட்சியமைப்புகளால் போகிற போக்கிலேயே சொல்லிச் சென்றுவிடுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலாவுக்கேயுரிய அதிகாரம் மற்றும் ஆன்மிகத்தின் மீதான எள்ளல், படத்தில் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கின்றது. சில இடங்களில் சுய எள்ளலும் ஒலிக்கின்றது. இந்து மதம், இஸ்லாம், கிறித்துவம், நடிகர்கள்,முதலான எதையும் விட்டுவைக்காமல் கிண்டல் அடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'இப்போல்லாம் நீ பிரா போடுறதில்லையாம்மா'  என்று தன் அம்மாவிடமே மகன் கேட்பதைப் போன்ற ஈடிபஸ்த்தனமான வக்கிரம் நிறைந்த வசனங்கள் என்னதான் கண்டிக்கப்பட்டாலும் மனித மனங்கள் அவற்றை இரசிக்கவே செய்யும். ஏனெனில் தினத்தந்தி கள்ளக்காதல் செய்தி வாசகர்கள் முதல்  ஊழல் செய்தார் என்பதற்காக க‌னிமொழியின் நடத்தை மீதான, உத்தமோத்தமர்களின் ஐயம் வரை இங்கு எல்லாமே ஆழ்மனதின் வக்கிரத்தால் நிகழ்த்தப்படுபவைதான். மற்றபடி இந்த கலாச்சார சீர்கேடுகள், ஆணாதிக்கக் கருத்துகள், பெண்ணியம் இவற்றையெல்லாம் நாம், நிலாவில் குடியேறிய பிறகு பேசிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக, கரப்பான்பூச்சிகளும் குதிரைகளும் மனிதர்களிடம் 'உரையாட' வேண்டுமென ஆசைப்படும் எஸ்.ரா, இம்மாதிரியான வசனங்களை எழுதியிருப்பது அல்லது அதற்கு பொறுப்பேற்றிருப்பதுதான் ஆச்சர்யம். நான் கடவுளில் இந்து மதத்தின் மீதான எள்ளல்களுக்கு ஜெயமோகன் பொறுப்பேற்றதை அல்லது எழுதியதைப் போல.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் பாலா படங்களில் வரும் சிறு சிறு கதாபாத்திரங்களுக்கான கச்சிதமும் கனமும் இப்படத்தில் இல்லாதது பெருங்குறையாகப் பட்டது. ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லாருமே,'U Bloody Stupid Idiot Non-sense life insurance corporation of India Congratulations'-ஆகத்தான் இருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி அரை மணிநேரம்தான் கதை என்ற கருமாந்திரம் வந்து தொலைக்கிறது. அதுவும் 'டிபிக்கல் பாலா' கதையாகத்தான் உள்ளது. எந்த விதத்திலும் படத்தோடு ஒட்டவேயில்லை அவ்வஸ்து. இஸ்லாமின் 'குர்பாணி' மீது விமர்சனம் வைக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகத்தான் வலிந்து திணிக்கப்பட்டதைப் போல் தோன்றுகின்றது. ஆனாலும், ஜி.எம்.குமார் கொடூரமாகத் தாக்கப்படும் போது கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் சூர்யாவின் அகரம் விளம்பரமும், நாயகிகளும்,காதல் கச்சாத்துகளும் தேவையா என்பதைப் பற்றி தனித்தனியாக பட்டிமன்றம் வைக்கலாம். அந்தளவிற்கு ஆயிரமாயிரம் ஓட்டைகள்.மேலும்  ஒரு கோடி ரூபாய் மரங்களை கடத்தி விட்டு சாதாரணமாக வெளியில் நடமாடுதல்,காவல்துறை துணை ஆய்வாளரை சிறுவனொருவன் சொட்டை என்றழைத்தல் போன்ற அத்திப்பட்டி சுவர் ஓட்டைகளும் ஆங்காங்கே நிறையவே உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அவன்,இவன் - பாலா,எஸ்.ரா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-7610240206469723575?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/7610240206469723575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=7610240206469723575' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/7610240206469723575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/7610240206469723575'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/06/avan-ivan.html' title='அவன்-இவன்.'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-8815025957488863078</id><published>2011-06-03T12:13:00.005+05:30</published><updated>2011-06-03T13:45:45.983+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>அரூபம்!</title><content type='html'>அன்று சனிக்கிழமை. எப்போதும் என் சனிக்கிழமைகளின் காலைகள் 'இன்று  குடிப்பதா, வேண்டாமா..?" என்ற பட்டிமன்றத் தலைப்புடனேயே விடிபவை. அபூர்வமாக நான் சனிக்கிழமைகளை மறந்தாலும், ஏதாவதொரு நிகழ்வோ, மனிதர்களோ எனக்கு சனிக்கிழமைகளை நினைவுபடுத்தி விடுவார்கள். அவர்கள் நினைவுபடுத்திய அடுத்த கணத்திலிருந்து என் மனதிற்குள் பட்டிமன்றம் நிகழத் தொடங்கி விடும். இறுதியில் என் மனசாட்சி 'தப்பில்லை தம்பி; இன்னிக்கு ஒரு நாள் குடிக்கலாம்!" என்ற தீர்ப்பை எழுதும். நானும், சரியென்ற மன நிலைக்கு வந்துவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சனிக்கிழமை முன்னிரவும் அப்படித்தான். அவித்த முட்டை,  சிக்கன்65 முதலியவற்றுடன் குடிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். காமத்தையும் போதையையும் இயல்பாக அதன் போக்கிலேயே சென்று, அணு அணுவாக இரசித்து ஏற்று, அவை நம்மை முழுவதும் ஆக்கிரமிக்க வேண்டும் என்று எண்ணுபவன் நான். அதனாலேயே, நான் குடிக்கும்போது நண்பர்களை அருகில் சேர்த்துக் கொள்வதில்லை. குடிப்பதற்கு தனிமைதான் எனக்கு எப்போதும் உற்ற‌ நண்பன். அதைப் போல, மற்றவர்கள் குடிப்பதைப் போல பிளாஸ்டிக் ட‌ம்ளர்களில் குடிபபதும் எனக்கு உவப்பானதல்ல. கண்ணாடி டம்ளர்கள்தான் எனக்கானவை. பொதுவாக இரண்டு உள்ளாடைகளே, எனக்கு அதிகம் என்றெண்ணும் இயல்பினன் நான். ஆனால் இதற்காகவே, அதிக விலை கொடுத்து, சிவப்பு நிற பூக்கள் தீட்டப்பட்ட  இரண்டு கண்ணாடி டம்ளர்கள் வாங்கி வைத்துள்ளேன். மதுவானது கண்ணாடி டம்ளர்களின் நுனியில் தளும்பிக் நிற்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு போதைதான்!&lt;br /&gt;&lt;br /&gt;தாயிடமிருந்து, குழந்தை ஒன்று பிரசவித்து ஊர்ந்து  நிலமடைவதைப் போல, மது எனக்குள்  கொஞ்சம் கொஞ்சமாக உட்சென்றுகொண்டிருந்தது. மதுவின் முதல் துளி உங்கள் வயிற்றை அடையும் பரவசம் அனுபவித்திருக்கிறீர்களா..? அதை உணர்ந்தவர்களுக்குதான் தெரியும்.   மது உள்ளிறங்க உள்ளிறங்க, 'ஆளப் பிறந்தவனடா நீ' என்ற குரல் உங்கள் செவிப்பறையில் ஒலித்து, மனதிற்குள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும். எல்லோரையும் எளிதில் பிடித்து விடும் கிறுக்கு அது. என் கண்கள் செருகிக் கொள்ள ஆரம்பித்திருந்த நேரம், ஒரு மாமுனியின் நெடுநேர தவத்தைக் கலைப்பதைப் போல, என் அறையின் அழைப்பு மணி வீறிட்டு ஒலித்தது அல்லது அழைத்தது. 'சிவ' பூசையில் கரடி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-k6RQeSzf_bA/TeiD9iFvIwI/AAAAAAAAAsk/QE9__hEysY8/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 259px;" src="http://4.bp.blogspot.com/-k6RQeSzf_bA/TeiD9iFvIwI/AAAAAAAAAsk/QE9__hEysY8/s320/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5613882028663448322" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த கேணாகூனா இந்த நேரத்தில், என்றெண்ணியவாறே கதவை திறக்கலானேன். வெளியே, ஒருவர் நின்றிருந்தார். புலித் தோல் 'டிசைன்' போட்டிருந்த 'டீ-ஷர்ட்' அணிந்திருந்தார். கீழே, சாம்பல் நிற 'ஜீன்ஸ்'.  கழுத்தில் ஏதோ கயிறு போல விழுவிழுவென மின்னிக் கொண்டிருந்தது. எத்தனை நாள் குளிக்கவில்லையோ..! சிகையெல்லாம் தூசு அடைந்து கிடந்தது. கையில் கருப்பு சிவப்பு மஞ்சள் என கிட்டத்தட்ட அனைத்து திராவிடக் கட்சிகளின் நிறத்திலும் கயிறுகள் கட்டியிருந்தார். எப்படிப் பார்த்தாலும் அவருக்கு வயது முப்பதைத் தாண்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டே, "யாரு பாஸ்..?" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லங்க..வெளியே மழை உறைச்சு பெய்யுது! இந்த ஏரியாவுல ஒங்க ஒரு வீட்லதான் லைட் எரிஞ்சது. அதான் இங்க இருந்துட்டு போலாம்ன்னு கதவத் த்ட்டுனேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய பேச்சிலோ, செய்கையிலோ வேண்டுகோள் வைக்கும் பாவனை கிஞ்சித்தும் இல்லை. மாறாக, ஒரு உரிமைத் தோரணைதான் இருந்தது. எனக்கு அது பிடித்தும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற நேரங்களில் என்றால், 'க்காளி..இதென்ன அடியார் மடமா..? கண்டவனையெல்லாம் ஒக்கார வெச்சு, நான் தேவுடு காக்குறதுக்கு.?" என்று விரட்டியடித்திருப்பேன். ஆனால், அன்று நான் போதையில் இருந்ததால் அவ்வாறு செய்யவில்லை. செய்ய முடியவில்லை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். போதை சமத்துவத்தை தர வ‌ல்லது. சமயங்களில் ஆண்களுடனும்!&lt;br /&gt;&lt;br /&gt;அதனாலேயே, "வாங்க பாஸ்! இப்டி வந்து ஒக்காருங்க" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் உள்ளே வந்ததும் வராததுமாக‌, என் கையில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து அழுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன..?' என்பதைப் போல அவரைப் பார்த்தேன்.  'ச்சும்மா வச்சிக்கங்க! இது என் பழக்கம்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிக்கொண்டே முன்னால் சென்று, அமர்ந்தார். நானும் அவர் பின்னாலேயே சென்றேன். நான் மது ஊற்றி வைத்திருந்த இடத்திற்கருகே நன்றாக சம்மனம் போட்டு அமர்ந்து, இரு கைகளையும் மிக விறைப்பாக தொடையில் ஊன்றி அமர்ந்து கொண்டார். நான் அவரெதிரில் அமர்ந்து கொண்டேன். எனக்கு அவரெதிரில் அமர்ந்து மது அருந்த தயக்கமாக இருந்தது.அவரை பார்த்த போது துளியும் இல்லாத தயக்கமது. அப்போது மட்டும் ஏன் என் கைகள் நடுங்க ஆரம்பித்தன ..? என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் சங்கோஜப்பட்டுக்கொண்டே, "சரக்கடிக்கிறீங்களா பாஸ்..?" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு, "இது எனக்கு பத்தாதுங்க." என்றார். அவர் என்னை நோக்கி வீசிய அந்த பார்வையில் ஒரு வித‌ ஏளனம் இருந்தது. அந்த ஏளனம் என் உடம்புக்குள் பனிக் கத்தியொன்றைப் பாய்ச்சிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ரி பரவால்ல..ஊத்துங்க" என்று அவரே தொடர்ந்தார். என்றாலும் அந்த ஏளனம் குறையவேயில்லை. எனக்கு அதைப் பார்த்து கோபம் வந்தது. ஏனோ, அதை அவரிடம் காட்டவே முடியவில்லை. எதுவுமே பேசாமல், இன்னொரு கண்ணாடி டம்ளரில் அவருக்காக மதுவை நிரப்பினேன். நீரை மிகவும் குறைவாக கலந்து வாங்கிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு முழுவதும் குடித்துக் கொண்டே இருந்தோம்.இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவேயில்லை. வெளியே, எங்கோ ஓர் தூரத்தில் நாய்கள் ஊளையிடும் ஒலி கேட்டது. அவர் அதை இரசித்துக் கேட்டதாகவே எனக்குத் தொன்றொயது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் டம்ளர்களில், மது  அட்சயப் பாத்திரம் போல நிரம்பிக் கொண்டேயிருந்தது. போதை தலைக்கு ஏறி, தலை சுற்றி கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;விழித்துப் பார்த்த போது விடிந்திருந்தது. போதை சற்று தெளிந்து, தலை இன்னும் சிறிது நேரத்தில் வெடித்து விடுவதைப் போல் வலித்தது. கண்களுக்கு யாரோ திரை போட்டு மூடியதைப் போல உணர்ந்தேன். தலையை ஓர் உலுக்கு உலுக்கி, எழுந்தேன். இரவு, நடந்த நிகழ்வுகள் மங்கலாக நினைவில் வந்தன. என்னெதிரில் அவர் அம்ர்ந்திருந்த இடத்தில் ஒரு சிறிய 'சாம்பல் குவியல்' இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓடிச் சென்று வாசலருகில் பார்த்தேன். அறையின் கதவு உட்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கை முஷ்டியை, மற்றொன்றின் உள்ளங்கையில் குத்தியவாறே திரும்பி உள்ளே வந்து பார்த்தேன். அறை முழுவதிலும், ஆங்காங்கே சாம்பல் துகள்கள் சிதறிக் கிடந்திருந்தது. அறைக்குள் எப்போதுமில்லாத ஒரு அமானுஷ்யமான மௌனம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து, ஒவ்வொரு சனிக்கிழமையிலும் அவர் என் அறைக்கு வருவதும்,  எலுமிச்சைப் பழம் கொடுப்பதும், வயிறு முட்டக் குடிப்பதும், பின் சாம்பலாக மாறிவிடுவதும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.  நான் ஒவ்வொரு முறையும் இதைப் பற்றி அவரிடம் கேட்கலாமென்று எண்ணுவேன். ஆனால், ஏன் என்று தெரியவில்லை?! அவரைப் பார்த்த மாத்திரத்தில் வார்த்தைகளற்றுப் போய் விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம் சனிக்கிழமை, நீங்கள் கொஞ்சம் ஓய்வாக இருந்தால் என் அறைக்கு வாருங்களேன். உங்களுக்கு அவரை அறிமுகப் படுத்தி வைக்கின்றேன். உங்களாலும் அவருடன், அவ்வளவு எளிதில் பேசிவிட முடியாது என்பதை என்னால் மிக உறுதியாக‌ச் சொல்ல முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-8815025957488863078?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/8815025957488863078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=8815025957488863078' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/8815025957488863078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/8815025957488863078'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/06/formlessness.html' title='அரூபம்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-k6RQeSzf_bA/TeiD9iFvIwI/AAAAAAAAAsk/QE9__hEysY8/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-648134539681311964</id><published>2011-05-18T12:31:00.003+05:30</published><updated>2011-05-18T12:36:57.764+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வருத்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>ஆண்ட இனம் மாண்டழிந்த நாள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-URk9Lxk5KMs/TdNvRMvpkeI/AAAAAAAAArk/ke5TaaG8zJc/s1600/image002.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 226px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-URk9Lxk5KMs/TdNvRMvpkeI/AAAAAAAAArk/ke5TaaG8zJc/s320/image002.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5607948302275940834" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாய்ப்பிருக்கும் நண்பர்கள், கண்டிப்பாக‌ கலந்து கொள்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;span style="font-weight: bold;"&gt;♠ராஜூ♠&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-648134539681311964?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/648134539681311964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=648134539681311964' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/648134539681311964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/648134539681311964'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/05/blog-post_18.html' title='ஆண்ட இனம் மாண்டழிந்த நாள்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-URk9Lxk5KMs/TdNvRMvpkeI/AAAAAAAAArk/ke5TaaG8zJc/s72-c/image002.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-2821609001227618296</id><published>2011-05-16T10:33:00.003+05:30</published><updated>2011-05-16T10:45:08.609+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிம்பு'/><title type='text'>மூன்று திரைப்படங்கள்..</title><content type='html'>சில ஆண்டுகளுக்கு முன்பு, மை டியர் குட்டிச்சாத்தான் படத்திற்க்குச் சென்று, அதைப் பார்க்கக் கையில் கொடுத்த 3D கண்ணாடியை ஆட்டையைப் போட முயன்று தோற்ற நிகழ்வு மனதில் நிழலாட,’சரி கெளம்புடா ராசு’ என்று கிளம்பி விட்டேன் மற்றோர் 3D படத்திற்கு! Haunted. இந்திப் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;’அதீத காமமானது பேய்க்கு ஒப்பானது’ என்கிறார் படத்தின் இயக்குநர் விக்ரம் பட். கதையாகப்பட்டது யாதெனில்,கிட்டத்தட்ட நூறு வருடப் பழமை வாய்ந்த ஒரு வீட்டினுள், 80 வருடமாக ஒரு ஆண் பேய், பெண் பேயைக் கற்பழித்துக்(?)கொண்டேயிருக்க,இப்போது (2011) அவ்வீட்டிற்கு குடிவரும் நாயகன் அந்தப் பேயை காப்பாற்ற முயற்சிக்கிறான்.அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது..?என்பதுதான் கதை!&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டவுடன் ’கிர்ர்ர்ர்’ என்கிறதா..? திரைக்கதையில்தான் இருக்கிறது விஷயம். முடிந்தளவு திறம்பட எடுத்திருக்கிறார்கள். படத்தில் அளவுக்கதிகமாக ஃபேண்டஸியும், லாஜிக் மீறல்களும் இருந்தாலும் ரசிக்க முடிகின்றது. இசையும், ஒளிப்பதிவும் ஒரு திகில் படத்திற்குண்டான மரபை மீறாமல்,இருக்கிறது. அதன் மூலமாக, ரசிகர்களை பயமுறுத்த முயற்சி செய்து அதில் சிறுதளவு வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திரையரங்கில் சிறு குழந்தைகளின் அழுகுரல்களை, நிறையவே கேட்க முடிந்தது. அறிவற்ற பெற்றோர்களைக் கடிந்து கொள்வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;***************************&lt;br /&gt;&lt;br /&gt;விண்ணை நோண்டி வருவாயா-வைப் போலவே, எங்கேயும் காதலும் சூரமொக்கையாக இருக்குமென்றுதான் நினைத்தேன். பிரபுதேவா தன் மொக்கையின் உச்சத்தை, வில்லு-விலேயே தொட்டு விட்டதாலோ என்னவோ, இது சுமாராக இருந்தது. அவரே வந்து நடனமாடி, கதை சொல்வதென ஆரம்பமெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், முடிவில் ’டயர்’ கழண்டு வண்டி முன் ஓடும் ‘சொப்ப்பன சுந்தரி’யின் வாகனம் போல் ஆகிவிட்டதுதான் கொடுமை!&lt;br /&gt;&lt;br /&gt;’பாரீஸ்’ நகர வீதிகளை செல்லுலாயிடில் செதுக்கியமைக்காகவும், பாடல்களுக்கான லொக்கேஷன்களுக்காகவும் நீரவ்ஷாவுக்கு முத்தமே கொடுக்கலாம். ஆனால், என்னிடமெல்லாம் வாங்குவாராவென்று தெரியவில்லை. பிரகாஷ்ராஜ் வந்து செல்வதெல்லாம் ’க்யூட்’. ஜெயம் ரவிக்கு கோட்-சூட்டெல்லாம் கச்சிதமாகப் பொருந்துகிறது. பாவம் நடிப்புதான் டிமிக்கி கொடுக்கிறது.இராஜூசுந்தரம் நகைச்சுவை முயற்சி செய்திருப்பதைப் போல்தான் தெரிகிறது.ஆனால்,அவரது முகம் காமெடிக்குக் கூட சரிவராத ’காமெடி பீஸ்’ முகம் போல் இருப்பதால்,எடுபடவில்லை.’தம்பியுடையான் மொக்கைக்கஞ்சான்’ என்பதை நிரூபித்துள்ளார். தமிழ் நாட்டில்,நிஜமான ’கயல்விழியாள்’கள் பலர் இருக்க, ஹன்சிகா என்ற பீப்பாயை ஏன் எடுத்தார்களென்றுதான் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் இந்தப் படம் ’ஒரு முறை பார்க்கலாம்’ ரகம். ஆனால், சன் குழுமத்திற்கும், நாச்சியப்பன் பாத்திரக்கடைக்கும் (கோவில் பட புகழ்) ஒரு ‘யேவார ஒப்பந்தம்’ இருப்பதால், மாபெரும் வெற்றிப் படமாகி விடக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;***************************&lt;br /&gt;&lt;br /&gt;காட்ஸில்லாவின் கைகளில் பூமாலையைக் கொடுத்தால் கூட, அப்படியே அழகாக‌ வைத்திருக்க வாய்ப்புண்டு. ஆனால்,  சிம்பு கையில் ஒரு நல்ல படத்தைக் கொடுத்தால், கற்பழிப்புதான் கழுதை! அப்படித்தான் ஆகியிருக்கிறது வானம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் என்னவோ அதே கிரிஷ் தான். கதையும் அதேதான்! ஆனால், சேர்க்கை சரியில்லாததால் படம் அலங்கோலமாகியிருக்கிறது. படத்தின் பாவ ஜீவன் பரத்-தான். அவ்வளவு இருட்டடிப்பு செய்தும் பயபுள்ளை தாங்கியிருக்கிறார். பரத்தும் அவருடைய பரட்டைத் தலை அல்லக்கைகளும்  ஒவ்வொரு முறை, 'BRO' என்று சொல்லும் போதும் நமக்கு பற்றிக் கொண்டு எரிகிறது.  சினேகா உள்ளாலும் படத்தில், உள்ளாள் அவ்வளவே! அனுஷ்காவுக்கு சிம்பு மேல் என்ன காண்டு எனத் தெரியவில்லை. ஆந்திரக் காட்சிகளை அப்படியே டப் செய்திருக்கின்றனர். படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம் தான். மனிதர் 'டைமிங்க்' கில் அதகளம் செய்கிறார். இப்போதெல்லாம் 'நோ டபுள் மீனிங்' ஒன்லி 'சிங்கிள் மீனிங்' தான் என்று போய்க் கொண்டிருக்கிறார் போலும். சரண்யாவும் அவருக்கு மாமனாராக வரும் கிழவரும்  நடிப்பது சீரிய‌ல்த்தனமாகவே இருந்தாலும் நன்றாகவே, நடித்திருக்கிறார்கள். அவர்கள் அழும் போது, 'ஃபீல்' செய்யும் நமக்கு சிம்பு அழும்போது சிரிப்பு, பீறிட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் கதாநாயக்னுக்கு தாலி என்ற வஸ்துவே தெரியாது. ஆனால், "ஆனியிலே கண்டெடுத்த அற்புத ஆணி முத்தே!" என்று எட்டுக்கட்டி, நம் காதுகளில் ஏறுவார். எந்தவொரு பாடாவதி கதாநாயகனுக்கும் காதல் வந்து விட்டால், கவிதையாக கக்குவார் என்பதுதான் தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இரண்டு தீபாவளிகள் கண்ட‌ ஹரிதாஸ் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் இவ்விதியை, சிம்பு  தன் "எவன்டி உன்னப் பெத்தான்" என்ற பாடல் மூலம் தகர்த்து எறிந்திருக்கிறார்.நல்ல வேளையில் செய்த நல்ல வேலையாக, பெத்தான் என்றெழுதினார். இளைஞர்களின் மனதை இன்னும் எதார்த்தமாக பிரதிபலிப்பதாக எண்ணி, 'வேறு' மாதிரி எழுதாத‌தால்,  தமிழ் தப்பித்தது! இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளதைப் போல் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றப‌டி,தெலுங்கு மூலமான‌ வேதத்தின் இறுதிக் காட்சியில்,நம் கண்களில் ஒரு துளி கண்ணீர் திரண்டு நிற்கும். ஆனால், இந்தப்படத்தின் இறுதிக் காட்சியில், 'அப்பாடா, படம் முடிஞ்சிருச்சு!" என்ற உணர்வுதான் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-2821609001227618296?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/2821609001227618296/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=2821609001227618296' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/2821609001227618296'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/2821609001227618296'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/05/blog-post_16.html' title='மூன்று திரைப்படங்கள்..'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-3372288634092695357</id><published>2011-05-14T08:41:00.008+05:30</published><updated>2011-05-14T11:51:18.146+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டக்ளஸ் டூன்ஸ்'/><title type='text'>மம்மி ரிட்டர்ன்ஸ்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-csGlvJafhfw/Tc4NEvoeFwI/AAAAAAAAAqE/OAXs7_B8X_c/s1600/2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 195px;" src="http://1.bp.blogspot.com/-csGlvJafhfw/Tc4NEvoeFwI/AAAAAAAAAqE/OAXs7_B8X_c/s320/2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5606432961279694594" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க அந்தப் பக்கம் போங்க... நான் இந்தப் பக்கம் போறேன்! பேச்சு பேச்சாதான் இருக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Rvd20Z5lANQ/Tc4NTo_eY6I/AAAAAAAAAq0/p7qfhsdW7AQ/s1600/Actress%2BKushpoo%2BAunty%2BQueen%2BKushbhu%2Bphoto.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 250px;" src="http://1.bp.blogspot.com/-Rvd20Z5lANQ/Tc4NTo_eY6I/AAAAAAAAAq0/p7qfhsdW7AQ/s320/Actress%2BKushpoo%2BAunty%2BQueen%2BKushbhu%2Bphoto.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5606433217195172770" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன மாதிரி புள்ளை யாருக்கும் வேண்டாம் போல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-s0aDjcKWvNY/Tc4NE0B7CdI/AAAAAAAAAqM/u_VLgGyyrSo/s1600/3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 279px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-s0aDjcKWvNY/Tc4NE0B7CdI/AAAAAAAAAqM/u_VLgGyyrSo/s320/3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5606432962460191186" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் வெளாட்டாப் பேசுன பேச்சையெல்லாம் விஜயகாந்த் அண்ணே சீரியஸா எடுத்துக்கிட்டாப்ல..ஹையோ..ஹையோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-ZzJUx_5IYpo/Tc4NTZ1x5oI/AAAAAAAAAqs/fEWvt_Aprjs/s1600/12-veeramani-200.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/-ZzJUx_5IYpo/Tc4NTZ1x5oI/AAAAAAAAAqs/fEWvt_Aprjs/s320/12-veeramani-200.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5606433213127976578" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மண்டபத்தில் அறிக்கை எழுதித் தருபவர், தற்சமயம் ஓய்வில் இருப்ப‌தால், அறிக்கை விடமுடியாத கையறு நிலையில் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-eerAw--Aiy0/Tc4NFHq70hI/AAAAAAAAAqU/uekVCgClQMo/s1600/4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 203px; height: 248px;" src="http://4.bp.blogspot.com/-eerAw--Aiy0/Tc4NFHq70hI/AAAAAAAAAqU/uekVCgClQMo/s320/4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5606432967732482578" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைச் சிறுத்தைகளுக்கு, திமுக-விலிருந்து விடுதலை அளித்த மக்களுக்கு நன்றிகள். #வேறவழி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-_LbQAPaBNXM/Tc4NTrND1qI/AAAAAAAAAq8/ggPhT6gMJD8/s1600/ARV_RAMADOSS_JAYALALI_6702f.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 235px;" src="http://2.bp.blogspot.com/-_LbQAPaBNXM/Tc4NTrND1qI/AAAAAAAAAq8/ggPhT6gMJD8/s320/ARV_RAMADOSS_JAYALALI_6702f.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5606433217789023906" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக ஜெயிக்கும்ன்னு சொன்னேன்.. 2011 ல ஜெயிக்கும்ன்னு சொன்னேனா...?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-cbLIDKye8VU/Tc4NT1koEwI/AAAAAAAAArE/b2TgQfFZvZA/s1600/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 197px; height: 255px;" src="http://4.bp.blogspot.com/-cbLIDKye8VU/Tc4NT1koEwI/AAAAAAAAArE/b2TgQfFZvZA/s320/images.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5606433220572222210" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வட போச்சே!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-25z_Gr6hSho/Tc4NFAhZ7mI/AAAAAAAAAqc/q4q5hZV-Rmw/s1600/5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 227px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/-25z_Gr6hSho/Tc4NFAhZ7mI/AAAAAAAAAqc/q4q5hZV-Rmw/s320/5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5606432965813464674" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நோ கமெண்ட்ஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-guCQWcW714c/Tc4N72LjC1I/AAAAAAAAArU/jhiV37Xx_F4/s1600/Karthik-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 295px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-guCQWcW714c/Tc4N72LjC1I/AAAAAAAAArU/jhiV37Xx_F4/s320/Karthik-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5606433907930237778" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2016  ல் ஆட்சியைப் பிடிப்பது நாங்கதானுங்கோ! மார் தட்டுகிறார் மார்க்கண்ட்ட்ட்ட்ட்ட்டேயன்ன்ன்ன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-HQWOZ4wXEy8/Tc4NUA8Vj3I/AAAAAAAAArM/VKxzmBNzwIw/s1600/io.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 206px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-HQWOZ4wXEy8/Tc4NUA8Vj3I/AAAAAAAAArM/VKxzmBNzwIw/s320/io.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5606433223624462194" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு ஜெ. ஆட்சியில் பங்கு தராததால், நாங்கள் பங்கு கேட்க மாட்டோம்...யோவ், நான் சரியாத்தான் பேசுறேனா...?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-WclYtcZ2zfc/Tc4NFdMKooI/AAAAAAAAAqk/vpvHLFlfKc8/s1600/6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-WclYtcZ2zfc/Tc4NFdMKooI/AAAAAAAAAqk/vpvHLFlfKc8/s320/6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5606432973509010050" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழக மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-93MlVelwhjk/Tc4ezOE8CjI/AAAAAAAAArc/A0dkuQ5LbhQ/s1600/asian-paints-190.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 190px; height: 190px;" src="http://1.bp.blogspot.com/-93MlVelwhjk/Tc4ezOE8CjI/AAAAAAAAArc/A0dkuQ5LbhQ/s320/asian-paints-190.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5606452451423816242" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1000 கிலோ 'பச்சை பெயிண்ட்ஸ்' எக்ஸ்ட்ரா ஆர்டர் வந்திருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-3372288634092695357?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/3372288634092695357/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=3372288634092695357' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/3372288634092695357'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/3372288634092695357'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/05/blog-post_14.html' title='மம்மி ரிட்டர்ன்ஸ்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-csGlvJafhfw/Tc4NEvoeFwI/AAAAAAAAAqE/OAXs7_B8X_c/s72-c/2.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-862697069759770676</id><published>2011-05-10T10:09:00.003+05:30</published><updated>2011-05-10T11:55:20.269+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுபவம்'/><title type='text'>மயிரலங்காரம்!</title><content type='html'>”ஏலேய் என்ன வெட்டுடா இது..! வெய்யக்காலத்துக்கு ஏத்தா மாதிரி, ஒட்ட வெட்டச் சொல்லப்புடாது..! வா நான் சொல்லி விடுறேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“அண்ணே, ரஜினி ஸ்டைல்ல வெட்டுங்கண்ணே,,!”&lt;br /&gt;&lt;br /&gt;“இங்ஙேர்யா..! ஒட்ட வெட்டணுமாமா சொல்லிப்புட்டேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;“அண்ணே..! கொஞ்சம் சீவுற மாதிரி முன்னாடி முடி வச்சி வெட்டுங்கச்ண்ணே..!”&lt;br /&gt;&lt;br /&gt;“எப்பா..என்னாப்பா நீயி,ஸ்கூல்லா எல்லாரும் கிண்டலு பண்ணுவாய்ங்கெப்பா.”&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதிரியான வசனங்களை அம்மாவிடமோ, அப்பாவிடமோ அல்லது பக்கத்து வீட்டு மாமாவிடமோ குறைந்த பட்சம் ஒரு முறையாவது நாம் தாண்டியிராமல் வந்திருக்க முடியாது.யாராவது உழைப்பாளி படத்தைப் பார்த்து விட்டு தலையைக் கோதாமல் இருத்திருக்க முடியுமா...?அந்தளவிற்கு பதின்மங்கள் தொட்டு நம்மை ஆட்டிப்படைப்பது சிகையலங்காரம். தமிழில் புரியும்படி சொல்ல வேண்டுமானால், ”ஹேர்ஸ்டைல்” எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் கிராமங்களுக்கு சென்றால்,வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக நின்று கொண்டு,வித விதமான சிகையலங்காரத்துடன் ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுத்த நம்முடைய முன் வழுக்கை விழுந்த தாத்தாக்களைக் காணலாம்.ஃபோட்டோக்கள் மட்டும் வரலாற்றைப் பறை சாற்றும் விதமாக ஆணிகளில் தகரக் கம்பிகளின் உதவியுடன் தொங்கிக் கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்களில் ஒரு நடமாடும் சவரக் கடை இருக்கும். வாரத்திற்கொருமுறை அந்த கடை, மரத்தாலான சவரப் பெட்டி,ரசம் போன கண்ணாடி சகிதமாக ஆற்றங்கரையிலோ அல்லது ஏதாவது ஒரு புளியமரத்தின் கீழே ஆஜராகிவிடும். வேலையில்லாச் சமய‌ங்களில்,வெள்ளாடுகளுக்குக் கூட முடி திருத்தும் அந்தக் கடை. அது மாட்டுக்கு லாடம் அடிப்பதைப் போல, பெருங்கஷ்டமான காரியம். ஒரு சுவரில் ஆட்டை ஒட்ட‌ப் பிடித்துக் கொண்டுதான், உடம்பில் கத்தி வைக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் உடைகளின் மீதான அக்கறையை எந்தளவிற்கு சினிமாவைப் பார்த்து எடுத்துக் கொள்கிறோமோ..அந்தளவிற்கு சற்றும் சளைத்ததல்ல சிகையலங்காரம்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்ஜிஆரை  போல் நெற்றியில் விழும் கற்றை முடியலங்காரம் ஸ்பெஷல். அதை ஒரு சுண்டு சுண்டி விட்டுக் கொண்டு, கையில் இரட்டை இலைப் பச்சைக் குத்தலோடு, பல ரிக்ஷாக்காரர்களை மதுரை வீதிகளில் இன்றும் நாம் பார்க்கலாம். அவர் இன்றும் இதயக்கனிதான். தேனி மாவட்டக் கிழவிகளிடம், எம்.ஜி.ஆர் இன்றும் உயிருடன் இருக்கிறாரென்ற நம்பிக்கை கூட‌ உண்டு. என்னைப் பொருத்த வரையில், எல்லா உடைகளும் கச்சிதமாக பொருந்தும் சிவாஜி கணேசனுக்கு எம்ஜிஆரைப் போல, குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு சிகையலங்காரம் எதுவும் செட் ஆனதில்லை. கௌரவம், வியட்நாம் வீடு போன்ற படங்களில் வேண்டுமானால் ஓரளவிற்கு சொல்லும்படி இருக்கும். மற்றபடி, சிகை எடுப்பாக தோன்றும் அளவிற்கு நான் சிவாஜி படங்கள் பார்த்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இடைக்காலங்க‌ளில், டவுனெனப்பட்ட சிறு நகரத்து இளைஞர்களுக்கு டி.ஆர் ஆதர்சமென்றால், தெற்கத்தி இளைஞர்களுக்கு கார்த்திக் முத்துராமன் ஆதர்சம். அதற்கு சில வேறு காரணங்களும் இருந்தது எனலாம். அப்போது இராஜீவ், சுரேஷ், சுதாகர், பாக்யராஜ் பாணியில் தொடையைப் பிடித்து, கணுக்காலகளில் அகலப்படுத்தப்பட்ட (பெல் பாட்டம்) ஃபேண்ட் சகிதமாக, டி.ஆர் ஸ்டைலில் தாடியும் நெற்றியில் படியும் படி வாரிய சிகை பிரபலம். 16 வயதினிலே காலத்தில், ச்சும்மா சீப்பை ரெண்டு தடவு தடவி சைடு உச்சி எடுத்து சீவிக் கொண்டு “இது எப்டி இருக்கு” என்று இன்றைய பெருசுகள் சலம்பிய கதைகள் ஏறக்குறைய எல்லா ஊர் மடங்களிலும் இருக்கும். சிவப்பு ரோஜாக்கள்,வாழ்வே மாயம் படத்தில் வரும் 'ஹை ஹீல்ஸ்' ஷூ போட்ட‌ கமலின் ஹேர்ஸ்டைலை மறக்க முடியுமா..?&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியின் எஜமான் வெளிவந்திருந்த காலத்தில் முன்மண்டையின் இரு ஓரங்களையும் ஆங்கில எம் வடிவ ஸ்டைல் மிகப் பிரபலம். எங்கள் பள்ளி ஓவிய ஆசிரியரொருவர் அந்த ஹேர்ஸ்டைல் வைத்திருந்தது நினைவுக்கு வருகிறது.இன்று வரை அந்த ஹேர்ஸடைலையே (?) தான் ரஜினி வைத்திருக்கிறார். சிவாஜியில் மட்டும் கொஞ்சம் மாற்றினார்.  எந்திரனில் அதகளம் செய்தது வேறு விஷயம். எங்கள் ஊரில் இருந்த ஒரு வீடியோ கடை அதிபரின் மகனொருவர், ரஜினி படங்கள் வெளியாகும் தினத்தில் அந்தப் படத்தில் ரஜினி எந்த கெட்டப்பில் வருகிறாரோ, அதே உடை, மேக்கப், ஹேர்ஸ்டைலுடன்  திரையரங்கிற்கு வருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;குருதிப்புனல் காலத்தில் ”அட்டாக்” (போலீஸ் கட்டிங்) எனச் சொல்லப்பட்ட சைடு ஓரங்களை, இரு விரல்களால் கூட பிடிக்க முடியாத படி ஒட்ட வெட்டிக் கொண்டு, முன் மண்டையில் மட்டும் கொஞ்சமாக முடி விடுவர். தற்போதைய காக்க காக்க, சத்யம் ஹேர்ஸ்டைல்களுக்கு குருதிப்புனல்தான் முன்னோடி.அதுதான் இப்போது மீண்டும் “ஸ்பைக் கட்டிங்”என்ற புதிய நாமம் சூடி வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக்கின் பொன்னுமணி காலத்தில் கிராமங்களில் பிரபலமாகியிருந்த ஃபங்க் ஸ்டைல், நகரங்களில் கலைஞன், தேவர்மகன் காலங்களில், பிரபலமானது. கூடவே காது வரைக்கும் வைக்கும் கெடா மீசையும் பிரபலமானது. சிறுவயதில் என் வீட்டருகில் இருந்த,  காசி அண்ணன் கமல் வெறியர்.அவர், நம்மவர் காலத்தில் கீழ் உதடு ஒட்டி தாடி வைத்துக் கொள்வது, நாயகன் காலத்தில் மீசையை முழுவதும் மழித்துக் கொள்வது,அபூர்வ சகோதரர்களுக்குப் பிறகு சுருக்கிய மீசை மற்றும் கிராப் கட்டிங், விருமாண்டிக்குப் பிறகு முறுக்கு மீசையும்,அரிவாள் கிருதாவுமென வலம் வந்தது இன்னும் நினைவிருக்கிறது. கமலைப் பொருத்தமட்டில், சிகையலங்காரத்தில் வித்தியாசம் காட்டிக் கொண்டே இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு,அசலைத் தவிர்த்து அஜித் தன் ஹேர்ஸ்டைலை வேறெந்த படங்களிலும் மாற்றியதில்லை. விஜயைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஏதாவது ஓரிரு பாடல்களுக்கு மட்டும் தன் ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொண்டு வந்து பயமுறுத்துவார். சேது, காசி,பிதாமகன் படங்களில் விக்ரம்,  நந்தாவில் சூர்யா,  நான் கடவுள், அவன் இவனில் ஆர்யா, சத்யம் விஷால் ஆகியோரரும் கூட அந்தந்த படங்களில் கதைக்குத் தேவையான சிகையலங்காரத்துடன் நடித்தது குறிப்பிடத்தக்கது.   தனுஷ், சிம்பு, கார்த்தி போன்றோரையும் இனி அப்படி எதிர்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகர்கள் தவிர்த்து, இப்போது நகைச்சுவை நடிகர்களும் படங்களுக்குப் படம் விதவிதமான சிகையலங்காரங்களில் வருகின்றனர். வடிவேலுவின் தலைநகரம் அவற்றுள் முக்கியமானது. வில்லு, போக்கிரி படங்கள்  கூட வடிவேலுக்கு ஹேர்ஸ்டைலில் ம்ற்றொரு மதிப்பீடு கொடுத்தது. விவேக்கும் கூட படிக்காதவன் என தொடங்கி பலே பாண்டியா, சமீபத்திய மாப்பிள்ளை வரை தன் சிகையை மாற்றிக் கொண்டே வருகிறார். சந்தானமும் விதிவிலக்கல்ல. சிங்கம் புலி படம் பார்த்தீர்கள்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் எத்தனை எத்தனை சிகையலங்காரங்கள் வந்தாலும் போனாலும், "ஏன் இந்த சலூன் கடைக்காரர் நமக்கு மட்டும் ஒழுங்காவே வெட்ட மாட்டேங்குறார்" என்ற நினைப்பு எல்லாருக்கும் இருக்கும்.அது ஏகவியாதி.மாறவே மாறித் தொலையாது!&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த மயித்துல‌ என்னா மயித்துக்குடா, ஸ்டைல் வேண்டிக் கெடக்கு...?" என்று பெரியண்ணன்,என்னை அடிக்கடி ஓட்டிக் கொண்டே இருப்பார். அவருக்காகவும், பிரபல பதிவர்,அண்ணன்.முரளிகண்ணனுக்காகவும் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right; font-weight: bold;"&gt;-♠ராஜூ♠&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-862697069759770676?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/862697069759770676/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=862697069759770676' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/862697069759770676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/862697069759770676'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/05/blog-post.html' title='மயிரலங்காரம்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-3156479093838408893</id><published>2011-05-02T11:26:00.002+05:30</published><updated>2011-05-02T12:15:01.588+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்ஸ்'/><title type='text'>உங்கள் பெயர் என்ன..?</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்&lt;br /&gt;தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம.&lt;br /&gt;-பாரதி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கென்ன,கண்ணை உருட்டியவாறு, மீசையை முறுக்கிக் கொண்டு  பாடிவிட்டுப் போய்விட்டார்.கிடந்து இங்கே அல்லல் படுவது நாம்தான். 'நாம' என்றால் தமிழர்கள்.ஒரு அறியாத நபர்,நம்மை அறிந்து கொள்வதின் முதல் படியே நம் பெயர்தான்.பெயர் சொல்வதிலென்ன பிரச்சனை..? சொல்லிவிடலாம். இங்கே, அடுத்த கேள்வி நம்மை நோக்கி வரும். 'சர் நேம்' என்ன..? இது பூசினாற்போல் சொல்வது! பச்சையாக சொல்ல வேண்டுமெனில், 'உன் சாதி என்ன..?'. இந்தத் தலைமுறைத் தமிழர்கள் பதில் சொல்லத் தயங்கும் கேள்வி இது! கடந்த‌ தலைமுறையிலலென்றால் பரவாயில்லை. காரணம் பெரியாரையே, 'இராமசாமி நாயக்கர்' என்றழைத்த‌வர்கள்தான் நாம் . தவிர, தேசத் தலைவர்களையெல்லாம் சாதித் தலைவர்களாக்கிய பெருமையும் நமக்குண்டு.பிரபாகரன் கூட இதற்கு விதிவிலக்கல்லவே!&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே, தமிழர்கள் யாரும் 'சர்நேம்' போட்டுக் கொள்வதில்லை. 'இலாஸ்ட் நேம்' என்பதற்கு தந்தையின் பெயரைப் போட்டுக் கொள்கின்றனர். ஆனால், தமிழ் நாடு தவிர‌ மற்ற எல்லா மநிலங்களிலும், 'சர்நேம் சிஸ்டம்' உள்ள‌து. தந்தை பெயரின் முதலெழுத்தை, 'இன்ஷியலாக'ப் போட்டுக் கொள்வதும் நம் தொட்டில் பழக்கம். அப்படிப் போட்டுக் கொள்வதால், உங்களை உங்களின் தந்தைப் பெயரைச் சொல்லி அழைக்கும் அபாயமும் சாத்தியம். ஆனால், விதிகளின் படி நாம் நம் இன்ஷியலைப் பெயருக்குப் பின்னால்தான் போட்டுக் கொள்ள வேண்டும். மாநில அரசு நமக்களிக்கும் எல்லாக் கல்விச் சான்றிதழ்களிலும், இன்ஷியல் நம் பெயருக்குப் பின்னால்தான் உள்ளது.  மத்திய அரசுச் சான்றுகளில்தான்  'சர்நேம்' ,'மிடில்நேம்' , 'இலாஸ்ட் நேம்' பிரச்சனைகளெல்லாம் வருகின்றது.  குறிப்பாகக் கடவுச்சீட்டு அலுவலகங்களில்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்சனைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல், கவுண்டர், கோனார், தேவர் போன்ற சாதிப் பெயர்களைப் தம் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்ட தமிழர்களையும் அறிவேன். அந்தப் பெயர்களெல்லாம் செம்ம காமெடியாக இருக்கும். பிரஷாந்த் கோனார், நிர்மல் கவுண்டர், மேரி நாடார், சுல்தான் லெப்பை என்றால் நல்லாவா இருக்கிறது..?&lt;br /&gt;&lt;br /&gt;நம்‌ கிரமங்களில், சிலர் புதிய பெயர் தேட சிரமப்பட்டுக் கொண்டு, அப்பா பெயரையே மகனுக்கு வைத்து விடுவர். அப்படி சிரமப்படாத‌வர்களுள் ஒருவர் என் பாட்டி. என் தாத்தாவின் பெயரையே என் தந்தைக்கு வைத்தவர். ஆக, என் அப்பாவின் ' நேம்' மும் 'இலாஸ்ட் நேம்'மும் ஒன்றே என்றாகிப் போனது. என் வருமான வரி அடையாள அட்டையில், என் தந்தை பெயர், அவருடைய தந்தை பெயருடன் சேர்ந்து அடுத்தடுத்து வந்து விட்டது. வங்கிக் கடனுக்காக, என் வருமான வரி அடையாள அட்டையைக் காண்பிக்க, அச்சுப் பிழை (பெயர் இருமுறை வந்தது) என்று கூறி மனுவை நிராகரித்து விட்டனர். பின் அவர்களுக்கு பேசிப் புரிய வைத்ததெல்லாம் பெருங்காதை.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன பிரச்சனைகளெல்லாம் பெரும்பாலும் ஆண்கள் சந்திப்பவை. பெண்களுக்கோ, இவ்விஷயத்தில்  வேறு மாதிரியான சில பிரச்சனைகளுண்டு. திருமணத்திற்கு முன்னால், பெயருடன் தன் தந்தை பெயரைச் சேர்த்து எழுதுபவர்கள், (அல்லது இன்ஷியலாக பயன்படுத்துவோர்) மணத்திற்குப் பின், கணவர் பெயரை பயன்படுத்த வேண்டுமாம். கிட்டத்தட்ட இருபது வருடங்களாகப்  பழகிய பழக்கம், ஒரே ஒரு மஞ்சள் கயிறு கட்டியவுடன் மாறிப் போகிறது. இது பெரிய அபத்தம்தான் என்றாலும்,இன்றும் தொடர்ந்து வருகிறது. (சிலர் விதிவிலக்கு).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-8NjGKhQm3tQ/Tb5NZFVo5NI/AAAAAAAAAp8/I6iwAQRmTu4/s1600/1.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 210px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-8NjGKhQm3tQ/Tb5NZFVo5NI/AAAAAAAAAp8/I6iwAQRmTu4/s320/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5602000079820481746" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராணா படத்தின் முதல் சுவரொட்டி வெளியாகியிருக்கிறது.வழக்குத் தமிழில், அதனைப் போஸ்டர் என்றும் சொல்லிக் கொள்ளலாம். தப்பில்லை. ஏனெனில், நம் தமிழ்ச் சமூகத்தில் சுவரொட்டிகள், சுவரில் மட்டுமே ஒட்டப் படுவதில்லையே! அசந்தால் உங்கள் உச்சந்தலையில் கூட ஒட்டி விடும் சாமர்த்தியம் நம் கண்ணியமிகு ஊடகங்களுக்கு உள்ளது. ஆனால் அதுவல்ல விஷயம்!&lt;br /&gt;&lt;br /&gt;போஸ்டரில்,'சவுந்தர்யா அஸ்வின் இரஜினிகாந்த்' என்று அச்சிடப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். எந்த பிரகஸ்பதி அல்லது சுக்ராச்சாரியார் இந்த வேலையை, மிகக் கருத்துடன் செய்திருப்பார் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். 'தனுஷ் கஸ்தூரி ராஜா' என்பதற்கு பதிலாக, 'தனுஷ் இரஜினிகாந்த்' என்று போட்டுக் கொண்டால், எவ்வளவு பெரிய அபத்தமோ அதற்கு நிகரான அபத்த‌ம் இது. மணமானவுடன் கணவனின் பெயரை, தம் முதலெழுத்தாக பெண்கள் எழுதிக் கொள்வதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனல், இம்மாதிரியன கோமாளித்தனங்களைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. இரஜினியின் குடும்பத்திற்கு 'கெய்க்வாட்' என்ற 'சர்நேம்' இருக்க, ஏன் இந்த கோமாளித்தனமென்று அந்த எல்லாம்வல்ல‌ பாபாவிற்குதான் வெளிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னிந்தியாவில் இப்படியென்றால், வட இந்தியாவில் , ஒலக அழகி ஐஸ்வர்யா ராயும், மணமான பின் , 'ஐஸ்வர்யா ராய் பச்சன்' என்றுதான் அழைக்கப் படுகிறார். பிரகஸ்பதிகளுக்கு எங்கும் பஞ்சமில்லை. பிரபலங்களுக்கும் கூட, 'பிராண்ட் நேம்'கள் மேலிருக்கும் மோகம் சற்றும் குறையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நம் அரச குடும்பத்திலும் இது தொடர்ந்து நடந்து வருகிறது. 'கிருத்திகா உதயநிதி ஸ்டாலின்' என்கிறார்கள். அதுசரி! அவர்கள், 'கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி முத்துவேலர்' என்று போடாத வரைக்கும் சந்தோஷப் ப‌ட்டுக்கொள்ளலாம். இதையெல்லாம் பார்க்கும் போது, 'அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்' கதைதான் நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-3156479093838408893?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/3156479093838408893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=3156479093838408893' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/3156479093838408893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/3156479093838408893'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/04/surname.html' title='உங்கள் பெயர் என்ன..?'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-8NjGKhQm3tQ/Tb5NZFVo5NI/AAAAAAAAAp8/I6iwAQRmTu4/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-7131470403195078694</id><published>2011-04-14T09:11:00.003+05:30</published><updated>2011-04-14T09:34:05.888+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகிழ்ச்சி..'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><title type='text'>சும்மா வருவாளா சுகுமாரி...?</title><content type='html'>முன்னொரு காலத்தில், ஏதோ ஒரு நாட்டின் மன்னர் அதற்கு முன் புத்தாண்டாக இருந்த, ஏபரல் ஒன்றாம் தேதியை ஜனவரி ஒன்றாக மாற்றினாராம்.அதன் பின்னரும் சிலர் ஏப்ரல் ஒன்றை புத்தாண்டாகக் கொண்டாடியதால், அவர்களை முட்டாளாகளென ’போற்றுவதற்காக’ ஏப்ரல் ஒன்றாம் தேதியானது முட்டாள்கள் தினமாக அறிவிக்கப்பட்டதாம்.இதுவும் எல்லா கதைகளைப் போலவே கட்டி விட்டதாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப்போலவே சித்திரை ஒன்றன்று நாம் கொண்டாடிய (?) தமிழ்ப் புத்தாண்டை, இப்போது தை ஒன்றாக நம்’மன்னர்’ மாற்றிவிட்டார். சொல்ல முடியாது. யாரேனும் சித்திரை ஒன்றன்று புத்தாண்டு வாழ்த்துக் கூறினால் முட்டாள்கள் ஆக்கப்படலாம். வேண்டுமானால் “மாத முதல் தேதி வாழ்த்துகள்” சொல்லிக் கொள்ளலாம். எது எப்படியாயினும் சன் குழுமம் உதித்த நாளுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் கட்டாயம் உண்டு. கலைஞர் தொலைக்காட்சியிலும்தான்! பின்னே, சும்மா வருவாளா சுகுமாரி...? விளம்பரதாரர்களின் கோடிகள் டிஸ்கோ ஆடும் யேவாரமாச்சே...!&lt;br /&gt;&lt;br /&gt;பை தி வே,  நான் முட்டாளாகவே இருக்க ப்ரியப்படுவதால், சக பக்கிகள் அனைவருக்கும் இனிய‌ தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! இன்புற்றிருக்க வையகமே!&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-7131470403195078694?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/7131470403195078694/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=7131470403195078694' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/7131470403195078694'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/7131470403195078694'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/04/blog-post_14.html' title='சும்மா வருவாளா சுகுமாரி...?'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-1916114630298321995</id><published>2011-04-11T12:17:00.007+05:30</published><updated>2011-04-11T12:32:55.888+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>இரண்டு திரைப்படங்கள்!</title><content type='html'>இராசு மதுரவனின் "முத்துக்கு முத்தாக" பார்க்க வாய்த்தது. கோரிப்பாளையம் தவிர்த்த இவரின் மற்ற படங்களனைத்தும் எனக்குப் பிடித்தே இருந்தது. குடும்ப ஆண்களின் உலகத்தைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது முத்துக்கு முத்தாக. கிராமத்து உறவுச் சிக்கலைப் படம் பிடிப்பதில், இராசு மதுரவன் கில்லாடி.பாலச்சந்தர் பாணி உறவுச் சிக்கல்களல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நட்ராஜின் நடிப்பில் நல்ல முன்னேற்றம். இரு தலைக் கொள்ளி எறும்பாக அழகான நடிப்பு. விக்ராந்த் இந்தப் படத்திலும் கிணற்றில் போட்ட கல்தான்.அவரது முகம் எந்த உணர்ச்சியையும் காட்ட மறுக்கிறது.மோனிகா ஆரவாரமில்லாமல் வந்து போகிறார்.ஓவியா ஓ...வியா! சிறிது நேரமே வந்தாலும் இராஜ்கபூரின் மனைவியாக வரும் பெண் (விருமாயி) கவர்கிறார்.படத்தில் நடித்த எல்லோரையும்,மிகச் சாதாரணமாக‌ தூக்கிச் சாப்பிடுபவர் இளவரசு. அம்சமான நடிப்பு. சரண்யாவே அவருக்குப் பிறகுதான். அதுவும் இறுதிக் காட்சியில், சரண்யாவுடன் பேசும் காட்சிகள் மைதான‌ம் தாண்டிய சிக்ஸர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தமிழ் சினிமாவில், துணிக் கடைகளில் பெண்கள் உடை மாற்றுவதை ஒளிந்திருந்து பார்ப்பதைக் காட்டும் கலாச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது.இப்படத்திலும் அது வானாளாவப் பறக்கிறது. சில இடங்களில் தன் சமுதாயக் கோபத்தையும் தொட்டும் தொடாமல் வெளிப்படுத்துகிறார் இயக்குநர்.MLA-வை ஊர்மக்கள் கொல்லத் துரத்தும் காட்சியை, அமைத்த விதத்திற்கு,கொஞ்சம் தைரியம் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்கள் ஒன்று கூட மனதில் நிறகவில்லை. மேலும் மிகை நடிப்புகளையும், மிகைப்படுத்தப் பட்ட காட்சிகளையும் குறைத்திருந்தால், படம் நிறைவாக இருந்திருக்கும்.இராசு, தன் எல்லாப் படங்களிலும் ஒரே நடிகர்களைப் பயன்படுத்துகிறார் என்ற கருத்தும் உண்டு. படத்தின் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் உங்களுக்கு சிறு கலக்கமாவது ஏற்படுவது உறுதி. குறியீடுகளால் குழப்பி பின் தெளிவுறச் செய்து நெகிழ வைக்கும் So Called உலகப் படங்களை விட,உணர்வுகளை ரா-வாகத் தந்த "முத்துக்கு முத்தாக" எனக்குப் பிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்கு முத்தாக - உணர்வுக் குவியல்!&lt;br /&gt;&lt;br /&gt;***************************&lt;br /&gt;&lt;br /&gt;தனுஷின் மாப்பிள்ளை. இதை நகைச்சுவைத் திரைப்படம் என்றுதான் சொல்கிறார்கள். நம்பியாக வேண்டியது நம் தலையெழுத்து. தனுஷ்க்கு ஆடுகளத்தின் வெற்றி பிடிக்கவில்லையோ என்னவோ, சீடன், மாப்பிள்ளையென மாய்ந்து மாய்ந்து தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டுள்ளார். மொக்கையாக இருக்கும் என்று எண்ணிதான் சென்றேன். ஆனால், என் எதிர்பார்ப்பை மீறி 'அதி தீவிர உக்கிர மொக்கை'யாக இருந்தது. சரி, ஹன்சிகாவுக்காக ஆறுதல் படலாமெனில், அவர் தனுஷ்க்கு அக்கா மாதிரி இருக்கிறார். யாரோ மனிஷா கொய்ராலாவைப் போல் நடித்திருக்கிறார். யாரென்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில காட்சிகளைத் தவிர, விவேக்கைப் பார்க்கும் போது மிளகாயை பதமாக அறைத்து முகத்தில் அப்பிக் கொண்டதைப் போல் இருக்கிறது. வடிவேலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவாவது போக‌லாம். பற்றாக்குறைக்கு பாபு கோஷ்டிகள் வேறு. அவர்கள் காமெடி(?) க்கு அவர்களேதான் சிரித்துக் கொள்ள வேண்டும். மனோபாலா மட்டும் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். படத்தில் எனக்குப் பிடித்த இரண்டே இரண்டு விஷயங்கள். ஒன்று வசனங்கள். மற்றொன்று விவேக் &amp;amp; கோ - வின் உடைகள். Better Try Next Time சுராஜ்!&lt;br /&gt;&lt;br /&gt;மாப்பு - கதற கதற வைக்கிறான் ஆப்பு.(பதிவுலக மரபுக்காக)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;-&lt;/span&gt;&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-1916114630298321995?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/1916114630298321995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=1916114630298321995' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/1916114630298321995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/1916114630298321995'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/04/blog-post_11.html' title='இரண்டு திரைப்படங்கள்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-5846307927239316246</id><published>2011-04-04T16:01:00.004+05:30</published><updated>2011-04-04T16:13:30.620+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>திருமங்கலம் தொகுதி! (தொகுதி இரவுண்ட்- அப்)</title><content type='html'>கூட்டணிக் கூட்டணிக் கட்சிகளுடனான, எம்.ஜி.ஆர் ஃபார்முலாவைப் போல, திமுகவிற்கு அழகிரி உருவாக்கிக் கொடுத்த ஃபார்முலா திருமங்கலம் ஃபார்முலா! தமிழகத்திற்கு இடைத்தேர்தல் இலக்கண‌ம் வகுத்த தொகுதி திருமங்கலம். தமிழகத்தையே அழகிரி , தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த அந்த திருமங்கலம் தொகுதிதான் எங்கள் தொகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-y2fRTjycdIA/TZmgNxNEojI/AAAAAAAAAoM/4kBM3u_zSiE/s1600/Constituency_Maps_d6f56d9c-d728-40ea-907a-384105264def-THIRUMANGALAM_196.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/-y2fRTjycdIA/TZmgNxNEojI/AAAAAAAAAoM/4kBM3u_zSiE/s320/Constituency_Maps_d6f56d9c-d728-40ea-907a-384105264def-THIRUMANGALAM_196.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5591676570764091954" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2006 சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்ற மதிமுக வின் வீர. இளவரசன் மாரடைப்பால் மறைந்து போக, ஆரம்பித்தது திருவிழா. திமுக, மறைந்த‌ முன்னாள் நகர் மன்ற தலைவர் அதியமானின் மனைவி லதாவை நிறுத்த, ஜெயலலிதாவோ திருமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கத்தை நிறுத்தினார். அதியமான் மீது மக்களுக்கு இருந்த அனுதாப அலையினாலும், அழகிரியின் ஃபார்முலாவினாலும் லதா வெற்றி பெற்றார்.இங்கு, அதியமானின் சகோதரர்கள் உட்பட குடும்பத்தார் அனைவரும் அதிமுக வினைச் சேர்ந்தோர் என்பதும் குறிப்பிடத்தக்க‌து.&lt;br /&gt;&lt;br /&gt;திருமங்கலத்தைப் பொருத்தவரை, அனைத்து சமூகத்தினரும் பரவலாக‌ வாழ்ந்தாலும் முக்குலத்தோர்க்கு அதிக‌மான வாக்கு வங்கி உள்ளது. அவ் வாக்கு வங்கிதான் வெற்றியை நிர்ணயிக்கும். அதனாலேயே, இரு கூட்டணிகளும் திருமங்கலத்திற்கு முக்குலத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையே தேர்ந்தெடுப்பது வாடிக்கை! அவ்வகையில் திமுக கூட்டணி சார்பாக மணிமாறனும் அதிமுக சார்பில், முத்துராமலிங்கமும் களம் காண்கின்றனர். இருவரும் முக்குலத்தோரே!&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற இடைத் தேர்தலில், திமுக லதா அதியமானை வேட்பாளராக்க பெரும்பங்காற்றிய சேடபட்டி முத்தையா இம்முறை தன்முனைப்பேற்று மகன் மணிமாறனுக்கு வாய்ப்பு வாங்கித் தந்துள்ளார்.தொகுதி சீரமைப்பில் சேடபட்டி தொகுதி இல்லாமற் போனது காரணமாக இருக்கலாம். மணிமாறன் டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாள‌ர்.சென்ற இடைத் தேர்தலில், பேரையூர் தாலுகாவிலும் கள்ளிக்குடி வட்டாரத்திலும் திமுக அதிக வாக்குகள் பெற உழைத்தவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளார். மற்றபடி, தொகுதிக்குள் சேடபட்டி முத்தையாவைத் தெரிந்த பலருக்கு மணிமாறனின் முகம் தெரியாது.இது முதல் பலவீனமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-KVO6NeXCkTA/TZmgOO6Wb2I/AAAAAAAAAoU/zN56lz0_Nis/s1600/mani.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-KVO6NeXCkTA/TZmgOO6Wb2I/AAAAAAAAAoU/zN56lz0_Nis/s320/mani.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5591676578738630498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மணிமாறனுக்கு வாய்ப்பபு வழங்கியதில், அழகிரி ஆதரவாளர்கள் கொஞ்சம் அதிருப்தியில்தான் இருக்கிறார்களாம். ஆனால், அண்ணனோ தென்மண்டலத் தொகுதிகளனைத்திலும் வெற்றிக் கனி பறிக்கக் கங்கணம் கட்டியுள்ளதால், அடக்கி வாசிக்கிறார்களாம். ஆதலால், கட்சிக்குள்ளேயே மணிமாறனுக்கு எதிராக உள்ளடி வேலைகள் நடக்கலாம். இது அடுத்த பலவீனமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இரண்டரை ஆண்டுகளாக பதவியிலிருந்து வரும் சட்டமன்ற உறுப்பினர் லதா அதியமான், பயணிகள்  நிழற்குடை, நெடுஞ்சாலை கட்சிக் கொடிக் கம்பங்கள், காலை மாலையில் வெள்ளை நிற வண்டியில் தொகுதி வலம் வருதல் தவிர தொகுதிக்காக வேறு எதுவும் செய்ததாகத் தெரியவில்லை.மேலும் சென்ற ஆண்டு பேய் மழை பெய்த காலத்தில்,  ஆக்கிரமிப்பு காரணமாக பல வீடுகள் அகற்றப்பட்டதில் நகர பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியைப் பெற்றுள்ளார். இது, மணிமாறனுக்கு மூன்றாவது பலவீனமாக இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறம் அதிமுக சார்பில் களமிறங்கும் முத்துராமலிங்கம் ஏற்கனவே திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.தொகுதி மக்களுக்கு நல்ல பரிச்சயமான முகம். இவர் பதவி வகித்த காலத்தில் மக்களுக்கு ஏதோ சொல்லிக் கொள்ளும்படியான வசதிகளையும் செய்துள்ளார். திருமங்கலத்தில் கா.காளிமுத்து சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலம் தொட்டே, அதிமுக விற்கு செல்வாக்கு அதிகம் தான். 2006 பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலான மதிமுக வெற்றி பெற அதுவும் ஒரு காரணம். ஆனால், சென்ற இடைத் தேர்தலலில் அழகிரி தலைமையிலான‌ திமுக  வின் வெற்றி ,அந்தச் செல்வாக்கை கொஞ்சம் உடைத்துள்ளது நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-6qNILsfl_j0/TZmgOVDnknI/AAAAAAAAAoc/fNZiOH-fNpY/s1600/MUthu.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 300px; height: 225px;" src="http://4.bp.blogspot.com/-6qNILsfl_j0/TZmgOVDnknI/AAAAAAAAAoc/fNZiOH-fNpY/s320/MUthu.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5591676580388115058" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை ஜெ.வுடன் கூட்டுச் சேர்ந்துள்ள தேமுதிக விற்கும் இங்கு வாக்கு வங்கி சொல்லிக் கொள்ளும் படிதான் உள்ளது. இடைத் தேர்தலில் அதிமுக வின் தோல்விக்கு, தேமுதிக வாக்குகளைப் பிரித்ததும் ஒரு காரணம். வைகோ இம்முறை களத்தில் இல்லாததால், அவருக்குச் செல்லும் ஜாதி ரீதியான வாக்குகள் பெருமளவில் விஜயகாந்திற்கு வரும் வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸிற்கும் தொகுதிக்குள் செல்வாக்கு இருக்கத்தான் செய்கின்றது. என்.எஸ்.வி.சித்தன் தொடர்ந்து  நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் மாறி மாறித் தேர்ந்தெடுக்கப் படுவதே இதற்கு சாட்சி. தவிர, மூவேந்தர் முன்னேற்றக் கழகமும் திமுக அணியில் உள்ளது. தொகுதியின் முக்குலத்தோர் வாக்குகளை அள்ளுவதற்கு இது பெரும் பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாக்காளர்களின் மனம், கூட்டணிக் கட்சிகளின் பலம், ஜாதி ரீதியிலான வாக்கு வங்கி, வேட்பாளர்களின் ஜாதிஆகிய காரணிகள் இரு கூட்டணிகளுக்கும் சமமாக இருந்தாலும், அழகிரி ஃபார்முலாதான் இடிக்கின்றது. ஆனால், தேர்தல் ஆணையமும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் இம்முறை கண்கொத்திப் பாம்பாக இருப்பதினால், அது எந்தளவிற்கு வேலை செய்யுமென்பதும் சந்தேகம்தான். ஆக, திருமங்கலம் தொகுதியில் பலத்த இழுபறி நிலை ஏற்பட‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-5846307927239316246?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/5846307927239316246/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=5846307927239316246' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/5846307927239316246'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/5846307927239316246'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/04/blog-post.html' title='திருமங்கலம் தொகுதி! (தொகுதி இரவுண்ட்- அப்)'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-y2fRTjycdIA/TZmgNxNEojI/AAAAAAAAAoM/4kBM3u_zSiE/s72-c/Constituency_Maps_d6f56d9c-d728-40ea-907a-384105264def-THIRUMANGALAM_196.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-6715307148859198533</id><published>2011-03-30T10:59:00.004+05:30</published><updated>2011-04-01T15:31:09.307+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொழுது போகல'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேப்டன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>கேள், அரசியல் வெண்பாம்...!</title><content type='html'>&lt;u style="font-weight: bold;"&gt;கலைஞருக்காக..&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாவதாய் அமைந்திடும் ஆட்சி யென்று&lt;br /&gt;வேறேதும் எண்ணாமல் வெட்டியாய் - பொழுது&lt;br /&gt;கழிக்காமல் சுழன்று கலக்கும் சூரியனுக்கு&lt;br /&gt;சுழித்து விடுவரோ சுழி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u style="font-weight: bold;"&gt;முன்னாள் நிரந்தர முதல்வர் ஜெ.க்காக..&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆணவம் எழுந்து அழகாய் அசைந்தாடின்&lt;br /&gt;காணச் சகிக்குமோ கூட்டணிகளால் - ஆப்பு&lt;br /&gt;அடிப்பது போல் அடித்தனரே யாதலால்&lt;br /&gt;இடித்தது ஆங்கே இடி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u style="font-weight: bold;"&gt;கழற்றி விடப்பட்ட வைகோவுக்காக..&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதி தொட்டு அணியில் இருந்தாய் அம்மாவுடன்&lt;br /&gt;வீதி காட்டி விட்டொழித்தனரே - அன்றே&lt;br /&gt;தலையில் அடித்துத் தவித்தோம் நீயா&lt;br /&gt;இலை யென்றாய் என்று!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u style="font-weight: bold;"&gt;வேட்பாளரை அடித்த விஜயகாந்த்காக..&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டி மிதித்ததால் வேட்பாளரை மிதித்தனார்&lt;br /&gt;போட்டிக் களத்தில் போரிட்டு - ஓட்டினை&lt;br /&gt;எட்டிப் பிடிப்பேனென தெருவினில் கத்திக்&lt;br /&gt;கட்டியம் கூறலாமோ குடிகாரர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u style="font-weight: bold;"&gt;மாம்பழ யேவாரி இராமதாஸ்க்காக..&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓராட்சி மாறி ஓராட்சி மலர்ந்தால்&lt;br /&gt;மரம் விட்டு மரந்தாவும் - குரங்கது&lt;br /&gt;மங்குனியதன் சின்னம் மாம்பழமே யதற்கு&lt;br /&gt;சங்கூதிச் செய் சடங்கு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u style="font-weight: bold;"&gt;அழகிரிக்காக....&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆணையக் கெடுபிடிகள் அழுத்தம் கொடுத்தாலும்&lt;br /&gt;ஏணைய வழிகள் எடுத்து - கச்சிதமாய்&lt;br /&gt;கனி பறிப்பாரோ கவர் அளித்து&lt;br /&gt;பணியை நீயும் பார்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u style="font-weight: bold;"&gt;ச்சும்மா கொசுறு விஜய்க்காக..&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த படத்தில் அகவல் இரண்டெனக்&lt;br /&gt;கடுப்பை யேற்றினாயே காவலா - மைக்&lt;br /&gt;பிரச்சாரம் என்ன பிசாத்தென எண்ணினீரோ&lt;br /&gt;அரசியல் வேண்டாம் அமைதி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u style="font-weight: bold;"&gt;குறிப்பு:&lt;/u&gt;&lt;br /&gt;பொழுது போகாமல் பொரித்த பிழைகளிவை&lt;br /&gt;பழுதிருப்பின் மன்னிப்பீர் பெரியோரே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-6715307148859198533?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/6715307148859198533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=6715307148859198533' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6715307148859198533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6715307148859198533'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/03/blog-post_30.html' title='கேள், அரசியல் வெண்பாம்...!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-2514509994333553225</id><published>2011-03-23T17:09:00.002+05:30</published><updated>2011-03-23T17:17:00.085+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொகுப்புப்பதிவு'/><title type='text'>தமிழக சட்ட மன்றத் தேர்தல்-2011</title><content type='html'>இந்த 2011 சட்ட மன்ற தேர்தலில் ஒரு விஷயம் கவனித்தீர்களா..? எல்லா தலைவர்களும் தங்கள் தொகுதிகளை மாற்றிக் கொண்டு போட்டியிடுகின்றனர். கலைஞர், ஸ்டாலின் போன்ற திமுக பெரிய கைகள் தத்தம் கைகளை மாற்றிக் கொள்ள, முன்னாள் நிரந்தர முதல்வர் ஜெ. வும் ஆண்டிப்பட்டி யிலிருந்து மாறி ஸ்ரீரங்கத்தில் வடம் பிடிக்கிறார்.  பற்றாக்குறைக்கு, கறுப்பு எம்.ஜிஆரும் தான் முதன்முதலில் போட்டியிட்டு ஜெயித்த விருத்தாசலத்திலிருந்து ரிஷிவந்தியத்திற்கு விஜயம்.  வேட்பாளர் பட்டியல் வெளியீட்டிலியே,நடந்த உச்ச பட்சகாமெடி அதிமுக வினுடையதுதான். எல்லா காட்சிகளிலும் முதல் கட்டம்,இரண்டாம் கட்டம் என பட்டியல் வெளியிட்டால், அதிமுக வோ வெர்ஷன் 1, வெர்ஷன் 2 என்று வெளிவந்தது. அதிமுக வேட்பாளர் பட்டியலில்,  "இறுதி நேர மாறுதலுக்குட்பட்டது" என்று அச்சிடாததுதான் குறை.நல்லவேளை எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;***************************&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட, காங்கிரஸ் மட்டும் இறுதியாக இப்போதுதான் அறிவித்துள்ள‌து.பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்...? எல்லா கோஷ்டிகளையும் திருப்திப்படுத்த வேண்டுமே! எதிர்பார்த்தபடியே, எஸ்.வி.சேகருக்கு மயிலாப்பூர் தொகுதி கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால்,தொகுதியே கிடைக்கவில்லை.இப்போது என் சந்தேகமெல்லாம், எஸ்.வி.சேகர் தன் மின்னஞ்சல் முகவரியை என்ன செய்வார் என்பதுதான்!அன்னாரின் மின்னஞ்சல் முகவரி myloporemla@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;***************************&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை தமிழகம் கண்டிராத தேர்தல் ஆணையக் கெடுபிடியால், திமுக வின் திருமங்கலம் ஃபார்முலா எந்தளவு வேலை செய்யுமென்று தெரியவில்லை. இருந்தாலும், அதிமுக வுடனான ஒப்பீட்டளவில், பிரச்சார பலம் திமுக வுக்கே நிறைந்திருக்கின்றது. அதிமுக வில், "போடா வாடா பொட்டைக்கண்ணா" என்றளவில் அரசியல் நாகரிகப் பிரச்சாரம் செய்த எஸ்.எஸ்.சந்திரன் இப்போது இல்லை. மேலும் தீப்பொறி ஆறுமுகமும் இப்போது திமுக வில் ஐக்கியம்.  அதே போல, வைகோ வும் நாஞ்சில் சம்பத்தும் கூட்டணியில் இல்லாததும் மாபெரும் இழப்பு. திமுகவி வினைப் பொருத்த வரை, குஷ்பூ, வடிவேலு, உட்பட சினிமா ‌ நட்சத்திர பட்டாளங்களும் குழுமியிருக்கின்றனர். மேலும் ரஜினியின் வாய்ஸையும் திமுக மறைமுகமாக பெற்றுள்ளது. அதிமுகவில் அதே பழைய கோஷ்டிதான்! சரவணன் மட்டும் புது வரவாக, சிம்ரன்,விந்தியா,கோவை சரளா ஆகியோர் மிஸ்ஸிங். இவற்றையெல்லாம் விட‌, மூமுக சார்பில் திமுக கூட்டணிக்காக களமிறங்கும் நடிகை புவனேஸ்வரியும் நட்சத்திர அந்தஸ்தில் மிக முக்கியமானவர் என்பதையும் நினைவில் கொள்க!&lt;br /&gt;&lt;br /&gt;***************************&lt;br /&gt;&lt;br /&gt;"பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் சாம்பல் வைகோ தலைமையில் மெரினாவில் கரைக்கப்பட்டது " இந்த குறிப்பிட்ட செய்தியைவாசித்ததிலிருந்தே நண்பர்,  "எல்லாரும் ஓட்டு வேட்டையில் பிஸியா இருக்க, வைகோ வுக்கு மட்டும் என்ன தலையெழுத்து...?  ஈழத்தையே கட்டிக்கிட்டு அழுகுறாரு..! எதுக்கு இந்த மாதிரி தேவையில்லாத வேலையெல்லாம் பார்க்கிறார்..? பேசாமல் கொடுத்த‌ சீட்டை வாங்கிக்கிட்டு, கட்சிக்கு நாலைஞ்சு எம். எல்.ஏ தேத்தி நல்லா காசு பார்க்க‌லாம்ல..என்ன சுயமரியாதையாம் பொடலங்கா சுயமரியாதை...! " என்கிற ரீதியில் பொலம்பித் தள்ளி விட்டார். எனக்கும் வைகோ வைப் பார்த்தால் பாவமாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;***************************&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை காங்கிரஸிற்கு எதிரான, சீமானின் பிரச்சார வியூகம் எந்தளவிற்கு பயனளிக்குமென்று தெரியவில்லை.நாம் தமிழர் கட்சியும் களத்தில் குதிக்குமோ..? என்ற பயம் இருந்தது. அப்படி நிகழாதது நல்லது. ஆனால், சீமான் காங்கிரஸிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தால், அவரால் பிரியப் போகும் வாக்குகள் "ஈழத்தாய்" தலைமையிலான கட்சிகளுக்கு சென்று விடுமென்பதும் நிதர்சனம். அதனால், மதிமுக கங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி,  சீமான்  அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கலாம்.காங்கிரஸை மண்ணைக் கவ்வ வைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் வாக்குகளையாவது பிரிக்கலாமென்பதும் மேற்சொன்ன‌ நண்பரின் கருத்துதான். எங்கே..? வைகோ தான் இம்முறை மைக் பிடிக்க மாட்டேன் என்று விட்டாரே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-2514509994333553225?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/2514509994333553225/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=2514509994333553225' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/2514509994333553225'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/2514509994333553225'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/03/2011.html' title='தமிழக சட்ட மன்றத் தேர்தல்-2011'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-39837915871978813</id><published>2011-03-21T11:40:00.004+05:30</published><updated>2011-03-21T11:55:08.146+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>பலி..</title><content type='html'>பங்குனி மாதம்.ஊர் சடச்சம்மன் கோவில் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.வெளியூரின் அக்கம்பக்க சகவாசம் முழுவதும் ஊரை நிறைத்திருந்தன. முந்திய நாள், மந்தையில் திரை கட்டிப் படம் காட்டிய போது,தூவப்பட்ட பேப்பர் துண்டுகள் தெருவெங்கும் இறைந்து கிடந்தன.விடியலின் பனித்திவலைகள் அதன் மேல் பட்டு அவை ஈர மண்ணுடன் ஒட்டி ஊறிப் போயிருந்தன. அவற்றை மிதித்தவாறே, வீட்டிலிருந்தே தெருவிலிறங்கி தோட்டம் நோக்கி நடந்தான் சீனி.தோளில் மம்பட்டி தூங்கிக் கொண்டிருந்தது.தெருவை ஒட்டிய இரண்டு திண்ணைகளுடன் கூடிய வீடு சீனியுடையது. அண்மையில்தான் சந்தன நிறத்தில் புதுப்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனியின் மனது துடித்துக் கொண்டிருந்த‌ வலியை அலட்சியப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். துக்கம் நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்தது. தளர்ந்த நடையால் மந்தையைக் கடந்து கொண்டிருந்தான். இதோ வந்து விடும் கண்ணீர் என்னுமளவிற்கு கண்ணீர் கண்களை நிரப்பி  நின்று கொண்டிருந்தது. இரவுத்தூக்கத்தின் எச்சில் வழித்தடங்கள் முகத்தில் காய்ந்து வடுக்களாகியிருந்தன. உள்ளங்கைகளைத் தேய்த்து முகத்தில் அப்பிக் கொண்டான். அதிகாலைக்குக் கொஞ்சம் இதமாக இருந்தது. அந்த அதிகாலையின் மிதமான குளிர் அவனின் வெற்றுடம்பினுள் ஊடுருவிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்பட்ட பெரிய வேப்பம் மரத்தின் ஒரு கிளையைப் பற்றி பல் தேய்ப்பதற்கு வாகாக, ஒரு குச்சியை உடைத்து வாயினுள் குதப்பிக் கொண்டான். தலையில் சிவப்பு நிற குற்றாலத்துண்டு உருமாவாக பளபளத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடக்கும் போது, சடச்சம்மன் கோவிலில் அதிகாலைப் பூஜைக்கு ஆயத்தம் நடந்து கொண்டிருந்தது. அதைக் கவனித்து ஒரு வெற்றுப் புன்னகை உதிர்த்துக் கொண்டே, வேப்பங்குச்சியுடன் நடந்து சென்று கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சீனி, ஒரு மார்க்கமா இருக்காப்ல" கேட்ட பெருமாள் கோனாரைச் சட்டை செய்யாமல் தன் பாட்டுக்கு போய்க் கொண்டிருந்தான்.விரக்தியான நடை அது.&lt;br /&gt;&lt;br /&gt;பல் விளக்கியவாறே, ஊரைத்தாண்டி, தோட்டத்தை அடைந்திருந்தான் சீனி. நடை உழன்று, தோளிலிருந்த மம்பட்டியை கோரைப் புற்களின் மீது நிலம் அதிரப் போட்டான். அவனுடைய எல்லா செயல்களிலுமே ஒரு வித கலக்கம் நிறைந்திருந்தது.அந்தக் கலக்கத்திற்குக் காரணம் தனலட்சுமி.&lt;br /&gt;&lt;br /&gt;தனலட்சுமி வேறு யாருமல்ல;சீனியின் அக்கா மகள்தான்.அவள் பிறந்தவுடனேயே சீனிக்கும் அவளுக்கும்தான் திருமணமென பேசிப் பேசி,சீனியின் மனதில் ஆசையை வளர்த்திருந்தார்கள். அதனாலேயே சீனிக்கு தனம் தேவதையாகவே தெரிந்தாள்.மூன்று மாதங்களுக்கு முன்பே நிச்சயமும் முடிந்து விட்டிருந்தது.அப்போதிலிருந்தே சீனியைக் கையில் பிடிக்க முடியவில்லை.டவுனுக்கு சென்று,கிருஷ்ண செட்டி கடையில் தாலிக்கெல்லாம் தங்கம் சொல்லியாயிற்று.வரும் வைகாசியில் இந்நேரம் சீனி கும்பஸ்தனாகியிருப்பான். சீனியின் மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அந்த உற்சாகமெல்லாம் நேற்றிரவு வரைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று சடச்சம்மன் கோவில்த் திருவிழாவின் நான்காம் நாள். அவ்வூர் பாரதியார் இளைஞர் மன்ற உபயமாக வெண் திரை கட்டி ஊர்மக்களுக்குத் திரைப்படம் காட்டுவதென ஏற்பாடு. சீனிதான் மன்றச் செயலாளர்.நேரு யுவ கேந்திர இளைஞர் மன்றத்துடன் சடைத்துக் கொண்டு, தனியாக பாரதியார் இளைஞர் மன்றம் தொடங்கிய பின் வரும் முதல் விழ இது. அதனால்,மன்றத்தினர் விழாவிற்காக பம்பரமாகச் சுற்றி வேலை செய்து கொண்டிருந்தனர். எல்லாம் முடித்து,படம் ஆரம்பித்தாயிற்று. ஊர்மக்களனைவரும் கோணிச் சாக்கு சகிதமாய் தரையில் விரித்து,அசலூர்ச் சுற்றாத்தாருடம் திரைப்படத்தில் மூழ்கியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை செய்த களைப்பு நீங்க,சீனியும் அவன் நண்பன் செந்திலும் ஒரு பீடியைப் பற்ற வைத்தவாறே, ஊரின் வெளியே சுப்பையா வாழைத் தோப்ப‌ருகே சென்று கொண்டிருந்தனர். இருளில் சரசரவென ஏதோ மின்னிக் கொண்டு ஊற, செந்தில்தான்,  "சீனி பாம்புடா!!" என்று அலறிக் கொண்டே அருகிலிருந்த கல்லின் மீதி ஏறினான். சீனியும் விருட்டென்று அருகிலிருந்த மண் மேட்டின் மீது தாவி நிற்க, பேச்சுச்சத்தம் தெளிவாகக் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னா புள்ள, வைகாசில‌ உனக்கு உன் மாமங்கூட‌ கல்யாணம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ,நான் அவ்ளோதானா..?"&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சீ யாருய்யா சொன்னா, என் மாமன் ஒரு லூஸுயா.ஏகப்பட்ட சொத்து இருக்கு.என் மேல உசுரா இருக்கான். அவனைக் கட்டிக்கிட்டாத்தான் நாம எப்பவும் போல இருக்கலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுவும் சரிதான்."&lt;br /&gt;&lt;br /&gt;பேசிக் கொண்ட குரல்கள் கொஞ்சம் தனக்குப் பரிச்சயமானதாக‌த் தோன்றவே,மண் மேட்டில் குதிகாலை சற்று அழுத்தி எட்டிப் பார்த்தான்.அங்கு பாலாவின் மடியில் சாய்ந்து படுத்திருந்தது தனலட்சுமியேதான்!&lt;br /&gt;&lt;br /&gt;உடைந்து போனான் சீனி.இரவெல்லாம் தூங்க முடியாமல், படுக்கையில் புரண்டு கொண்டேயிருந்தான். எப்போது தூங்கினானென்று தெரியவில்லை.விழித்துப் பார்த்த போது விடிந்திருந்தது.எழுந்து தோட்டத்திற்கு வந்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;தோட்டத்தின் மாமரத்தினடியில், கலக்கத்துடன் அமர்ந்திருந்தவன் இப்போது தெளிவாகியிருந்தான். தலையில் கட்டியிருந்த உருமாத் துண்டு அவிழ்ந்து தோளில் விழுந்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் கீழே கிடந்த மம்பட்டியை இறுகிப் பற்றினான். முழங்கைக்குக் கீழான நரம்புகள் புடைத்துக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் முடிவை ஊருக்குள் அறிவிக்கும் விதமாக,சடச்சம்மன் கோவிலின் உடுக்கைச் சத்தம் கேட்போர் காதுகளைப் பிளந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-39837915871978813?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/39837915871978813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=39837915871978813' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/39837915871978813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/39837915871978813'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/03/blog-post_21.html' title='பலி..'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-5410413896167481868</id><published>2011-03-17T14:30:00.007+05:30</published><updated>2011-03-17T19:25:03.420+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>என்ன செய்யப் போகிறார் வைகோ...?</title><content type='html'>2011 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சென்ற 2006ல் வைகோ, ஒரு சீட் பிரச்சனையில் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுக முகாமுக்கு வந்து சேர்ந்து அதிர்ச்சி கொடுத்தார். அப்போதே அது வைகோ அபிமானிகள் மத்தியில் அதிருப்தியைக் கிளப்பியது. ஆனாலும், இன்று வரை அந்தக் கூட்டணியிலேயே தொடர்கிறார்.(இப்போது வரை, நாஞ்சில் சம்பத் பேச்சைத் தவிர்த்து, கூட்டணியிலுருந்து விலகுவதாக மதிமுக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக‌ எவ்வித அறிக்கையும் வெளியிட‌வில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;அதைப் போலவே, இம்முறை கலைஞரும் திருமண அழைப்பு கொடுக்க வந்த இராமதாஸுக்கு சீட்களை ஒதுக்கி அதிர்ச்சி கொடுத்தார். இதில் காங்கிரஸிற்கு, திமுக மேல்  ஏக அதிருப்தி. பற்றாக்குறைக்கு, திமுகவிற்கு ஸ்பெக்ட்ரம் சி.பி.ஐ விசாரணை வேறு களிறு காதில் புகுந்த கட்டெறும்பாக தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது. இறுதியாக சாம,பேத,தான, தண்ட வகைகளில் போராடி 63 தொகுதிகளைப் பெற்றது காங்கிரஸ். இராமதாஸும் தன் பங்கிற்கு ஒரு சீட்டைப் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தார். ஒரு வழியாக பிரச்சனைக்கு மங்கலம் பாடி, திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நடந்து வருகிறது. பட்டியல் இன்று மாலை வெளியிடப்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறம், உட்கட்சிக்குள்ளேயே உச்சபட்ச‌ சர்வாதிகாரத்தைக் கடைபிடிக்கும் அதிமுகவும், பெயருக்கு ஏதோ வேட்பாளர் நேர்காணல் நடத்தி அவசர அவசரமாக பட்டியல் வெளியிட்டுள்ளது. அதுவும் 160 தொகுதிகளுக்கு அறிவித்து தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டுள்ளார் ஜெயலலிதா அம்மையார். விஜயகாந்த் வந்து நம்பர் உறுதி செய்து விட்டு சென்ற பிறகு, தோட்டத்தைத் தொடர்பு கொள்ளவே இல்லை போல் இருக்கிறது. அவருக்கு டம்மியான தொகுதிகளை ஒதுக்கியதிலிருந்தே இது புலனாகிறது. பட்டியலைப் பார்த்து, கம்யூனிஸ்ட்டுகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். மதிமுக தரப்பில் இருந்து, நாஞ்சிலாரைத் தவிர யாருமே வாய் திறக்கவில்லை. வைகோவும் மௌனம் காக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால்,விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி அமையலாம் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. அப்படியமைந்தால் கம்யூனிஸ்ட்கள், விஜயகாந்த் பின்னால் செல்லும் போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு இருக்கின்றது. வைகோவும் அங்கு சென்றால், "ஒரே ஜாதிக் காரர்கள்;ஒன்று கூடுகிறார்கள்" என்ற விமர்சனம் வரும். ஆக, இது வரை தன் கட்சிக்குள்ளே இருந்த ஜெ.வின் பாசிச மனப்பான்மை கூட்டணி கட்சிகளின் மீதும் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-iNGgv7zzR1U/TYHUwDp35JI/AAAAAAAAAng/_2zTbXDlpX8/s1600/images.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 192px; height: 263px;" src="http://3.bp.blogspot.com/-iNGgv7zzR1U/TYHUwDp35JI/AAAAAAAAAng/_2zTbXDlpX8/s320/images.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5584978934995870866" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ,கம்யூனிஸ்ட்களை அதிருப்திப் படுத்தியதன் மூலம், ஜெ. தன் தோல்விக்குத் தானே வியூகம் அமைத்துள்ளார். குறிப்பாக, எல்லா கூட்டணிக் கட்சித் தொகுதிகளிலும் எந்த‌ பாகுபாடும் பாராமல் பம்பரமாக சுழன்று பிரச்சாரம் செய்யும் வைகோ இல்லாமலிருந்தால் அது அதிமுக கூட்டணிக்கு மாபெரும் இழப்பு. "வெளியே சொன்னால்  காப்பியடித்து விடுவார்கள்" என்று மானாவாரியாக‌ காமெடி செய்யும் விஜயகாந்த், மைக்கின் முன்னால் நாலு வார்த்தை கூட கோர்வையாக பேசத் தெரியாத விஜய், தமிழக மக்களென்றாலே தன் அகராதியில் நாடார்கள்தான் என்றிருக்கும் சரத் குமார் இவர்களை வைத்துக் கொண்டு கோட்டையென்ன ஒரு கொட்டகையைக் கூட பிடித்து விட முடியாது. மேலும் கூட்டணியில் இருக்கும் இவர்கள் யாருக்குமே, வைகோ அளவிற்கு அரசியல் அனுபவமோ, ஞானமோ கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவும் இந்த விஷயத்தில் பிழைக்கத் தெரியாத மனிதராகவே இருக்கிறார். 'லெட்டர்பேட்' கட்சிகள் உட்பட எல்லாக் கட்சிகளும் கூட்டணி, ஓட்டரசியல் நடத்திக் கொண்டிருக்க இவரோ கோட் சூட் மாட்டிக் கொண்டு விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கக் கோரிய தீர்ப்பாயத்தில் வாதாடிக் கொண்டும், தமிழக மீனவர்களுகெதிரான கொடுமையை எதிர்த்து உண்ணாவிரதமும் இருந்து கொண்டிருந்தார்.. இதுவே கூட ஜெ. வுக்கு வைகோ மீது கோபம் கிளம்ப காரணமாக இருந்திருக்கலாம். தியாகச் சுடர் முத்துக்குமாரின் குடும்பம் மதிமுகவில் இணைந்த போது கூட, அவ்வளவாக விளம்பரம் செய்து கொள்ளாமல் அமைதி காத்து வந்தார். இந்நிலையில், மற்ற கட்சிகளில் முத்துக் குமாரின் குடும்பம் இணைந்திருந்தால், எரிகிற வீட்டில் பிடிங்கிய வரை லாபமென்று அத்தனையையும் ஓட்டாக்கிக் கொண்டிருப்பார்கள். பொறுத்தார் பூமியாள்வார் என்பது அரசியலுக்கு ஒத்து வரவே வராது.&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கு எப்படி இருந்தாலும், கலைஞர் மட்டும், ஆறாவது முறையாக ஆட்சியமைக்கப் போகும் கனவில், தற்போது உள்ளூர மகிழ்ந்து கொண்டிருப்பார்.  இப்போது, கார்த்திக்கிற்கு இருக்கும் சுயமரியாதை கூட வைகோவிற்கு இல்லையா என்பதே வைகோ வை  நோக்கிய ‌கேள்வியாக இருக்கிறது. தமிழர்களை நம்பி வைகோ வீணாய்ப் போனது போதும்! அவர் உடனடியாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் நலம். வைகோவின் முடிவு வரும் சனிக்கிழமை (மார்ச் 19 ) தெரிய வரலாம்.இவ்வருட அரசியல் ஹோலிக்கு வைகோ,ஜெ.யின் முகத்தில் கரி பூசுகிறாரா அல்லது கலர் பூசுகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-5410413896167481868?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/5410413896167481868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=5410413896167481868' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/5410413896167481868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/5410413896167481868'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/03/blog-post_17.html' title='என்ன செய்யப் போகிறார் வைகோ...?'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-iNGgv7zzR1U/TYHUwDp35JI/AAAAAAAAAng/_2zTbXDlpX8/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-6507867604288467450</id><published>2011-03-16T00:09:00.004+05:30</published><updated>2011-03-16T00:30:25.337+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகிழ்ச்சி..'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>ஃபைனான்சியர் பாண்டிக்கு கண்ணாலம்!</title><content type='html'>"மாப்ள, பெரியார் சிலைக்கிட்ட ஒன்னு, தேவர் சிலைக்கிட்ட ஒன்னு, மண்டபத்துல ஒன்னு, ஏரியாவுக்குள்ள ஒன்னு சும்ம 10 க்கு 8 நாலு ப்ளக்ஸ்ஸு வக்கிறோம்! யார்ரா இவிய்ங்கன்னு சும்மா ஊரு அப்டியே மெரளணும் பார்த்துக்க.." என்பதாகத்தான் ஆரம்பிக்கும், நண்பனாக‌ப் பழகிய அண்ணன்களின் திருமண கொண்டாட்டங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; "எங்க பெருசு இன்ஷியலைப் போடறியோ இல்லயோ, பி.ஏ. ன்னு போட்டு, அதுக்கு மேல கோடு போட மறந்துராதீங்க! அப்பறம் வெட்டுக்குத்தாகிப் போயிரும்" அந்த வருடம்தான் கல்லூரி சேர்ந்த முத்துவோ பிரகாஷோ ஆரம்பிப்பார்கள். பிளக்ஸ் பேனர்களில் ஃபோட்டோ போடுவதற்கென்றே, கையில் செல்பேசியுடனோ இடது கை தங்கக் கடிகாரம் மின்னும்படியோ பிரத்யேகமாக ஃபோட்டோ எடுத்து வைத்திருக்கும் பெரிய கைகளும் குழாமில் உண்டு. தன்னுடைய பங்காக பத்து ரூபாய் கொடுக்கும் குஞ்சு குளுவான்களும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;"மாப்ள, ஊரே பத்திக்கிற மாதிரி, ஒரு கேட்ச்சியான தலைப்பு சொல்லுய்யா..!" என்று ஆரம்பித்து, திறந்த பேனாவினால் தாடை சொறிந்து யோசிப்போம்.பெரும்பாலும் அந்த யோசிப்பு , "இரு மனங்கள் இணையும் மண விழா" என்பதில்தான் முடியும். கொஞ்சம் குஜால் மன நிலையில் இருந்தோமேயானால், மணமகனின் படமும் மணமகளின் படமும் பிரபலமான நடிக, நடிகையர்களின் முகங்களில் கிராஃபிக்ஸ் செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் திட்டமிட்டாலும், நண்பர்களின் கொடிய வறுமை காரணமாக, நான்காக கணக்கிடப்பட்ட ஃபிளக்ஸ்களின் எண்ணிக்கை ஒன்றாக ஒடுங்கி விடும். மீதமுள்ள மூன்று பேனர்களைச் சமன் செய்யும் நோக்கில், வால்போஸ்டர்கள் ஆபந்த்பாண்டவனாக வந்து கை கொடுக்கும். அதுவும் ஐநூறு ஆர்டர் செய்து, பொருளாதார சீர்கேடினால் இருநூறாகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, பசை கலக்கி அதை சைக்கிள் ஹேண்ட் பாரில் தொங்க விட்டுக் கொண்டு ஊர் முழுக்க, ஒரு பெட்டிக்கடை, குட்டிச்சுவரென விடாமல் எல்லா இடங்களிலும் ஒட்டித் தீர்ப்போம். பசையில் காய்ந்த கைகள் இறுகத் தொடங்கி விடும். பெட்டிக்கடைகளின் தகரங்கள் மற்றும் ஆணிகள் குத்திக் கிழித்து இரத்தம் கொட்டிய கதைகளும் கூட உண்டு. எது எப்படியாகினும் இரவு ஒன்றரை மணி சுமாருக்கு, போஸ்டர் ஒட்டும் வைபவம் நியாஸ் ஹோட்டல் பரோட்டா+சால்னாவுடன் முடிவடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு, சரக்கின் மீது மையல் கொண்ட காளையர்களுக்குத்  தீர்த்த வாரி ஆரம்பிக்கும்.திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் சரக்கு பாட்டிலைத் தூக்குபவனும் திருமணத்தன்று காலையில் சாம்பார் வாளி தூக்குபவனும்தான் உண்மையான நண்பன் என்ற சித்தாந்தம் எங்களுள் வேரூன்றி இருந்தது. யார் எவ்வளவு குடித்தாலும், மறு நாள் திருமணத்தில் ஆஜராகி விடுவர். சரக்கின் மீது பிரயாசை இல்லா புண்ணியாத்மாக்கள் ஒருபுறம் சீட்டுக்கட்டுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் திருமணத்தின் மணமேடை, சமையற்கூடம், பந்தி பரிமாறுதல், மொய் எழுதுதல் என எல்ல இடங்களிலும் எங்கள் நண்பர்கள் குழாம்தான் வியாபித்து இருக்கும். பந்தி பரிமாறுவதற்கு முன், ஸ்பெஷல் டிஷ்களை எங்களுக்கென தனியாக எடுத்து வைத்து விட்டுதான் பரிமாற ஆரம்பிப்போம். மொய் எழுதுதலை விட, மொய்ப் பணத்தை எண்ணுவதென்பது சுவாரசியமான காரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாயில் மஞ்சள் துணி கட்டப்பட்ட, மொய்ப் பானையுடன் மண்டபத்தின் ஏதாவது ஒரு அறைக்குள் புகுந்து விடுவோம். கூடவே, அதிரசம், முறுக்கு, லட்டு என பலகாரங்கள் அனைத்தும் வந்து விடும். அவையனைத்தும் காலியாகும் போதே, மொய்ப் பணமும் ஐநூறு, நூறு, ஐம்பதென வகையாகப் பிரிந்து கொண்டிருக்கும். இறுதியில் கூட்டிக் கழித்து திருமண வீட்டாரிடம் பணத்தை ஒப்படைத்த பிறகு, "என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்" என்பதி மாதிரியானதொரு ஃபீல் வரும் பாருங்க! அதற்கு ஈடு இணையே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வேறென்ன..? நண்பனுக்குத் திருமணம் முடிந்த சந்தோஷத்தையோ அல்லது அனுதாபத்தையோ கொண்டாட மறுபடியும், மூணாவது கடையில்  தீர்த்த வாரி ஆரம்பிக்கும். என் போன்ற சைடுடிஷ்வாதிகள் அங்கு பார்வையாளர்களாக இருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க.இப்போது ஏன் இந்த ஃபிளாஷ்பேக்...?&lt;br /&gt;&lt;br /&gt;ஊரில்,பாசத்திற்கும் பெருமதிப்பிற்கும் உரிய அண்ணன்.திரு.வி.பி.ஆர்.பாண்டியன் அவர்களுக்கு இன்று (16.03.2011) திருமணம்.அங்கே,சட்டையில் சாம்பார் கறையுடனும், கையில் பாயாச வாளியுடனும் பந்தியில் நிற்க வேண்டிய நான் இங்கே கூலிக்கு கீ போர்டு தட்டிக் கொண்டிருக்கிறேன். என்ன செய்ய..? காலம் வலியதன்றோ..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe title="YouTube video player" src="http://www.youtube.com/embed/T6IWIJSnotg" allowfullscreen="" frameborder="0" height="390" width="480"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனை வாழ்த்த வயதில்லை என்றாலும் வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"என்னிக்கும் நீங்க நல்லாருக்கணும்ண்ணே!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-6507867604288467450?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/6507867604288467450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=6507867604288467450' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6507867604288467450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6507867604288467450'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/03/blog-post_16.html' title='ஃபைனான்சியர் பாண்டிக்கு கண்ணாலம்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/T6IWIJSnotg/default.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-3083094713850018379</id><published>2011-03-04T09:34:00.001+05:30</published><updated>2011-03-04T09:36:40.609+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்..'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை முயற்சி'/><title type='text'>தொட்டி மீன் !</title><content type='html'>மனிதர்களற்ற வீட்டின்&lt;br /&gt;தொட்டியினுள் சலனமற்று&lt;br /&gt;வாழ்தலின் பொருட்டு&lt;br /&gt;உலாவும் மீனுக்கு&lt;br /&gt;சமுத்திரத்தின் சுதந்திரமோ&lt;br /&gt;வலை நோக்கிய போராட்டமோ&lt;br /&gt;எதுவாகினும்&lt;br /&gt;தெரிவதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;- ராஜூ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;நன்றி:-&lt;/u&gt;ஆனந்த விகடன். (09.03.2011)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-3083094713850018379?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/3083094713850018379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=3083094713850018379' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/3083094713850018379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/3083094713850018379'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/03/blog-post_04.html' title='தொட்டி மீன் !'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-7552867793551631332</id><published>2011-03-01T00:12:00.002+05:30</published><updated>2011-03-01T09:11:16.467+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரணமொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கத‌'/><title type='text'>குழந்தைகளுக்கான நீதிக்கதைகள்!</title><content type='html'>அந்த ஆய்வகத்தில் விஞ்ஞானியைச் சேர்த்து மொத்தம் ஒன்பது  பேர் இருந்தனர். அதில் இருவர் பெண்கள்.அவர்கள் ஈடுபட்டிருப்பது ஒரு ஆபத்தான ஆய்வு. தற்போது விஞ்ஞானி பேசிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்டூடன்ஸ்! இதுதான் நம்ம டெஸ்ட்டுக்கு தேவையான எலிமெண்ட். இது ரொம்பவே காஸ்ட்லி. 120 கிராமே 165 டாலர்ஸ். ரொம்ப டேஞ்ஜரஸானதும் கூட! இது மேல ஒரு துளி தண்ணி பட்டாலும் ஒரு நச்சு வாயு வெளியே பரவ ஆரம்பிச்சுரும். அப்பிடி பரவினதுன்னா, உடனே இத முழுசும் தண்ணீல நனைய வச்சிரணும்.. புரிஞ்சுதா..?" என கேட்டுக் கொண்டே, அதைக் கீழே வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் அந்த நிகழ்வு! &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கருப்பு நிற மூலப் பொருளின் மீது, எதிர்பாராமல், தண்ணி பட்டு விட்டது. உடனே கதிர்,ஓடிப் போய் அதை ஒரு துணியால் தூக்கி அங்கிருந்த வாஷ் பேசினில் போட்டு தண்ணீரைத் திறந்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஊப்ஸ்! " என விஞ்ஞானியும் மற்றவர்களும் பெருமூச்சு விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;நீதி:&lt;/u&gt;நாலு பேர்க்கு மட்டுமல்ல, பத்து பேருக்கு நல்லதுன்னாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;**********************&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிக்கு அன்று சம்பள தேதி. அவனுடைய‌ அலுவலகத்தில் இன்றும் கவரில் பணத்தை வைத்துத் தரும் ஆதி கால நிகழ்வுதான்! சாயங்காலம்தான் பட்டுவாடா நடக்கும். அவனுக்கு ஆறு குழந்தைகள். வேகமாக திருமணம் செய்து விட்டதாலோ என்னவோ, காய்ந்த மாடு கம்பில் புகுந்ததைப் போல் புகுந்து விட்டான். எனினும் குழந்தைகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தான் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பளத் தேதியைக் குறி வைத்து குடும்பத்தில் ஏகப்பட்ட தேவைகள் இருந்தன. மனைவி போன மாதம் எடுத்த புடவைக்கு, மேட்சிங்காக ஜாக்கெட் தைப்பதற்காக பணம் கேட்டிருந்தாள். குழந்தைகளோ "கேரம் போர்டு" கேட்டிருந்தார்கள். வீட்டிற்கும் மராமத்து பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பளம் வாங்கியவுடன் அருகிலிருந்த ஸ்போர்ட்ஸ் கடைக்குச் சென்று, ஒரு நல்ல கேரம் போர்டாக பார்த்து வாங்கிக் கொண்டான். எழுநுறு ரூபாய் சொன்னார்கள். ஆனால் ஆறு நூற்றி தொண்ணூறு ரூபாய்க்கு வாங்கியதை எண்ணிப் பெருமை கொண்டவாறே, வீட்டிற்கு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்ததும் வராததுமாக, " பிள்ளைகளா, அப்பா என்ன வாங்கிட்டு வந்துருக்கேன் பாருங்க! " என்று சந்தோஷக் கூச்சலிட்டு&lt;br /&gt;கேரம் போர்டைக் கொடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகளும் கத்திக் கொண்டே, அதன் மேல் சுற்றியிருந்த கவரை நீக்கின. யார் முதலில் அமர்ந்து விளையாடுவதென்ற சண்டை. நாலு பேர் அமர்ந்து விளையாடினாலும், மீதி இரண்டு பேர் சும்மா இருக்க வேண்டுமே!&lt;br /&gt;சண்டை முற்றியதில், கேரம் போர்டு துண்டு துண்டுகளாயின.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஷாட்டில், வெற்றி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, சோகத்தில் அமர்ந்திருந்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;நீதி:&lt;/u&gt;கறை மட்டுமல்ல, சமயங்களில் உறையும் நல்லதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;**********************&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கள் கட்சி, ஜாதிக் கட்சியல்ல, நாங்கள் ச்முதாயத்திலுள்ள அனைத்து சமூகத்தினர்க்கும் நல்லாட்சி அமைத்திட அயராது பாடுபடுவோம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,எதிர்கால சந்ததியினருக்கு ஜாதியென்ற ஒன்று இருந்ததாகவே தெரியாது"இப்படியாக ஒரு மணி நேரம் ஆற்று ஆறுவென ஆற்றிய அய்யா உரை முடிந்து காரில் ஏறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யா, நம்ம புது காருக்கு டிரைவர் வேலைக்கு, ஒரு ஆளு வந்திருக்கான்"  இது பி.ஏ.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆளு எப்பிடி, நம்ம ஜாதிக்காரனா..?" அமைதியாகக் கேட்டார் அய்யா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;நீதி:&lt;/u&gt;கீழ் மக்களும் கீழ் மக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;-ராஜூ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-7552867793551631332?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/7552867793551631332/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=7552867793551631332' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/7552867793551631332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/7552867793551631332'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/03/blog-post.html' title='குழந்தைகளுக்கான நீதிக்கதைகள்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-1537574110606193265</id><published>2011-02-24T10:01:00.006+05:30</published><updated>2011-02-26T12:11:19.723+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நையாண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமாரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்ஸ்'/><title type='text'>ஒரு கடிதமும் நடுநிசி நாய்களும்...</title><content type='html'>டியர் சார்,&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நாட்களாக உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டுமென‌ நினைத்து, இப்போதுதான் எழுத முடிந்தது.  நீங்கள் இன்னும் நடுநிசி நாயகள் குறித்து எழுதாமல் இருப்பது கடும் மன உளைச்சலைத் தருகிறது. ஏன் அந்தப்படத்திற்கு இவ்வளவு எதிர்ப்புகள்..? இன்றாவது  அப்படத்தைப் பற்றி எழுதி விட மாட்டீர்களா..? என்று நினைத்து நினைத்து தினமும் அப்படத்திற்கு டிக்கெட் ரிசர்வ் செய்து செய்து வீணாகப் போய் விடுகிறது. தயவு செய்து அதைப் பற்றி எழுதுங்கள் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு,&lt;br /&gt;Dr.குரங்கு குப்பன்.(CBSE)&lt;br /&gt;வாக்காளர் அடையாள அட்டை எண்: 14785632&lt;br /&gt;கோயம்புத்தூர் 1431&lt;br /&gt;தேனி மாவட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம் குரங்கு குப்பன்! &lt;br /&gt;சில நாட்களுக்கு முன்னர், "அச்சமுண்டு அச்சமுண்டு" என்றொரு படமொன்று வந்தது. அது சிறுமிகள் மீதான பாலியல் அத்து மீறலைப் பேசியது. அதன் கதைக் களம் அமெரிக்கா. நடுநிசி நாய்கள் என்ற இந்தப் படம்,சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறலையும் அதனால் ஒருவன் எப்படி பாதிக்கப் படுகிறான் எனவும் பேசுகிறது. (அப்படித்தான் சொல்கிறார்கள்). இதன் கதைக்களம் இந்தியா என்பதாலோ  என்னவோ, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை ஏற்றுக் கொண்ட நம் மக்களால், இதை ஜீரணிக்க முடியவில்லை. கிடக்கட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;அதில் சிறுமி.இதில் சிறுவன். அவ்வளவுதான் வேறுபாடு. அ.அ. படத்தில் வேறொருவன் தானே அச்சிறுமியிடம் அத்து மீறுகிறான்..? ஆனால், ந.நா. வில் சிறுவனின் (சொந்த) அப்பாவே அல்லவா அத்து மீறுகிறார்! என்ற வாதம் உங்களுக்கு இருக்கக்கூடும். காமத்திற்குத் தேவை உறவுகளல்ல;உடல்களே என்பதே அதன் பதிலாக இருக்கும். படத்தின் ஒரு சீனில், கூட்டுக் கலவி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்நேரம் பார்த்து காவல்துறை வந்து, அனைவரும் பிடிக்கிறது. உடனே, சிறுவனின் அப்பா தன்னை மாய்த்துக் கொள்கிறார். ஆக, காமம் தெளிந்த பின் ஏற்படும் குற்றவுணர்வு கலந்த பயம்தானே அதைச் செய்ய தூண்டுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;அச்சு ஊடகத்தில் பன்றியைப் புணர்தல், குப்பி கொடுத்தல்,ஓரினச் சேர்க்கை, மாற்றன் மனைவியை கவர்தல் பற்றியெல்லாம் எழுதி விட்டால், "பேசாப் பொருளை பேசுகிறார்" என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அதையே ஒருவர் காட்சி ஊடகத்தில் செய்தால், செருப்பால் அடிக்க வேண்டும், நாய்களை வைத்து போராட்டம் நடத்த வேண்டும்,காறி உமிழ வேண்டுமா..? சிரிப்புதான் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில், தமிழிலேயே இன்செஸ்ட் வகைக் கதைகள் ஆயிரமாயிரம் கிடைக்கின்றன. ஆனால், அவைகளில் ஒன்று கூட அப்பா-மகன் உறவு இல்லை எனும் ஒரு மொக்கை வாதம்! ஏனய்யா அக்கா தம்பி, அம்மா மகன், அண்ணன் தங்கை இன்செஸ்ட் கதைகளையெல்லாம் என்ன ஏலியன்ஸா எழுதினார்கள்..?நம்மைப் போல இரு கைகளும், ஒரே ஒரு.. தலையும் கொண்ட மனிதர்கள்தானே எழுதினார்கள்!அதைப் போல, கௌதமை மற்றுமொரு வகையிலான‌ இன்செஸ்ட் கதையெழுதியவராகப் பார்க்கலாமே! ஆழ்மனதின் வக்கிரத்திற்கு உரு கொடுத்து கற்பனையில் நடமாடவிட்டால், காமக் கொடூரன் பட்டமா..?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு திரைப்படம் என்ற வகையில் பார்த்தோமேயானால், நடுநிசி நாயகள் என்பது அதி நவீன தொழில் நுட்பங்கள் கலந்து கொடுக்கப் பட்டிருக்கும் கௌதம் மேனனின் மற்றுமொரு மொக்கைப் படமே!பற்றாக்குறைக்கு, Multiple Disorder,WTF,psycho போன்ற ஆங்கில கலைச் சொற்களை ஆங்காங்கே தூவியிருக்கிறார்.ஆனால், இதைப் பார்த்துதான் ஒரு அப்பன் தன் மகனை அப்யூஸ் செய்வான் என்றால், அவனின் திரைப்பட ரசனையைத்தான் சந்தேகிக்க வேண்டும். ஒரு நல்ல கதையை தன்னுடைய டிரேட் மார்க் கிளீஷேக்களால் த்ராபையாக்கி விட்டார் கௌதம். பாவம், தாமரையும் ஹாரிஸும் இருந்திருந்தாலாவது கொஞ்சம் கல்லா கட்டியிருக்கலாம். கோட்டை விட்டு விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்திற்கு ஏன் " நடுநிசி நாய்கள்" என்று பெயர் வைத்தார்களென்று தெரியவில்லை. ஒரு வேளை இறுதிக் காட்சிகளில் மூன்று நான்கு நாய்களைக் காட்டுவதால் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக,குரங்கு குப்பனுக்கு மட்டும் ஒரு பிரத்யேக அறிவுரை: எந்தவொரு So Called திரைவிமர்சகர்களின் விமர்சனத்தையும் மதிக்கத் தேவையில்லை. உங்களுக்கு ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமெனத் தோன்றினால், தயங்காமல் பாருங்கள் குப்பன்! அதுதான் நம் தமிழ் ஃபன்ஃபாடு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;-ராஜூ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;4.52 AM&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-1537574110606193265?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/1537574110606193265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=1537574110606193265' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/1537574110606193265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/1537574110606193265'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/02/blog-post_24.html' title='ஒரு கடிதமும் நடுநிசி நாய்களும்...'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-6675691556522529382</id><published>2011-02-22T10:55:00.001+05:30</published><updated>2011-02-22T11:02:04.100+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுபவம்'/><title type='text'>காலங்களில் அது வசந்தம்!</title><content type='html'>அப்போது நாங்கள் இராஜாஜி ஏழாவது தெருவில் குடியிருந்தோம். ஹால் என்ற சொல்லுக்கே அவமானம் விளைவிக்குமொரு ஹாலும்,  சிலிண்டர் வைத்தாலே பாதி இடத்தை அடைத்துக் கொள்ளும் சமையலறை மட்டுமே அங்கு. பள்ளிக்கூடம் முடித்து வந்தவுடனே, தோராயமான வெள்ளை நிறத்திலான சட்டையைக் கழட்டி எறிந்து விட்டு வெற்றுடம்புடன் ஆலமரத்திற்கு கிளம்பி விடுவேன். ஆலமரம் எங்கள் தெரு மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள எல்லா தெருக்களுக்கும் கலாச்சார மையம். சீசனுக்கேற்றாற் போல, விளையாட்டுக்கள் சூடு பிடித்து பற்றி எரிந்து கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோலிக் குண்டு சீசனென்றால், அதிலும் விளையாட்டு வகைகள் பூந்தா, ராஜா ‍டோனி, ஜோடி போடுதல் என்றிருக்கும். அப்போது ஜெயித்த கோலிக் குண்டுகளை வாட்டர் பாட்டிலில் சேகரிப்பது குல வழக்கம். வெற்றுடம்புடன் இடுப்பில் இழுபறி நிகழ்த்திக் கொண்டிருக்கும் கால்சட்டைப் பையை அழுத்திப் பிடித்துக் காட்டி, சக கால்சட்டையிடம், "இன்னிக்கு இம்பூட்டூ ஜெயிப்புடி" என்று சொல்வதன் சுகமே தனி. காசுகளின் அருமை தெரியாத அற்புத பால்யம் அது.குண்டுகளுக்காக உயிரைக் கூட கொடுத்து விடுவோம். அதில் உடனிருந்த நண்பனுக்கு ஒரு பழக்கம். குண்டை எச்சில் தொட்டு ( நக்கி) விட்டு ஓரக் கண்ணால் குறி பார்த்து அடிப்பான். சமயங்களில் குண்டு சிதறிக் கொண்டு சில்லு பெயர்த்து விடும். அப்போது ஒரு குண்டு ஐந்து பைசா என்று நினைக்கிறேன். கொஞ்சம் பெரிய (மொடா என்பார்கள்) குண்டு இருபத்தைஞ்சு பைசா. (கால் ருவா).&lt;br /&gt;&lt;br /&gt;குண்டு விளையாட்டிற்கு நிகரான சுவாரஸியம் கொண்டது பம்பரம். பம்பரத்தில் சாட்டையை இறுக்கிச் சுற்றி,நுனி ஆணியில் லைட்டாக நாக்கை வைத்து, இழுத்து குத்தினால்  வட்டத்திற்குள் வைத்த கட்டை வைரக் கட்டையாகவே இருந்தாலும் ஆக்கர் நிச்சயம். கட்டை வெளியே வந்தவுடன் அவரவர் பம்பரங்களை நிலத்தில் சுற்றி விட்டு, கோஸ் எடுப்பது கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ வேண்டும். இல்லையெனில் உங்கள் கட்டை ஆக்கர் வாங்கக் கூடும். சாட்டையைச் சுற்ற சுற்ற, ஆட்காட்டி விரலின் நுனியில் கொப்பளங்களே வந்து விடுமளவிற்கு மிக வேகமாக சுற்றி விளையாடுவோம். சில சமயங்களில் தோல் உரிந்து ரத்தம் கொட்டும். ஆனால், ஒரு முறை கூட வலித்ததேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பம்பர சீசன் தொடங்கியவுடன்,பம்பரத்திற்கு ஆணியை கூராகத் தீட்டுவதற்கு கொல்லம்பட்டறையை நோக்கி படையெடுப்போம்.பட்டறைக்கார அண்ணனிடம் கெஞ்சிக் கூத்தாடி,ஆணியைக் கூராக்கி வந்த நினைவுகளெல்லாம் நினைக்க நினைக்க இனிப்பவை.  தனியாக மரக்கட்டை,ஆக்கர் ஆணி தேர்ந்தேடுத்து பிரத்யேக ஆர்டர் கொடுத்து பம்பரம் செய்யும் ஆட்களெல்லாம் உண்டு. பட்டறைக்குச் சென்று ஆணியைப் பதமாக்குவதை விட, ஒரு எளிய வழியொன்று உண்டு. அடிகுழாய் இருக்கிறதில்லையா.. ?அது நீரை நிலத்திலிருந்து இறைப்பதற்குத் தோதாக இருக்கும் கைப்பிடிக்கும் அது கீழே சென்று மோதும் இடத்திற்கும் இடையில் பம்பரத்தின் ஆணியை வைத்து ஒரு பத்து அடி மாற்றி மாற்றி அடித்தால் ஆணியைக் கூராக்கும் கலை கை வந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணியைக் கூராக்கியவுடன் அடுத்த வேலை சாட்டை தேர்வு செய்தல். சாட்டை என்றால் கயிறு. கயிறுதானேயென்று சாதாரணமாக விட்டு விட்டால், விளையாட்டில் அது உங்களுக்கு பாசக்கயிறாகி விடும். சாட்டை நுனியில் முடிச்சுகள் போட்டு, சிங்கி கட்டுவதற்காகவே (கூல்டிரிங்க்ஸ் பாட்டில் மூடி) கடை கடையாக சிங்கி பொறுக்கிக் கொண்டு அலைந்திருக்கிறோம். ஒருவனுக்கு கோகோ கோலா மூடிதான் ராசியென்றால், இன்னோருவனுக்கு ஃபேன்டாவாக இருக்கும். காளி மார்க் பன்னீர் சோடா மூடியைக் கூட விட்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் பம்பரம் உங்கள் கைவித்தையில் சுற்றினாலும், கோஸ் எடுப்பதற்கு சாட்டைதான் மிக முக்கிய காரணி. சாட்டையைப் பந்தயம் வைத்தெல்லாம் விளையாடுவோம். தோற்றுவிட்டால், தோற்றவனின் சாட்டையைப் பாதியாக அறுத்து, அதை ஜெயித்தவனுக்குக் கொடுத்து விட வேண்டும். இதன் பெயர் "சாட்டை அந்தா பப்பாதி". புத்தம் புதிய பம்பரக் கட்டை வட்டத்திற்குள் இருக்கும் போது, "கட்டை ஜொலிக்குதேய்ய்ய்" என்று கத்தியவாறே ஆக்கர் போடத் துடிக்கும் தருணங்கள் பரவசமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;சாட்டை வாங்க 50 பைசாவிற்கு வழி இல்லாவிட்டால், இருக்கவே இருக்கிறது அம்மா அல்லது அக்காவின் பாவாடை நாடா. உருவி விட வேண்டியதுதான்!  வீட்டில் பாவாடை நாடாவைத் திருடினால், பூஜை நிச்சயமென்பதால் பக்கத்து வீட்டுக் கொடியில் காயும் பாவாடைகளை கன்னம் வைத்த அனுபவமெல்லாம் எனக்குண்டு. ஆனால் பாவடை நாடாவில், பம்பரம் சுற்றும் லாவகம் அவ்வளவு எளிதாக வாய்த்து விடாது.&lt;br /&gt;&lt;br /&gt;மண்டையைப் பிளக்கும் வெயிலடித்துக் கொண்டிருந்தாலும், எங்கள் விளையாட்டில் அதையும் தாண்டிய உக்கிரம் இருக்கும். இப்போது காட்டும் உக்கிரமெல்லாம்  Prince Of Persia-வில் எதிரியை வெட்டுவதிலும்,Call Of Duty-யில் எதிரியைச் சுடுவதிலும்தான்  இருக்கிறது.&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-6675691556522529382?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/6675691556522529382/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=6675691556522529382' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6675691556522529382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6675691556522529382'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/02/blog-post_22.html' title='காலங்களில் அது வசந்தம்!'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-5623901420414498702</id><published>2011-02-14T08:54:00.004+05:30</published><updated>2011-02-14T09:00:52.021+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதலி'/><title type='text'>ஜாரி ஜோக்கிங்.</title><content type='html'>கல்லூரி இரண்டாம் வருடமென்று நினைக்கிறேன்.அப்போது எனக்கு தூணுக்குச் சேலை கட்டி வைத்தாலும் தொட்டுப் பார்க்கும் வயது.இப்போதும்!&lt;br /&gt;&lt;br /&gt;வீடுகளில் மொட்டை மாடிகள் அமைப்பதே, என் போன்ற ஜீவன்கள் சைட்டடிப்பதற்காகவே என்ற கொள்கையை கொண்டிருந்தேன். கொள்கை ரீதியாக, என்னை ஆதரித்த நண்பர்கள் மூவர் என்னுடன் சேர்ந்திருந்தனர்."குகனோடு ஐவரானோம்" என்பதைப் போல, அவர்களோடு நான் நால்வரானேன். என் வீட்டு மொட்டைமாடியின் வசம் சரிப்படாததால், சைட்டடிக்கும் வைபவத்தைச் செவ்வனே செய்வதற்காக நண்பன் வீட்டு மாடியைத் தேர்ந்தெடுத்தோம். கல்லூரி முடிந்த பிறகு,படித்துக் கொண்டிருப்பதாகக் கூறி எங்கள் ஜமா அங்குதான் ஆரம்பிக்கும். அருகிலிருக்கும் பெண்களுக்கான பள்ளிகளை எங்கள் கல்லூரி நேரத்திற்கு முன்பாகவே அவிழ்த்து விட்டுவிடும் அபாயம் இருந்ததால், சமயங்களில் இறுதிப் பாடவேளைக்கு முன்பே நாங்கள்  எஸ்ஸாகி விடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் பழங்கா நத்தம் இராஜா திரையரங்கு சுவரொட்டிகளை எங்கள் கல்லூரிச் சுவர் முழுவதும் ஒட்டியிருப்பார்கள். அவற்றை ரசித்துக் கொண்டே நடந்தால், கால் வலி தெரியாது. மக்கள் மத்தியில் மாற்றுக்  கலாச்சாரத்தைப் பயிற்றுவிக்கும் அவ்வகையிலான சுவரொட்டிகளைப் பற்றி இங்கே பேசினால், இது வயது வந்தோர்க்கு மட்டுமேயான‌ பதிவாக மாறி விடும் வாய்ப்புண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பனுடைய அம்மா எங்களுக்கு காஃபி கொண்டு வரும் சமயம் மட்டும் நல்ல பிள்ளைகளைப் போல, புத்தகம் எங்கள் கையிலிருக்கும். சில நேரங்களில் புத்தகத்துக்குள்ளும் புத்தகம் இருக்கும்.பாவம் அம்மாக்கள்! இங்கிருந்துதான் அந்த வரலாற்றுப் புகழ்வாய்ந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பன் வீட்டிற்கு எதிரில் இருந்த வீட்டில், டியூசன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு அம்மணி. மதுரைக் கல்லூரியில் பி.எஸ்.ஸிய்யோ எம்.எஸ்.ஸியோ படிப்பு. எப்படிப் பார்த்தாலும் அவருடைய வயது 25 ஐத் தாண்டாது. டியூசன் எடுப்பதாக இருந்தாலே, வீட்டின் மொட்டை மாடிகளில் எடுப்பதுதானே தமிழ் மரபு. அங்கும் அப்படியே! இவன் வீட்டு மாடியிலிருந்து பார்த்தால், டியூசன் எடுக்கும் மாடி தெள்ளத் தெளிவாகத் தெரியும். அவள் நம் கதை நாயகியல்ல. அவளிடம் படிக்கும் ஒரு கருவாச்சியும் அவளின் தங்கச்சியும்தான் கதை நாயகிகள். அவர்கள் முறையே, பன்னிரண்டாம் வகுப்பும் பத்தாம் வகுப்பும் படித்து வந்தனர். மூத்தவள் கருப்புதான் என்றாலும் கொஞ்சம் களையானவள். இளையவள் கொஞ்சம் மாநிறம்.ஆக மொத்தத்தில், இது ஒரு டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்!&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் நால்வரும், படிப்பதைப் போல பாவனை செய்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே, அங்கே நோட்டம் விட்டுக் கொண்டிருப்போம். நாங்கள் பார்ப்பதை யாருமே கவனித்துக் கொள்ளாத நிலையில்தான், அவர்களிருவரும் கவனிக்கத் தொடங்கியிருந்தனர். எங்களுக்குள் சஹாராப் பாலைவனத்தில் சாரல் தூவிய குதூகலம் பிடித்திருந்தது. நாங்கள் கையை ஆட்டினால், பதிலுக்கு அங்கிருந்து கையாட்டுதல் தொடரும். அப்போதுதான் செல்ஃபோன் அறிமுகமாகியிருந்த காலம். முத்தவள் செல்ஃபோன் வைத்திருந்தாள். நாங்களோ வறுமையின் கோரப் பிடியில் சிக்கியிருந்ததால், எங்களிடம் அவளின் நம்பர் மட்டும்தான் சிக்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போக்கத்தவனுக்கு போற இடமெல்லாம் பொங்கச்சோறு என்ற முதுமொழிக்கேற்ப, அவர்களை தொடர்பு கொள்ள ஒரு புது உத்தியைக் கையாண்டோம். கலைஞ‌ர்தான் கைகொடுத்தார். அதாவது கடிதப் போக்குவரத்து.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்ல வேண்டிய விஷயத்தை, ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதி, அதை உருண்டையாக உருட்டி, கிட்டத்தட்ட க‌கசக்கி அவள் வீட்டு முன்புறம் நின்றிருக்கும் டூவிலரின் (எம்.80) சீட்டில் வைத்து விடுவது அல்லது அவள் வீட்டு வாசற்படிக்கு நேராக போட்டு விடுவது. பேப்பர் கசங்கியிருப்பதால், யாருக்கும் சந்தேகம் வராது. இவ்வாறாக தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில், எங்கள் நால்வரில் ஒருவன் மட்டும், "மாப்ள, அவ மேல நான் சின்சியரா இருக்கேன்டா" என்றான். இது நாள் வரை பங்காளி என்றழைத்தவன் திடீரென்று மாப்ள என்றழைத்த போதுதான், நிலைமையின் தீவிரம் உறைத்தது.அவன் இராமனாக நாங்கள் அனுமார்களாகத் துவங்கியிருந்தோம்.இதற்கிடையில் கடிதப் போக்குவரத்தும் தொடர்ந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில்தான், காதலிப்பதாகச் சொன்ன நண்பனின் பிறந்த நாள் வந்தது. என்ன ட்ரீட்..? என்பது மிகப் பெரிய கேள்வியாக எங்கள் மனதில் உருப் பெற்றிருந்தது.வல்லவன் படம் அன்றுதான் ரிலீஸ்.படத்திற்கு அவள்களையும் அழைக்கப் போவதாக திட்டம்.இடம் சினிப்பிரியா தியேட்டர் என்பதும் முடிவாகியிருந்தது. கருவாச்சியைத்தான் மாப்ள லவ்வுறான்; அவ தங்க்ச்சி ஃப்ரீதான் என்ற நினைப்பில் நாங்கள் மூவரும் நூல்கண்டு சகிதமாய் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்ததை இங்கே பதிவு செய்ய விழைகிறேன். காகிதத்தில் எழுதி, அதைக் கசக்கி அவள் வீட்டு முன்பாக போட்டு விட்டு வந்தோம்!&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவ நாள் அக்டோபர் 23.சம்பவ இடம் சினிப்பிரியா தியேட்டர். முற்பிறவியில் சிம்பு செய்த புண்ணியமோ என்னவோ "வல்ல‌வன்" படத்திற்கு பயங்கரமான கூட்டம். கலை ரசிகர்கள் தியேட்டர் கவுண்ட்டரையும் தாண்டி ரோட்டை மறித்து நின்று கொண்டிருந்தனர். தியேட்டர் மேனேஜர், சட்டத்தைக் கண்ணாக மதிப்பவர் போலும்.கூட்டத்தைக் கட்டுப்படுத்த இரண்டு போலிஸாரை அழைத்திருந்தார்.அவர்களும் லட்டிகள் சகிதமாக கடமையை நிறைவேற்றக் காத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;டிக்கெட்டு எடுக்கும் பொருப்பு என்னைச் சார்ந்திருந்தது. நான் வரிசையில் நின்றிருக்க, கூட்டத்தினுள் சலசலப்பு. ஏதோ ஒரு புண்ணியாத்மா வரிசையினிடையில் நுழைய முயற்சி செய்து களேபரமாகியிருக்கிறது. பொறுமையை இழந்த காவலர், லட்டியைக் கூட்டத்தினுள் சர்ர்ர்ரென்று செலுத்த, மிகச் சரியாக அது என் தொடையில் இடியென இறங்கியது. நல்ல வேளையாக, அதை நான் முன்னரே அவதானித்து அருகிலிருந்தவரின் பையை எடுத்து தொடையில் வைத்தேன். அடி என்னவோ பையின் மேல் விழுந்தாலும், தொடை சிவந்து விட்டது. இப்படியாக, போலிஸிடம் பெற்ற‌ என் முதல் அடி வரலாற்றில் இடம் பெற்றது. நண்பனின் ஒவ்வொரு பிற்ந்த நாளன்றும் எனக்கு அந்த போலிஸ் அடி நினைவிற்கு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக அரும்பாடு பட்டு, டிக்கெட் எடுத்துக் காத்திருந்தோம். அவள்கள் படத்திற்கு வரவேயில்லை. ஆனால், எக்ஸ்ட்ராவாக எடுத்திருந்த இரண்டு டிக்கெட்களை என்ன செய்வது. அதை பிளாக்கில் விற்றோம். எல்லா வெற்றிக்குப் பின்னால் மட்டுமல்ல;சமூக விரோதங்களுக்குப் பின்னாலும் பெண்தான் இருக்கின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் முடிந்து, வீட்டுக்கு வந்ததும் அவள்கள் ஏன் படத்திற்கு வரவில்லை..? அவள்களிடம் செய்தி சரியாகப் போய்ச் சேர்ந்ததா..? என்று பார்ப்பதற்காக அந்த வீட்டுப் பக்கம் சென்றோம். நாங்கள் போட்ட காகிதம் அப்படியே அங்கேயே கிடந்தது. நண்பனுக்கு கண்ணீர் பொங்கி வந்தது.எனக்கும்தான்.கேவலம் ஒரு பொண்ணுக்காக என்னை போலிஸிடம் அடி வாங்க வைத்து விட்டானேயென்று!அதுவும் பாழாய்போன சிம்பு படத்திற்க்காக! மனதை நட்பின் பெயரால் தேற்றிக் கொண்டேன். நாளடைவில்,நண்பனின் இரண்டாவது காதல் எங்கள் சீனியர் சிவில் அக்காவின் மீது வர,இந்தக் கருவாச்சியினுடனான காதல் நீர்த்துப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் ஃபிளாஷ்பேக்!&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் குறிப்பிட்ட நண்பன் (கருவாச்சியைக் காதலித்தவன்) தற்சமயம் சென்னையில், மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.அண்மையில்,அழைத்திருந்தான.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;அந்த உரையாடல்.&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"மாப்ள, நம்ம கருவாச்சியை இங்கே சென்னைல‌ பார்த்தேன்டா..!"&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ம இல்லைடா, உன்னோட‌.."&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் எப்போவோ மறந்தாச்சுல..அவளை சென்னைலதான் கட்டிக் கொடுத்திருக்காங்களாம். புருஷனோடதான் பார்த்தேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"பேசினயா பங்காளி..?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ஹூம்" என்றவனின் குரல் கம்மியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கோ அவள் தங்கச்சியைப் பற்றி கேட்க எண்ணம்.கேட்டால்,கொலைவெறித் தாக்குதல் திண்ணம் என்பதால் கேட்காமலேயே விட்டுவிட்டேன்.ம்ம்..ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-5623901420414498702?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/5623901420414498702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=5623901420414498702' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/5623901420414498702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/5623901420414498702'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/02/blog-post_14.html' title='ஜாரி ஜோக்கிங்.'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-6045066103777440382</id><published>2011-02-09T09:15:00.001+05:30</published><updated>2011-02-09T09:17:32.045+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>திசைகாட்டிப் பறவை -‍ பேயோன்.</title><content type='html'>எப்படிப் பார்த்தாலும் இம்மாதிரியான ஒரு புத்தகம், இதுவரை தமிழில் வந்ததேயில்லை. இரட்டை அர்த்தமாக எடுத்துக் கொண்டாலும் அதுவே உண்மை. சமகாலச் சம்பவங்களை சமச்சீராகக் குறுக்குவெட்டி, பேயோன் பரிமாறும் பாங்கானது மஹா சிவராத்திரி காலங்களில் பரிமாறப்படும் பாங்கை விடச் சிறந்ததாக உள்ளது. பேயோனின் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்படப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திசைகாட்டிப் பறவை குறித்த மதிப்புரைகளிலேயே, இதுதான் ஆகச் சிறந்தது. ஒரு புத்தகத்திற்கு மதிப்புரை எழுத, அப்புத்தகத்தை வாசித்திருக்க வேண்டும் என்ற அடிப்படை விதியையே,  ராஜுவின் மதிப்புரை தகர்க்கிறது. -இந்த மதிப்புரைக்காக பதிவர்.ராஜூவே எழுதிய முன்னுரையிலிருந்து...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-&lt;b&gt;♠ராஜூ♠&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/773445988286347827-6045066103777440382?l=tucklasssu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tucklasssu.blogspot.com/feeds/6045066103777440382/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=773445988286347827&amp;postID=6045066103777440382' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6045066103777440382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/773445988286347827/posts/default/6045066103777440382'/><link rel='alternate' type='text/html' href='http://tucklasssu.blogspot.com/2011/02/blog-post_09.html' title='திசைகாட்டிப் பறவை -‍ பேயோன்.'/><author><name>♠ ராஜு ♠</name><uri>http://www.blogger.com/profile/03407237444631355410</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-773445988286347827.post-2283280590897048653</id><published>2011-02-03T12:43:00.006+05:30</published><updated>2011-02-03T14:02:50.665+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொகுப்புப்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='twitter'/><title type='text'>நெருப்பாய் இருப்பாய்!</title><content type='html'>சுறா,வேட்டைக்காரன் முதலான‌ விஜய் அவர்களின் உரத்த படையல்களை நுணுக்கமாக அணுகிய என்னால், அவரின் அண்மையப் படைப்பான காவலனைப் பார்க்கக் கூட முடியவில்லை. கடினப்பட்டு கடமையை ஆற்றிவைத்தேன். சோக‌ம் அப்பிக் கொண்டது. சக அக்கினிக் குஞ்சு ஒருவருடன் வேறொரு அலுவலாக, அளவளாவியதின் ஓரங்கமாக, காதல் காட்சிகளில், விஜயானவர் காலரா வந்த கோழி போலுள்ளார் என்றாரவர். ஏறக்குறைய அதே கருத்தை நான் அசின் அம்மையாருக்கு் எண்ணியிருந்தேன். எம்.எஸ். பாஸ்கரின் கெட்டப்பைப் பற்றிச் சொன்னால், மதுரையின் உக்கிர இலக்கிய வாசகர், கண்ணை உருட்டிக் கொண்டு, "கபர்தார்" என்கிறார்.  சோழ காலத்து யாழி செய்த பாவமோ என்னவோ எனக்கு, நீபா அவர்களை மிக‌ப் பிடித்திருந்தது. அதன் நீட்சியாக யூடியூபைச் சரணாகதியடைந்ததில், மிக மிகப் பிடித்து விட்டது. தமிழக இளைஞர்களைப் பீடித்திருக்கும் ஆன்டி மனப்பான்மைப் பிணி நீங்கி இன்புற்றிருக்க வையமே! என்று சேலம் புகழ் சித்த வைத்தியரை வேண்டிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;************&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதோ வாங்கிய,  இராஜேஷ் குமார் நாவல் ஒன்று கண்ணில் சிக்கியது. தலைப்பு, "இன்னும் வேகமாக இயங்கு விவேக்"என்பது போலானதென நினைக்கிறேன். அவரைத் தீவிரமாக வாசித்ததை நினைத்துக் கொண்டேன். அவருடைய சக‌ஹிருதயர்களான, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோரெல்லாம் சினிமாவுக்கு வந்து விட்டனர். இவர் மட்டும் ஏன் இன்னும் இயக்குநர்களின் கண்ணில் படவில்லை..? அன்னார் கலைமாமணி வாங்கியிருக்கின்றார்.வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்! சொல்லமறந்துவிட்டேன். அவருடைய நாவல்களில் விவேக்,விஷ்ணு போன்ற சிற்சில வார்த்தைகளை கணேஷ், வசந்த் போன்ற சிற்சிலவற்றால் நிரப்பினால் கதைகள் இன்னும் சுவாரசியப்படலாமென்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;************&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் திருவிழா. ஜனநாயகத் திருவிழா. அரசியல் களேபரங்கள் களை கட்டிக் கொண்டிருக்கிறது. பிராயச்சித்தம் என்ற போர்வையில், ஆ.ராசாவின் கைது விவகாரம்  கொஞ்சம் சலசலப்பேற்படுத்துமென தெரிகிறது. மருத்துவக் குடிதாங்கி பாடு, கலைஞரின் அணுக்கிரகத்தால் கொண்டாட்டமாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பிழைப்பிற்கு கௌரவமாக கிளினிக் வச்சு நடத்தியிருக்கலாம். விஜயகாந்த். வீட்டு குளியறையில் நீர் வரவில்லையென்றாலே அறிக்கை விடுபவர் அதிசயமாக‌ அமைதி காக்கிறார். அனேகமாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்க வேண்டும். சீமான் எப்படியும் சமஉ ஆகிவிடுவதென்ற முனைப்பிலிருக்கிறார் போலும். யார் யார் என்னென்ன பிரயத்தனங்கள் செய்தாலும் கார்த்திக் முத்துராமன், சரத்குமார், டி.ராஜேந்தர் இவர்க்ள் மூவரில் யாரவது ஒருவர்தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே என் அவா. இம்மூவர் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் போற்றுதலுக்குரியதே!&lt;br /&gt;&lt;br /&gt;************&lt;br /&gt;&lt;br /&gt;சமயங்களில், பிரச்சனைகளைக் களைய முன்னெடுக்கும் முறை அரை நிர்வாணப் போராட்டம், சிறை நிரப்புப் போராட்டம், வெள்ளை மாளிகை நோக்கி மூத்திரமடித்தல், குடும்ப அட்டைகளைத் திருப்பிக் கொடுத்தல் போன்றவைகளைப் போல, நூதனமாக அமைந்து விடுவது உண்டு. அவ்வகையிலானதொரு போராட்டம்தான் சமூக வலை தளமான ட்விட்டரில் நடந்து வருகிறது.  தமிழக (இந்திய?) மீனவப் படுகொலைகளுக்கான எதிர்ப்புக் குரலாக வலுத்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிரச்சனைக்கு தமிழ்ப் பதிவர்கள் செய்து வரும் முயற்சிகளை அறியும் போது, பெருமைப் படுகிறேன். நீங்களும் உங்களால் முடிந்த முயற்சிகளை முன்னெடுங்கள்.&lt;a href="http://www.petitiononline.com/TNfisher/petition.html"&gt;இந்த கவன ஈர்ப்பு மனுவில் கையொப்பமிடுங்கள்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த&lt;br /&gt;வகுத்தலும் வல்லது அரசு&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இக்குறளில்,காத்தலும் என்பதை அழுத்திப்படியுங்கள்.உத்திரப் பிரதேசம்,மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல பிரதேசங்கள் இந்தியாவில் இருக்க, தமிழகத்தை மட்டும் பிற தேசமாக்கும் அநியாயத்தைக் கண்டியுங்கள்.இன்று கடலில் நடக்கும் இப்பாதகம் நாளை கரையில் நமக்கும் நடக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt
